AimShreemHreem - Secret of Successful Peopl

AimShreemHreem - Secret of Successful Peopl
Click Here

Thursday 29 December 2016

Mudras in Buddhism

  • Thumb. Represented by the earth element and the planet Saturn, the thumb corresponds to the organs Stomach, Spleen and mouth. It is connected to the Yi (意), or the intellect, and its energy influences our clarity.
  • Index finger. Represented by the wood element and the planet Jupiter, the index finger corresponds to the organs Liver, Gall Bladder and eyes. It connected to the Hun(魂), or the ethereal soul, and its energy influences our sensitivity.
  • Middle finger. Represented by the fire element and the planet Mars, the middle finger corresponds to the organs Heart, Small Intestine and the tongue. It connected to the Shen (神), or the aggregate soul and its energy influences our creativity.
  • Ring finger. Represented by the metal element and the planet Venus, the ring finger corresponds to the organs Lung, Large Intestine and nose. It connected to the Po (魄), or the corporeal soul and its energy influences our intuition.
  • Little finger. Represented by the water element and the planet Mercury, the little finger corresponds to the organs Kidney, Bladder and ears. It connected to the Zhi (志), or the will and its energy influences our spontaneity.

Saturday 24 December 2016

வாசி

கேள்வி 
வாசி யோகத்தில் ; இரண்டு நாசி சுவாசம் , இடது நாசி சுவாசம் வலது நாசி சுவாசம் ,  ஒருநாசியில் உள்வாங்கி மறுநாசியில் வெளியிடல்  ஆகியவை ஏன் செய்ய வேண்டும் ?
 நாடி சுத்தி 
, பிராணாயாமம் வாசி யோகம் , வித்தியாசம் என்ன . ?
பதில் 
நாடிகள் என்பது சக்தி ஓட்ட பாதைகள்.  நமது உடலில்  72000  நாடிகள் செயல் படுகிண்றன. 

இவை பத்து பிரதான நாடிகள் மூலம் கட்டு படுத்த படுகின்றன .. இந்த பத்து நாடிகளை மூன்று அதி  முக்கிய நாடிகள் கட்டுபடுத்துகின்றன .  அவை இடகலை பிங்கலை சுழிமுனை அல்லது குரு நாடி. அவற்றுள் சுழிமுனை நாடியை வாசி யோகம் மூலம் நாம் உருவாக்குகிறோம் . 

இடகலை பிங்கலை  ஆகிய நாடிகள்  நமது இடது நாசி  மற்றும் வலது நாசி துவாரம் வழி  இடதுபக்க செயல்பாடு வலது பக்க செயல் பாடு என  பிரித்து செயல்படுகின்றன .. ஆயினும்   இடகலை என்ற சந்ரகலை 16  நாத கலை சக்தி கொண்டது .   பிங்கலை என்ற  சூரிய நாடி 12 விந்து கலை சக்தி கொண்டது .இதனால் நாத உயிர்சக்தி (positive life energy) மற்றும் விந்து உயிர் சக்தி ( negative life energy )  சமநிலை அடையவில்லை.இதற்காக சுழிமுனை என்ற நாடியை வாசி யோகத்தில் உருவாக்குகிறோம் . இதில் தாரக கலை என்ற கலை சக்தி  (கிடைக்கும் )பெறும் பலம் கொண்டது . . இதனால் இடகலை பிங்கலை சமநிலை பெற்று உடல் இளமையுடன்  அழியாமல்  இருக்கும் .இந்த பிரபன்ச்சத்தில் இருந்து 32 கலை  பெறப்படுகிறது .  இந்த உயிர் சக்தி நமது உடல் முழுவதும் பரவி உடலில் உருவாகும் 64 கலை சக்தியுடன் சேர்ந்து 96 கலை சக்தி உருவாக்கும் . இது அளப்பறி சக்தி . நிலை . இதுவே அணைத்து அபூர்வ சக்திகளுக்கும்  சித்திகளுக்கும் அடிப்படை .. 
.  
சாதரணமாக நாம் இரண்டு நாசியில் சுவாசிக்கிறோம் 
அப்பொழுது நாத கலை !விந்து கலை 12 என்ற வித்தியாசத்தால் 4  கலை வீணாகிறது  இதை சமநிலை படுத்த ஒருநாசியில் சுவாசம் அடைபட்டு நிகழும் .அப்பொழுது குறைவான சக்தியே பெறப்படும் . உயர்ந்த சக்தி பெற வாசி யோகா ஆரம்பத்தில் மூச்சை நெறிப்படுத்த துவங்குகிறோம் . முதலில் காலத்தை நெறிபடுத்தி இரண்டு நாசியிலும் சுவாசித்து  வாசி உருவாக்குகிறோம்இவ்விதம் .வாசிபழகுதல்  துயர் தராது 

அதன் பின் நாடிகளை நெறிபடுத்தி வாசியோகம் பழக வேண்டும்.அதற்க்கு 

  • முதலில் இரண்டு நாசியிலும் சுவாசித்து வாசிபழகுதல் வேண்டும்.
  • அதன்  பிறகு வலது நாசியில் யில் வாசி பழக வேண்டும் 
  • அதன்பின் இடது நாசியில் வாசி பழக வேண்டும்  . 
இவை நாடிசுத்தி எனப்படும் .
  • அதன் பின்  வலது நாசியில்  உள்வாங்கி கும்பித்து  இடது வெளியிடல்  
  • அதன் பின்  இடது நாசியில்  உள்வாங்கி கும்பித்து   வலது வெளியிடல்  என வாசி பழகவேண்டும் .
  
இது பிராணயாமம்

 
இப்படி  படிப்படியாக நாசியை பயன்படுத்தி வாசி யோகம்  பழக வேண்டும் .
 அதன் பின் ஆதாரதளங்களில் பிராணாயாமம் செய்வது வாசியோகம் 
பழக வேண்டும்   .

 
இதனால்  பிரபன்ச்சத்தில் பெறும் நாத மற்றும் விந்து சக்திகள் உடலில் நாத விந்து சக்திகளை உருவாக்கி . உடலில் சக்தி சம நிலை உருவாக்கும் . இவிதம்  படிப்படியாக நாடிகளை நெறிப்படுத்தி சக்தி சமநிலை பெறுவதால் மனம் அமைதிஆகி ஒருநிலைப்படும். உடல் உறுதி பெறும் 
.

இப்படி படிப்படியாக வாசி பழகாவிட்டால்  சக்தி சமநிலை கெடும் . 
மூச்சுப்பிடிப்பு மற்றும் துன்பங்கள் வரும் .  

இவ்விதம் படிப்படியாக வாசி பழகுவதால்  உடல் முழுவதும் சக்தி ஓட்டபாதை சீராகும் . அனைத்து அவயவங்களும் சக்தி பெரும் . இதனால் நோய்கள் தீரும். துன்பம் நேராமல் சக்தி பெறுகிறோம் .

Friday 23 December 2016

Hanuman Mantra to Control the Lust

Hanuman Mantra to Control the Lust -

Lord Hanuman is a true devotee of Lord Rama. He sacrificed all his life in the service of Lord Rama. He can help you to control the excessive urge of lust from you. Below is the mantra given for self control of sexual urge.

The mantra contains the word - 'kaam' and 'dahana' which means lust and burn respectively. The meaning of this mantra is - "I bow to Lord Hanuman who burns the urge of lust from devotees". You can pray to Lord Hanuman to control the sexual urge through this mantra. This mantra is given in both English and Devanagari for pronunciation purpose. You can use the embedded mantra audio to listen it.

Om kāma dahanāahya namaha

Thursday 22 December 2016

Agastiyar

Sitthar Name : Agastiyar
Tamil Month Of Birth : Markazhi
Tamil Birth Star : Aayilyam
Duration Of Life : 4-Yugas, 48 days
Place Of Samathi : Thiruvananthapuram
Guru : Shiva
Disciples : Bhogar, Babaji, Thiruvalluvar, Machamuni.
Contributions : Medicine, Kayakalpam, Tamil Grammar, Yoga.

பதினென் சித்தர்களில் மிக பிரபலமானவர் என்றால் அது அகத்தியர்தான்.தெய்வங்களுடனும், மன்னர்களுடனும் தொடர்பு படுத்தி அறியப்படும் சித்தர் இவர். சித்த வைத்தியத்தின் பிதாமகர்களில் இவர் முதன்மையானவர்.

பழந்தமிழ் பாடல்களிலும் சரி,தேவாரம் முதலான பக்தி இலக்கியங்களிலும், வேதங்களிலும் இவர் பற்றிய பல குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. வேதகாலத்து சப்த ரிஷிகளில் ஒருவராகவும் அகத்தியர் போற்றப் படுகிறார். இவை போதாதென அகத்தியர் குறித்த எண்ணற்ற செவிவழி கதைகளும் வழங்கப் படுகின்றன.

இல்லறத்தில் துறவறத்தை கடைப்பிடித்தவர் அகத்தியர்.மனைவியின் பெயர் லோப முத்திரை, மகன் பெயர் சங்கரன்.

இவர் எழுதிய சமரச ஞானம் என்ற நூலில் உடம்பில் உள்ள முக்கிய நரம்பு முடிச்சுக்கள் பற்றி மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.அத்துடன் இவர் எழுதிய அகத்தியர் ஐந்து சாத்திரம், அகத்தியர் கிரியை நூல், அகத்தியர் அட்டமாசித்து, அகத்தியர் வைத்தியரத்னசுருக்கம், அகத்தியர் வாகட வெண்பா, அகத்தியர் வைத்திய கௌமி, வைத்திய ரத்னாகரம், வைத்தியக் கண்ணாடி, வைத்தியம் 1500, வைத்தியம் 4600, செந்தூரன் 300, மணி 400, வைத்திய சிந்தாமணி, கரிசில்பச்யம், நாடி சாஸ்திரப் பசானி, பஸ்மம்200, வைத்திய நூல்கள் பெருந்திரட்டு,சிவசாலம், சக்திசாலம், சண்முக சாலம், ஆறேழுத்து அந்தாதி, கர்மவியாபகம், விதி நூன் மூவகை காண்டம், அகத்தியர் பூஜா விதி, அகத்தியர் சூத்திரம் 30, அகத்தியர் ஞானம் என்ற நூல்கள் முக்கியமானவையாக போற்றப் படுகிறது.

இத்துடன் "அகத்தியம்" என்னும் ஐந்திலக்கணமும், அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி நூலும் இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது.

அகத்தியர் அனந்த சயனம் என்ற திருவனந்த புரத்தில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது

Tuesday 20 December 2016

சித்தர்கள் என்பவர் யார் தொடர்ச்சி.

சித்தர்கள் என்பவர் யார் தொடர்ச்சி
.....
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.
அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால், மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு, மாற்றுகிறார்கள் என்பது பொருள். அதன் பின் அம்மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். ஆனால் ஒன்று. அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் வேண்டியது நல்ல தகுதி. தகுதியற்றோருக்கும், நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள். 
சித்தர்களைத் தியானித்தால், அவர்களின் திருவருள் கிடைத்தால், அவர்கள் நமக்கு குருமுகமாக உபதேசித்தால்… கீழ்கண்ட சந்தேகங்களுக்குத் தெளிவான விடை கிடைக்கும்.  சராசரி மனிதனின் நிலையும், இறைநிலை நோக்கி உயரும்.
"ஆத்மா என்பது தான் என்ன? மனித உடலில் அதன் இருப்பிடம் யாது? மனிதன் ஏன் பிறந்து, இறந்து மீண்டும் பிறக்க வேண்டும்? ஒவ்வொரு மனிதனையும் அவனை அறியாமலே ஆட்டி வைக்கும் சக்தி எது? தியானம் என்பது என்ன? ஏன் அதனைச் செய்ய வேண்டும்? ஏழு உலகங்களுக்கும், மனித உடலின் ஏழு சக்கரங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? கனவுகள், ஆவிகள், தேவதைகள் இவற்றிற்கெல்லாம் உள்ள  தொடர்பு என்ன? மனிதன் எப்படித் தெய்வநிலைக்கு உயர்வது?… தூல உடல், சூக்கும உடல், காரண உடல், அவற்றின் பயணம்., கர்மவினையை வெல்வது எப்படி?.. "
- இது போன்ற சாதாரணமாக நம்மால் அறிந்து கொள்ள முடியாத கேள்விகளுக்கெல்லாம், விடைகளை சித்தர்கள் திருவருளால் உணரலாம்.

ஏனெனில், இந்த சித்தர்கள்… இறைவன் என்பவன் யார், அவனை அடையும் மார்க்கம் என்ன, பிறவித் துன்பத்திலிருந்து விடுபடுவது எப்படி, ப்ரம்மம் என்பது என்ன, இறப்பிற்குப் பின் மனிதன் என்னவாகின்றான், உலகிற்கு அடிப்படையாகவும், உயிர்களின் இயக்கத்திற்கு ஆதாரமாகவும் இருப்பது எது, உடல் தத்துவங்கள், உயிர்க் கூறுகள் அவற்றின் இரகசியங்கள், இறவாமல் இருக்க, உணவு உண்ணாமல் இருக்க என்ன வழி, இரசவாதம், காயகல்பம், முப்பூ, மூலிகை இரகசியங்கள், அஷ்டமாசித்திகள், யோகம், ஞானம், மந்திரம், தந்திரம், சோதிடம், தன்னறிவு, ஜீவன்முக்தி, பரவாழ்க்கை, தேவதைகள் என அனைத்தினையும் பல ஆண்டுகள் தவம் செய்து, பலபிறவிகள் எடுத்து, கூடுவிட்டுக் கூடு பாய்ந்து என  பலவற்றை அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தவர்கள். உணர்ந்தவர்கள்.
சொல்லப்போனால், சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள்.
உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம்.
எனவே, சித்தர்கள் பாதத்தைச் சரணடைவோம். சீரும் சிறப்புமாய் வாழ்வோம்.

தொடரும். ........

"ஓம்" எனும் பிரணவ மந்திரத்தை வெறும்30 நிமிடங்கள் காதால் கேட்டாலே...

"ஓம்" எனும் பிரணவ மந்திரத்தை வெறும்30 நிமிடங்கள் காதால் கேட்டாலே...

உடலில் உயிர் வாயுவான ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறதாம்.

கரிமில வாயுவான கார்பன்-டை-ஆக்சைடுவின் அளவும் இரத்தத்தில் லேக்டிக் ஆசிட்டின் அளவும் குறைகிறதாம்.

கல்கத்தாவை சார்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி அன்வெஷா  அங்கே நடந்த அறிவியில் கண்காட்சியில் நிரூபித்து, விஞ்ஞானிகளை வாயடைக்க செய்துள்ளார்.

"ஓம்" எனும் மந்திரத்தை 30 நிமிடங்கள் கேட்டாலே இத்தனை பயன்கள் என்றால்..

அதை தினமும் 30 நிமிடங்கள் வெறும் வயிற்றில் உச்சரித்தால் இன்னும் எத்தனை எத்தனை பயன்கள் தருமோ?? நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்லர்.

ஓம் !! ஓம் !! ஓம் !!

Power of OM / AUM

Monday 19 December 2016

சித்த மருத்துவம்


சித்த மருத்துவம்..!

சித்த மருத்துவம் சித்தர்களால் தமிழில் தரப்பட்ட மருத்துவம் என்பதில் உலகில் யாருக்கும் மாற்றுக்கருத்துக் கிடையாது. வேற்றுமொழி பேசும் மக்கள் தம்மொழியில் மொழிபெயரத்து சித்தமருத்துவத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழர்கள் சித்த மருத்துவத்திற்கும், சித்த அறிவியலுக்கும் ஏனோ கொடுப்பது மிகக் குறைவே. 

குறிப்பாக மலையாளிகளும், சிங்களவர்களும் சித்த மருத்துவத்தையும், ஆயுர்வேதத்தையும் மிகவும் மதித்துப் போற்றுகின்றனர். அதனால் அவர்கள் ஆரோக்கியமாகவும், நோய் நொடியின்றியும் வாழ்வதாகத் தரவொன்று தெரிவிக்கின்றது. சித்தர்கள் மானிடர் அனைவருக்குமாக இந்த அரிய மருத்தவத்தினைத் தந்தனர். ஆனால், சித்த மருத்துவத்தின் மூலமொழியைப் பேசும் தமிழர் நாம் அந்த அறிவை இழந்து அவதிப்படுகிறோமே என்பது வேதனையான உண்மை.

சித்த நிலைக்கு உயர

ஆக, முதலில் தன் மனதை அறிந்து, பின் தன்னை அறிந்து, பின் இறையை அறிந்து இறுதியில் சித்த நிலைக்கு உயரலாம் என்பது தெளிவு.
மிகக் கடினமான இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது? வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது? யார் உதவுவார்கள்? ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி.  சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ்வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி?. யார் உதவி செய்வார்கள்?
இது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே!
சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது. பூனைக்கண்ணர் எகிப்து/இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. போகர் சீனர் என்று சொல்லப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது. ரோம ரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள்,

தொடரும் .......

சித்தர்கள் என்பவர்கள் யார்?.

சித்தர்கள் என்பவர்கள் யார்?. அவர்கள்து நோக்கம் என்ன? நாமும் சித்தராக முடியுமா? இது அவ்வப்பொழுது சிலருக்குத் தோன்றும் கேள்விகள் தான். ஆமாம், சித்தர்கள் என்பவர்கள் யார்? சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறைஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.
மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.

அகத்தியர்
சித்தராவதற்கு முதற்படி தன்னையும், இந்த உலகையும், இயற்கையையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதாகும். இதைத் தான் திருமூலரும்…
 தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
 தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
 தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
 தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!
என்கிறார். இது முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டியதாகும்.
அகத்தியரும்..
  மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா;
                              …………….
  மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே!
என்கிறார்.

Friday 16 December 2016

Lord Sun Soorya Beej Mantra

"Only  Lord Surya (Sun)in Visible God to Living & Non Living every moment. Must manifest HIS DIVINITY by Chanting Mantras."

"Benefits of  Surya Beej Mantra"

    This powerful Surya Beej mantra connects you with the higher frequencies of Lord Sun.
    This Surya Beej mantra has the power to provide you perfect health, abundance and fame.
    This Surya Beej mantra improves your eyesight and removes all diseases related to eyes.
    Divine grace of Lord Sun is surely obtained.

How to chant this Surya Beej Mantra
Start from Sunday.
Chant 6 Rosary of this Surya Beej mantra for 41 days for better results.

"Surya Beej Mantra:

"Om Hraam Hreem Hraum Sah Suryay Namah:"

"Surya Namaskar (Sun Salutation) is a form of worshiping God by meditating on the Sun, the energy provider.

"Surya Namaskar is useful in achieving concentration. Surya Namaskara is always performed in the open air, facing the Sun, at sunrise.

"Surya Namaskar is not just a physical exercise. For each of the postures, there is a particular breathing pattern to be followed. With each posture, a particular mantra - name of the Sun is chanted. Surya Namaskar Mantras or Mantras for Surya Namaskara are given below:

"Om Mitraaya Namah."
"Om Ravaye Namah."
"Om Sooryaya Namah."
"Om Bhaanave Namah."
"Om Khagaaya Namah."
"Om Pooshne Namah."
"Om Hiranya Garbhaaya Namah."
"Om Mareechaye Namah."
Om Aadityaaya Namah."
"Om Savitre Namah."
"Om Arkaaya Namah."
"Om Bhaaskaraya Namah."
"Om Sri Savitra Soorya Narayanaaya Namah."

Friday 2 December 2016

Hindu Festival 2017

*Hindu_Festivals_2017*
_Sun 8 Jan_ – *Vaikunda Ekadesi*
_Sat 14 Jan_ – *Pongal*
_Thu 9 Feb_ – *Thaipusam*
_Fri 24 Feb_ – *Maha Sivarathri*
_Sat 11 Mar_– *Maasi Maagam*
_Wed 29 Mar_ – *Ugadhi*
_5 Apr_– *Sri Rama Navami*
_Sun 9 Apr_ – *Panguni Uthiram*
_Fri 14 Apr_ -  *Tamil New Year / Vishu*
_Wed 10 May_ – *Chitra Pournami*
_Wed 7 Jun_ – *Vaikasi Visakam*
_Mon 17 Jul_ – *Aadi Begins*
_Wed 2 Aug_ – *Aadi Perukku*
_Fri 4 Aug_ – *Varalakshmi Virudham*
_Mon 14 Aug_ - *Sri Krishna Jayanti*
_Wed 16 Aug_ – *Aadi Ends*
_Fri 25 Aug_ -  *Vinayakar Chaturthi*
_Mon 4 Sep_  – *Onam*
_Sun 17 Sep_ –  *Puratasi Begins*
_Thu 21 Sep_ – *Navarathri Begins*
_Thu 28 Sep_ –  *Saraswathy Poojai*
_Tue 17 Oct_ – *Puratasi Ends*
_Wed 18 Oct_ – *Deepavali*
_Fri 20 Oct_ - *Kandha Sashti Begins*
_Wed 25 Oct_ – *Soora Samharam*
_Sat 2 Dec_ – *Thirukarthigai*
_Sat 16 Dec_ – *Margazhi Begins*
_Fri 29 Dec_ - *Vaikunda Ekadesi*

Wednesday 30 November 2016

Mantra to Attract Your Love Interest

Mantra to Attract Your Love Interest
 
Lord Kamadeva is the husband of Rati, who is the Goddess of Love. 

In order to invoke love from the person you are in love with, you need to chant the 'Kleem Mantra'

This mantra is said to be quite powerful in order to get love from the opposite gender. 

Here's the mantra:
 
"Om Namo Bhagvate Kamadevaye, Yasya Yasya Drishyo Bhavami, Yashch Yashch Mum Mukham Pachyati Tam Tam Mohyatu Swaha"

It is also evidence and proven track record for those whom garland / wear 13 mukhi rudraksha

Monday 28 November 2016

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குங்குமமும் விபூதியும் காந்தசக்தி மிக்கது

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குங்குமமும் விபூதியும் காந்தசக்தி மிக்கது என்கிறார் இங்கிலாந்து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர். இவர் ஒருமுறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கே அவருக்கு குங்கும பிரசாதம் கொடுத்தார்கள். அடுத்து, சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு சென்றபோது விபூதி தரப்பட்டது. இதை ஏன் இந்திய மக்கள் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள் என்பதை அறிய அவருக்கு ஆவல்.

உடனே, அதை பரிசோதனை செய்தார். அவற்றிலிருந்து காந்தசக்தி வெளிப்பட்டதை உணர்ந்தார். இது என் வாழ்வில் நான் கண்ட அதிசயம் எனதான் எழுதிய தி இன்னர் லைப் என்ற புத்தகத்தில் எழுதினார்.

இதை விட அதிசயம் ஒன்று உண்டு என்றும் அவர் சொல்கிறார். சில ஆண்டுகள் கழித்தபிறகு, அந்த குங்குமம், விபூதியை பரிசோதனை செய்தார். அப்போதும், முன்பு கண்ட அதே அளவு காந்தசக்தி சற்றும் குறையாமல் வெளிப்படுவது கண்டு அசந்து போனார். இப்படி ஓர் அதிசயத்தை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை என்று அவர் எழுதி வைத்திருக்கிறார்.

நாம், மீனாட்சி குங்குமத்தை கோயில் தூண்களில் கொட்டி வைத்து பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். இனிமேலாவது, அன்னையின் குங்குமத்தை அளவோடு வாங்கி, பூஜையறையில் பத்திரமாக வைப்போம். அன்னையின் அருட்கடாட்சம் என்று நிலைத்திருக்கச் செய்வோம்.

இச்செய்தியை கண்டிப்பாக பகிரவும்....

Friday 25 November 2016

திருச்செந்தூர் முருகன்

திருச்செந்தூர் முருகன் பெருமான் சண்முகநாதர் சூரபத்மனை சம்ஹாரம் செய்து விட்டு கடல் எல்லையில் பஞ்சலிங்கம்களை அமைத்து வழிபாடு செய்து தனக்கு ஏற்பட்ட ப்ரம்மஹத்தி சாபத்தை நிவர்த்தி செய்து கொண்டார் , இவர் வழிபாடு செய்த பஞ்சலிங்கத்தை தேவர்கள் இன்றும் வழிபடுவதாக நூல்கள் சொல்கிறது ,
இதற்காக இவர்கள் கோபுரத்தில் ஒரு சிறு துவரம் அமைத்து விண்ணில் இருந்து அதன் வழியாக உள்ளே வருகிறார்கள் என்றும் எத்தனை விதமாக மழை பொழிந்தாலும் ஒரு சொட்டு நீர் கூட உள்ளே வராது என்று கோவில் நூல்கள் சொல்கிறது ....

பெருமானின் உள் பிரகாரத்தை வலம் வரும் பொழுது இவர்களை காண முடியும் ......

Thursday 24 November 2016

Ramana Maharishi - quotes

Agathiar mantra

Aum Srim Aum Sarguru Patamay
Saaba Paaba Vimosanam
Rowga Ahungaara Durvimosanam
Sarva Deva Sagala Siddha Oli Rupam
Sarguruway Om Agasthiya Kirantha Kartaaya Nama

ஓம் ஸ்ரீம் ஓம்
சற்குரு பதமே
சாப பாவ விமோசனம்
ரோக அகங்கார துர்விமோசனம்
சர்வ தேவ சகல சித்த
ஓளி ரூபம்
சற்குருவே ஓம் அகஸ்திய
கிரந்த கர்தாய நம

By chanting thus and conducting prayers,
All shall gain Bliss (Yegantha Nilai),
By chanting this mantra,
Joy (Anandha Jyothi) shall rise in all and
Grace (Arul Jhothi) shall be seen and felt.

Wednesday 23 November 2016

Ramana Maharishi -why do we need to meditate ?

*A devotee asked Ramana Maharishi:*

"Why do we need to meditate?

I say it is "my mind" - then should it not listen to me and meditate by itself when I tell it to?

Why does it keep running outside all the time?"

*Ramana Maharishi kept silent at that time.*
 
At about the same time, a squirrel had given birth in the ashram, and unfortunately a few days later the mother squirrel got eaten by a cat. Ramana Maharishi took the job of taking care of the baby squirrels. He kept them inside a cage that was kept in the mediation hall. After a few days when everyone was sitting in the meditation hall, the same cat came inside. It so happened that the baby squirrels rushed out of the cage at the same time. Ramana Maharishi got up hurriedly, caught all the baby squirrels one by one and put them back in the cage and locked the door firmly shut.
 
He then turned to the devotee that had asked the above question and calmly said  - *"These poor little squirrels do not have the maturity to know the dangers of the outside world, that if it goes out, the cat will make a meal of them. When they get that maturity, they will go hide inside by themselves. Until they get the maturity, we have to keep putting them inside. It is the same thing with our mind. Our mind does not know that if it goes to the outside world, there is nothing but suffering. It keeps running out in ignorance. When it gets the maturity, it will go inside by itself. Until then, it is our job to put it inside with effort -which we do in meditation."*👌👌

Lord Bhairavar is Kaliyuga Dheivam

BHAIRAVAR
Lord Bhairavar is Kaliyuga Dheivam now where he is GOD that can solve all types of problems. There are eight types of Bhairavas and they are called Ashta Bhairavas. They are Asithanga Bhairavar(Gives Creative Ability), Guru Bhairavar(Divine Educator), Chanda Bhairavar(Gives incredible energy, cuts competition and rivals), Krodha Bhairavar(Gives You the Power to Take Massive Action) , Un...matta Bhairavar(Controls Negative Ego and Harmful Self Talk) , Kapala Bhairavar(Ends All Unrewarding Work and Action) , Bhishana Bhairavar(Obliterates Evil Spirits and Negativity) and Samhara Bhairavar(Complete Dissolution of Old Negative Karma).

If you are under this natchatiram: Punarpoosam, Visakam, Purattadhi
You can pray to Asithanga Bhairavar which is for the natchatiram above.
"Om Hreem Asithanga Bhairavar Namaha"
Pray facing to the East.

If you are under this natchatiram : Mirugasiridam, Chithirai, Avittam
You can pray to Chanda Bhairavar which is for the natchatiram above.
"Om Hreem Chanda Bhairavar Namaha"
Pray facing to the South.

If you are under this natchatiram: Rohini, Astham, Tiruvonam
You can pray to Krodha Bhairavar which is for the natchatiram above.
"Om Hreem Krodha Bhairavar Namaha"
Pray facing to the SouthWest.

If you are under this natchatiram: Barani, Pooram, Puradam
You can pray to Kapala Bhairavar which is for the natchatiram above.
"Om Hreem Kapala Bhairavar Namaha"
Pray facing to the NorthWest.

If you are under this natchatiram: Thiruvadhirai, Swathi, Sadayam, Aswini, Magam, Mulam
You can pray to Bhishana Bhairavar which is for the natchatiram above.
"Om Hreem Bhishana Bhairavar Namaha"
Pray facing to the NorthWest.

If you are under this natchatiram : Ayilyam, Kettai, Revathi
You can pray to Samhara Bhairavar which is for the natchatiram above.
"Om Hreem Samhara Bhairavar Namaha"
Pray facing to the Northeast.

Ok why i put a word "Pray facing to the" is because all this Bhairavar we cannot find here(malaysia) but they are the ruler and in charge for all the 8 main direction. So we can face towards the direction and offer our prayers.

Dear friends if you want to reduce the bad effect of SANISWARAN or your want to get relief from SANISWARAN no matter 7 1/2sani, asthama sani (2 1/2), arthama sani, jenna sani, sani dhasai or sani bukthi or 1,2,4,5,7,8,9 , Prayer to "Unmatha Bhairavar" Pray facing to the West. Om Hreem Unmantha Bhairavar Namaha.

" OM HREEM, VAARAAHI SAMETHAYA MAHA UNMATTHA BHAIRAVAYA HREEM OM SWAAHA "

Remember Lord Shaniswaran Bhagawan(Sishyen) student to Lord Bhairavar(Guru)

OM HREEM MAHABHAIRAVAYA NAMAHA

Ramana Maharishi Quote

The ordained controls the fate of the souls in accordance with their prarabhda karma. That which will not happen, will never happen, try as you may. That which will happen will definitely happen, try as you may to stop it. The best course is to remain silent.

- Ramana Maharshi 🙏🏼

Tuesday 22 November 2016

திருமந்திரப்பாடல் எண் 64.5.

                 ஓம் சிவாய நம
               திருச்சிற்றம்பலம்
 
எங்கும் சிவனே,எதிலும் சிவனே, எல்லாம் சிவனே. சிவன் ஒருவனே ஆதி அந்தம் எல்லாம் என் அப்பன் ஈசன் ஒருவனே.

                   திருச்சிற்றம்பலம்
 
 திருமந்திரப்பாடல் எண் 64.5.
**********************************

 திருமந்திரப்பாடல்
*********************

பாடல்:

மூல நாடி முகட்டல குச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள்
மேலை வாசல் வெளியுறக் கண்டபின்
காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே

பொழிப்புரை

மூலாதாரத்திலுள்ள நடுநாடியில் முக்கட்டு உண்டாம். விரிவான புருவநடுவின் உச்சியில் கண் நாக்கு மூக்குச் செவி என்னும் நான்கு வாயில்களும் ஒன்றுகூடும். அவற்றின் நடுவுள் திருவருள் நினைவுடன் இருப்பீர்களாயின் உச்சித்துளை வாயிலை வெளியுறக் காண்பீர்கள். அம் மேலைவாசலை வெளியுறக் கண்டவன் கனவிலும் காலன் வருவான் என்னும் நினைவு உண்டாகாது. சிவவொளிமுன் ஆணவவல்லிருள் மூளாமை இதற்கொப்பாகும். முக்கட்டு - படைப்போன் காப்போன் துடைப்போன் ஆகிய மூவரின் சுடர்உருவி. இவற்றை முறையே பிரமக்கிராந்தி, விட்டுணுக்கிராந்தி, உருத்திரக்கிராந்தி என்ப. இப்படிப் பாடங்கொள்வாரும் உண்டு. மேலைவாசல் - உச்சித்துளை வழி எனலுமாம்.
                 

Thirumanthiram பாடல் எண் :64.5

               திருச்சிற்றம்பலம்
இந்த நாள் தங்களுக்கு இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் ..!!

 ஓம் சிவாய நம
நமசிவாயஓம்

                    திருச்சிற்றம்பலம்

 

Sunday 6 November 2016

Hanuman Chalisa in Tamil

ரசன: துலஸீ தாஸ்

தோஹா
ஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ னிஜமன முகுர ஸுதாரி |
வரணௌ ரகுவர விமலயஶ ஜோ தாயக பலசாரி ||
புத்திஹீன தனுஜானிகை ஸுமிரௌ பவன குமார |
பல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஶ விகார் ||

த்யானம்
கோஷ்பதீக்றுத வாராஶிம் மஶகீக்றுத ராக்ஷஸம் |
ராமாயண மஹாமாலா ரத்னம் வம்தே அனிலாத்மஜம் ||
யத்ர யத்ர ரகுனாத கீர்தனம் தத்ர தத்ர க்றுதமஸ்தகாம்ஜலிம் |
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் னமத ராக்ஷஸாம்தகம் ||

சௌபாஈ
ஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர |
ஜய கபீஶ திஹு லோக உஜாகர || 1 ||

ராமதூத அதுலித பலதாமா |
அம்ஜனி புத்ர பவனஸுத னாமா || 2 ||

மஹாவீர விக்ரம பஜரங்கீ |
குமதி னிவார ஸுமதி கே ஸங்கீ ||3 ||

கம்சன வரண விராஜ ஸுவேஶா |
கானன கும்டல கும்சித கேஶா || 4 ||

ஹாதவஜ்ர ஔ த்வஜா விராஜை |
காம்தே மூம்ஜ ஜனேவூ ஸாஜை || 5||

ஶம்கர ஸுவன கேஸரீ னன்தன |
தேஜ ப்ரதாப மஹாஜக வன்தன || 6 ||

வித்யாவான குணீ அதி சாதுர |
ராம காஜ கரிவே கோ ஆதுர || 7 ||

ப்ரபு சரித்ர ஸுனிவே கோ ரஸியா |
ராமலகன ஸீதா மன பஸியா || 8||

ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹி திகாவா |
விகட ரூபதரி லம்க ஜராவா || 9 ||

பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே |
ராமசம்த்ர கே காஜ ஸம்வாரே || 10 ||

லாய ஸம்ஜீவன லகன ஜியாயே |
ஶ்ரீ ரகுவீர ஹரஷி உரலாயே || 11 ||

ரகுபதி கீன்ஹீ பஹுத படாயீ |
தும மம ப்ரிய பரதஹி ஸம பாயீ || 12 ||

ஸஹஸ வதன தும்ஹரோ யஶகாவை |
அஸ கஹி ஶ்ரீபதி கண்ட லகாவை || 13 ||

ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீஶா |
னாரத ஶாரத ஸஹித அஹீஶா || 14 ||

யம குபேர திகபால ஜஹாம் தே |
கவி கோவித கஹி ஸகே கஹாம் தே || 15 ||

தும உபகார ஸுக்ரீவஹி கீன்ஹா |
ராம மிலாய ராஜபத தீன்ஹா || 16 ||

தும்ஹரோ மன்த்ர விபீஷண மானா |
லம்கேஶ்வர பயே ஸப ஜக ஜானா || 17 ||

யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ |
லீல்யோ தாஹி மதுர பல ஜானூ || 18 ||

ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ |
ஜலதி லாம்கி கயே அசரஜ னாஹீ || 19 ||

துர்கம காஜ ஜகத கே ஜேதே |
ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே || 20 ||

ராம துஆரே தும ரகவாரே |
ஹோத ன ஆஜ்ஞா பினு பைஸாரே || 21 ||

ஸப ஸுக லஹை தும்ஹாரீ ஶரணா |
தும ரக்ஷக காஹூ கோ டர னா || 22 ||

ஆபன தேஜ தும்ஹாரோ ஆபை |
தீனோம் லோக ஹாம்க தே காம்பை || 23 ||

பூத பிஶாச னிகட னஹி ஆவை |
மஹவீர ஜப னாம ஸுனாவை || 24 ||

னாஸை ரோக ஹரை ஸப பீரா |
ஜபத னிரம்தர ஹனுமத வீரா || 25 ||

ஸம்கட ஸேம் ஹனுமான சுடாவை |
மன க்ரம வசன த்யான ஜோ லாவை || 26 ||

ஸப பர ராம தபஸ்வீ ராஜா |
தினகே காஜ ஸகல தும ஸாஜா || 27 ||

ஔர மனோரத ஜோ கோயி லாவை |
தாஸு அமித ஜீவன பல பாவை || 28 ||

சாரோ யுக பரிதாப தும்ஹாரா |
ஹை பரஸித்த ஜகத உஜியாரா || 29 ||

ஸாது ஸன்த கே தும ரகவாரே |
அஸுர னிகன்தன ராம துலாரே || 30 ||

அஷ்டஸித்தி னவ னிதி கே தாதா |
அஸ வர தீன்ஹ ஜானகீ மாதா || 31 ||

ராம ரஸாயன தும்ஹாரே பாஸா |
ஸாத ரஹோ ரகுபதி கே தாஸா || 32 ||

தும்ஹரே பஜன ராமகோ பாவை |
ஜன்ம ஜன்ம கே துக பிஸராவை || 33 ||

அம்த கால ரகுவர புரஜாயீ |
ஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாயீ || 34 ||

ஔர தேவதா சித்த ன தரயீ |
ஹனுமத ஸேயி ஸர்வ ஸுக கரயீ || 35 ||

ஸம்கட கடை மிடை ஸப பீரா |
ஜோ ஸுமிரை ஹனுமத பல வீரா || 36 ||

ஜை ஜை ஜை ஹனுமான கோஸாயீ |
க்றுபா கரோ குருதேவ கீ னாயீ || 37 ||

ஜோ ஶத வார பாட கர கோயீ |
சூடஹி பன்தி மஹா ஸுக ஹோயீ || 38 ||

ஜோ யஹ படை ஹனுமான சாலீஸா |
ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஶா || 39 ||

துலஸீதாஸ ஸதா ஹரி சேரா |
கீஜை னாத ஹ்றுதய மஹ டேரா || 40 ||

தோஹா
பவன தனய ஸங்கட ஹரண – மங்கள மூரதி ரூப் |
ராம லகன ஸீதா ஸஹித – ஹ்றுதய பஸஹு ஸுரபூப் ||
ஸியாவர ராமசன்த்ரகீ ஜய | பவனஸுத ஹனுமானகீ ஜய | போலோ பாயீ ஸப ஸன்தனகீ ஜய |

Wednesday 2 November 2016

பதினெட்டு சித்தர்களுக்கும் மூலமந்திரம்

பதினெட்டு சித்தர்களுக்கும் மூலமந்திரம் உள்ளது.

மூலமந்திரங்களை காலை மாலை தினமும் தியானித்தோமானால் நமது வாழ்வு வளம்பெற சித்தர்களின் ஆசி நிச்சயம் நமக்கு உண்டு..

சித்தர்களின் மூல மந்திரங்க்ள்

#நந்தீசர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!"

#அகத்தியர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!"

#திருமூலர் மூல மந்த்திரம்...

"ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!"

#போகர் மூல மந்திரம்...

"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"

#கோரக்கர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"

#தேரையர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"

#சுந்தரானந்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!"

#புலிப்பாணி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"

#பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"

#காக புசண்டர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!"

#இடைக்காடர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!"

#சட்டைமுனி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!"

#அகப்பேய் சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!"

#கொங்கணவர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"

#சிவவாக்கியர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"

#உரோமரிஷி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!"

#குதம்பை சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!"

#கருவூரார் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே"

Saturday 22 October 2016

மனித இயக்கத்தின் 7 ஆற்றல் சக்கரங்கள்

மனித இயக்கத்தின் 7 ஆற்றல் சக்கரங்கள்

1. மூலாதாரம்:- முதுகெலும்பின் அடிப்பாகத்தில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். அமைப்பில் நான்கு இதழ் தாமரை போல் சிவப்பு நிறத்தில் உள்ளது. உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது. உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது. சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

2. சுவாதிஷ்டானம்:- இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே ஆறு இதழ் தாமரை போல் ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ளது. பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. ஈகோவிற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது. மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை அடக்கி அறிகின்ற சக்தியும் இதிலிருந்து தொடர்கிறது. பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

3. மணிபூரகம்:- நாபி என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. தொப்புளுக்கு சற்று மேலே பத்து இதழ் தாமரை அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது. உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது. கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது. அதனால்தான் அதிர்ச்சியோ பய உணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து விடுகின்றன. கணையம், என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. மண்ணீரல், இரைப்பை ,கல்லீரல், பித்தப்பை, ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.

4. அனாகதம்:- இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் பன்னிரண்டு இதழ் தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் இருக்கிறது. அன்பு, பாசம், இரக்கம், சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும்.தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல்கள்,இரத்த ஓட்டம், ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.

5. விசுத்தி:- இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. இது பதினாறு இதழ்கள் கொண்ட தாமரையாக நீல நிறத்தில் இருக்கிறது. தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம். தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

6. ஆக்கினை:- இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்திருக்கிறது. தொலை உணர்தல் ( Telepathy ) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது. இதன் மூலம்தான் விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மீகக் கண் திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள்.பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.

7. தூரியம்:- இதற்கு சகஸ்ரஹாரம், தாமரைச் சக்கரம் என்ற பெயருகள் உண்டு. இது உச்சந்தலை பகுதியில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கிறது. இந்தச் சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும், நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவு படுத்துகின்ற சக்கரம் இது. என்ன நடக்கப் போகிறது என, அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது. பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.

Friday 21 October 2016

Power of Mantras. Mantras are Frequencies that can Heal, Kill and Transcend..

Sanskrit is the oldest language that was based on sounds and vibrations.
Every alphabet and its pronounciation have specific meaning; like ku is earth, khE is sky etc.

OM is the first and foremost of all mantras.

OM is the sound of cosmic energy and contains all the sounds in itself. The spiritual efficacy of OM is heard, not by the ears but by the heart. It surcharges the innermost being of man with vibrations of the highest reality.

All galaxies (including ours) are rotating and the sound they make is OM.
Frequency of OM is 7.83 Hz , which is inaudible to us as the human ear with it's 2 strand DNA cannot discern sounds of frequency less than 20 hertz.
Birds, Dogs and few other animals can hear it.

OM has been adapted into other religions as AMEN, 786 ( OM symbol shown in mirror), SHALOM, OMKAR/ONKAR etc, but they do NOT work like the original OM.
While OM releases Nitric Oxide, Amen and Shalom only emit a sound.

Frequencies of various Beej Mantras

OM – 7.83 Hz
Gam – 14 Hz
Hleem – 20 Hz
Hreem – 26 Hz
Kleem – 33 Hz
Krowm – 39 Hz
Sreem – 45 Hz

These cosmic sounds were heard by 12 strand DNA maharishis in their spiritual trances which broadened their sense spectrums. However our brain can register the vibrations.

Seven Chakras and Mantras

Muladhara (मूलाधार)
Base or Root Chakra: Cervix/Perineum
Sound Note: C
Colour: Red
Element: Earth
Mantra: Lam
Frequency in Hz: 261.6, 523.3, 1046.5, 2093, 4186
Keeps you Grounded. Connects your feet to the Earth. Good if you can't make descisions.

Swadhisthana (स्वाधिष्ठान)
Sacral Chakra: last bone in spine
Sound Note: D
Colour: Orange
Element: Water
Mantra: Vam
Frequency in Hz: 293.7, 587.3, 1174.7, 2349.3, 4698.7
Emotions, Passion, intuition and creativity.

Manipura (मणिपूर)
Solar Plexus Chakra : Navel area
Sound Note: E
Colour: Yellow
Element: Fire
Mantra: Ram
Frequency in Hz: 329.6, 659.3, 1318.5, 2637.1, 5274.1
Confidence, Assertiveness, ability to take a stand and say No.
Will Power.

Anahata (अनाहत)
Heart Chakra: Heart area
Sound Note: F
Colour: Green
Element: Wind
Mantra: Yam
Frequency in Hz: 349.2, 698.5, 1396.9, 2793.9, 5587.7
Love, Kindness, Compassion, Harmonious relationships.

Visuddha (विशुद्ध)
Throat Chakra (throat and neck area)
Sound Note: G
Colour: Blue
Element: Sky
Mantra: Ham
Frequency in Hz: 196, 392, 784, 1568, 3136
Self-Expression and Open communication.

Ajna (आज्ञा) Brow
Third Eye Chakra (pineal gland or third eye)
Sound Note: A
Colour: Indigo
Element: Body
Mantra: OM
Frequency in Hz: 110, 220, 440, 880, 1760, 3520.

Insight and visualisation. Opens up your perceptive physic ability.

Sahasrara (सहस्रार)
Crown Chakra (Top of the head; 'Soft spot' of a newborn)
Sound Note: B
Colour: White (combination of all the colours ) or Violet
Element: No Element
Mantra: No Sound
Frequency in Hz: 123.5, 246.9, 493.9, 987.8, 1975.5, 3951.1

Wisdom. Connecting you to your higher Self and spirituality.
Astral projection, Inter galactic travel, higher spiritual powers, timelessness, language of light etc.

Advantages of natural production of Nitric Oxide in our body :

The anuswaram (nasal sound) MMMM humming boosts the production of Nitric oxide in the body. This was known to Indians and documented more than 7000 years ago.

Nadaswaram (Shehnai) is an ancient musical instrument which produces similar nasal sound.

OM opens up quantum tunneling, where the wormholes do NOT have a restriction of speed of light. The secrets of this universe are contained in energy, frequency and vibration.

If you make the sound of OM in front of a drop of liquid, it will transform itself into a Sri Yantra which is a very specific visual form, which is symmetrical and also holographic, in that every bit of it contains all of it.

This Sri Yantra was revealed to Maharishis with 12 strand DNA and king sized pineal glands more than 8000 yrs BC.

Sanskrit Mantras have the precise golden ratio of 1.618 sound harmonics ( Fibonacci)

Om Sri Ram Jai Ram Jai Jai Ram

Thursday 20 October 2016

சித்தர் தரிசன மந்திரங்கள்

சித்தர்களில் முதன்மையானவரும்,அதிகமான பாடல்களை இயற்றியவருமான அகஸ்தியர் பின்வரும் மந்திரங்களை சித்தர் தரிசனத்திற்காகக் கூறுகிறார்.

1.சித்தர் தரிசன மந்திரம்:-

ஓம் || கிலி  ரங் அங் சிங் ||

இம்மந்திரத்தை பிரம்ம முஹூர்த்த நேரத்திலோ ,இரவு 11-30-12.30 மணிக்குள்ளோ துரியம் என்ற சஹாஸ்ரார கமலத்தில் மனம் வைத்து  90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம் உண்டாவதுடன் ,அஷ்ட சித்துக்கள்,வைத்தியமுறைகள் மற்றும்யோக, ஞான   ரகசியங்களையும் உபதேசித்து அருள் செய்வார்கள் என்று அகஸ்தியர் தனது பரிபூரணம் 1000 என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

2.சித்தர் தரிசன மந்திரம்:-

சிவயநம கிலி ஓம்  |||

இம்மந்திரத்தை பிரம்ம முஹூர்த்த நேரத்திலோ,இரவு 11-30-12.30 மணிக்குள்ளோ  துரியம் என்ற சஹாஸ்ரார கமலத்தில் மனம் வைத்து  90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம்  உண்டாவதுடன் தொழில் முறைகள் (வாத,வைத்தியம்), யோக ஞான   ரகசியங்களையும் உபதேசித்து அருள் செய்வார்கள் என்று அகஸ்தியர் தனது ஞான சைதன்யம் 51 என்ற நூலில் குறிப்பிடுகிறார்.


3.சித்தர் தரிசன மந்திரம்:-

சிவயநம ஓம் கிலீம் ||

இம்மந்திரத்தை பிரம்ம முஹூர்த்த நேரத்திலோ  ,இரவு 11-30-12.30 மணிக்குள்ளோ துரியம் என்ற சஹாஸ்ரார கமலத்தில் மனம் வைத்து 90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம் உண்டாகும்.சித்தர் பெருமக்கள் யாராவது காட்சி தருவார்கள் அச்சமயம் யார் வழியைப் பின்பற்றி அல்லது யார் நூலைப் பின்பற்றி இந்த முறையை அறிந்து கொண்டாய் என்று கேட்பார்கள்.அப்பொழுது அகஸ்தியரின் நூலைப் பின்பற்றி இம்முறையை அறிந்தேன் அய்யா என்று மறுமொழி கூற வேண்டும்.


தெரிசிக்கத் தியானமொன்று சொல்லக்கேளாய் 
சிவயநம ஓம் க்லீம் என்று சேவி
வரிசிக்குஞ் சித்தரெல்லாம்  வெளியிற்காணு 
மகத்தான சித்தரப்பா வணங்கி நில்லு 
பரிசிக்கும் படியவரைக் கண்டாயானால் 
பணிந்திடுவாய் பாதத்திற் சிரசு தட்ட
கிரிசிக்கும் ஆர்நூலிற் சார்ந்தாயென்று 
கேட்கிலகத்தீசுரர் தன கிருபை யென்னே  - அகத்தியர் பூரண சூத்திரம் பாடல் 97 



4.சித்தர் தரிசன மந்திரம்:-

 ஓம்|சிங் ரங் அங் சிங்|

இம்மந்திரத்தை பிரம்ம முஹூர்த்த நேரத்திலோ  ,இரவு 11-30-12.30 மணிக்குள்ளோ  90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம்                 உண்டாகி நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுவார்கள் .


மேற்கண்ட மந்திரங்களில் எது உங்களுக்கு பிரியமானதோ அதை தேர்ந்தெடுத்து வடக்கு திசை நோக்கி அமர்ந்து ஜெபித்து வரவும்.ஜெபிக்கும் போது அருகில் ஒரு செம்பு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் வைத்துக் கொள்ளவும்

தீராத நோய்கள் தீர ,சர்க்கரை நோய் பாதிப்புகள் குறைய,கணவன் மனைவி அன்யோன்யம் உண்டாக ஸ்ரீ சுக்ரபகவான் மந்திரம்

ஓம் நமோ பகவதே பார்கவாய சுக்ரமுனியே |
ம்ருதசஞ்ஜீவினீம் தாபய தாபய ஸ்வாஹா |ஓம் நமஹ ||


வெள்ளிக்கிழமை தோறும் சுக்ர ஹோரையில் ஸ்ரீ துர்க்கை ஆலயத்தில் வைத்து இம்மந்திரம் ஜெபித்து வரத் தீராத நோய்கள் தீரும்.சர்க்கரை நோய் பாதிப்புகள் வெகுவாகக் குறையும்.தம்பதிகளுக்குள் அன்யோன்யம் உண்டாகும்.செல்வநிலையில் உயர்வு உண்டாகும்.

வெண்ணிற ஆடைகள் அணிந்து ஜெபித்தால் நிறைவான பலன் கிடைக்கும்.

பலன் தரும் ஸ்ரீ ஹனுமான் மந்திரங்கள்

1.ஸ்ரீ ஹனுமத் சுலோகம் :-

அசாத்ய  சாதக ஸ்வாமிந் |
அசாத்யம் தவகிம்வத |
ராம தூத க்ருபாசிந்தோ |
மத் கார்யம் சாதய ப்ரபோ|

எந்த ஒரு காரியம் துவங்கும் முன்பும் இந்த ஸ்லோகத்தை மூன்று தடவை கூறி ஆஞ்சநேயரை வணங்கி வேண்டிய பின்னர் துவங்க சிறப்பாக முடியும்.
ஏற்கனவே துவங்கிய வேலை பாதியில் முடிவடையாமல் நின்றால் செவ்வாய்க்கிழமை அன்று ஸ்ரீ ஹனுமன் ஆலயம் சென்று அவருக்கு வெற்றிலை மாலை சாற்றி அமர்ந்து இந்த ஸ்லோகத்தை  27 தடவை ஜெபித்து வேண்டிக்கொள்ள தடைபட்ட காரியம் விரைவில் முடியும் சூழல் உருவாகும்.

2.வியாதிகள்,எதிரிகள் நீங்க ,வசீகரம் தரும் மந்திரம் 

ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
சர்வ சத்ரு சம்ஹாரணாய சர்வ ரோக ஹராய |
சர்வ வசீகரணாய ராமதூதாய ஸ்வாஹா ||


3.எல்லா ஆபத்துக்களில் இருந்தும் விடுபட :-
  
ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |ஆத்யாத்மிகாதி தெய்வீகாதி
பௌதீக தாபத்ரய நிவாரணாய| ராமதூதாய ஸ்வாஹா ||

உங்களுக்கு படுபட்சி இல்லாத நல்ல நாளாகத்  தேர்ந்தெடுத்து 108 தடவை இம்மந்திரம் ஜெபித்து கையில் ரக்ஷை கட்டிக்கொள்ள மனிதர்களாலும், இயற்கை மற்றும் துஷ்ட சக்திகளாலும் எவ்வித ஆபத்தும் ஏற்படாது சர்வரக்ஷையாக விளங்கிக் காக்கும்.ரக்ஷையை அணியும் முன் மேற்சொன்ன மந்திரம் 3 தடவை ஜெபித்து அர்ச்சித்து பின் அணிந்து கொள்ளவும். 


4.பிறரால் செய்யப்பட திருஷ்டி,மந்திர யந்திரங்களால் உண்டான பாதிப்புகள் நீங்க, நோய்கள் ,பயம் நீங்க,சர்வ கார்யங்களிலும் வெற்றி பெற :   
ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
பர யந்திர மந்திர தந்திர த்ராடக நாசகாய |
சர்வஜ்வர சேதகாய சர்வ வியாதி நிக்ருந்தகாய |
சர்வ பய ப்ரசமனாய சர்வ துஷ்ட முக ஸ்தம்பனாய |
சர்வகார்ய சித்திப்ரதாய ராமதூதாய ஸ்வாஹா || 

மேற்சொன்ன பலன்கள் போக மேலும் சில காரியங்களுக்கும் இம்மந்திரம் பயன்படும்.எதிர்களுடன் வாக்குவாதம், வழக்குகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இடது கையில் ஒரு செம்பில் நீர் வைத்துக் கொண்டு இம்மந்திரத்தை 27 தடவை ஜெபித்து அந்த நீரால் முகம் கழுவிச் செல்ல வெற்றி கிட்டும். 

5.கெட்ட சக்திகளால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்க :-
ஓம்  நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
தேவ தானவ யக்ஷ ராக்ஷஸ பூத ப்ரேத பிசாச|
டாகினி சாகினி துஷ்ட க்ரஹ பந்தனாய ராமதூதாய ஸ்வாஹா || 

அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல் இருந்தால் இம்மந்திரத்தை மனதுக்குள் ஜெபிக்க அவை உடனே நீங்கும்.உங்களுக்கு படுபட்சி இல்லாத நல்ல நாளாகத்  தேர்ந்தெடுத்து ஒரு நல்ல வெற்றிலையில் செந்தூரம் கொண்டு "ஹ்ராம்" என்று எழுதி  இம்மந்திரத்தை 1008 உரு ஜெபித்து அந்த வெற்றிலையைச்  சுருட்டித் தாயத்துக்குள்  அடைத்து இடுப்பில் அணிந்து கொள்ள பூத,ப்ரேத,பிசாசு,துர்சக்திகளின் பாதிப்புகள் நிரந்தரமாக நீங்கும்.
தனி நபருக்கு இல்லாமல் ஒரு வீடு,கடை,தொழிற்சாலை போன்றவற்றுக்கு துஷ்ட சக்திகளால் பாதிப்பு என்றால் மேற்கண்ட வெற்றிலையை ஒரு சிகப்புத் துணியில் முடிந்து வீடு,கடை,தொழிற்சாலை வாசலில் கட்டி வைக்கவும்.