AimShreemHreem - Secret of Successful Peopl

AimShreemHreem - Secret of Successful Peopl
Click Here

Friday 26 February 2016

A conversation between Guru and Sishya

When I was young I used to wonder about NEIVEDYAM TO GOD and have asked my parents.. Will God come and eat and even waited curiously to see HIM in action๐Ÿ˜‚๐Ÿ˜‚๐Ÿ˜‚๐Ÿ˜‚.But then my parents were not able to give me an acceptable explanation. I was just advised to have BELIEF.

Here is a very good explanation with which I was able to convince my kids...๐Ÿ˜Š๐Ÿ˜Š๐Ÿ˜Š๐Ÿ˜Š๐Ÿ˜Š๐Ÿ˜Š

A Guru-Sishya conversation. ๐Ÿ™

The sishya who doesn't believe in God, asked his Guru thus:
"Does God accept our 'neivedhyam'? If God eats away the 'prasadham' then from where can we distribute it to others? Does God really consume the 'prasadham', Guruji?"

The Guru did not say anything. Instead, asked the student to prepare for classes.

That day, the Guru was teaching his class about the 'upanishads'. He taught them the 'mantra': "poornamadham, poornamidham, poornasya poornaadaaya...." and explained that: 'every thing came out from "Poorna or Totality." (of ishavasya upanishad).

Later, everyone was instructed to practice the mantra by-heart. So all the boys started praciting. After a while, the Guru came back and asked that very student who had raised his doubt about Neivedya to recite the mantra without seeing the book,  which they did.

Now the Guru gave a smile and asked this particular sishya who didn't believe in God: 'Did each of you really by-heart everything as it is in the book? The sishya said: "yes Guruji, I've recited whatever is written as in the book.

The Guru asked: "If you have taken every word into your mind then how come the words are still there in the book? He then explained:

"The words in your mind are in the SOOKSHMA STHITI (unseen form). The words in the book are there in the STOOLASTHITI (seen).

God too is in the 'sooksma sthiti'. The offering made to Him is done in 'stoola sthiti'. Thus, God takes the food in 'sookshmam'. Hence the food doesn't become any less in quantity.

While GOD takes it in the sookshma sthiti,  we take it as 'prasadam' in 'stoola sthiti'.

Hearing this the sishya felt guilty for his disbelief in God and surrendered himself to his GURU.
๐Ÿ™๐Ÿ™๐Ÿ™

Sunday 21 February 2016

Types of Deeksha

தீட்சை
தீட்சை பற்றிய விளக்கம்

தம் சீடனுடைய ஆன்மாவைச் சார்ந்த அழுக்குகளை நீக்கி, அவனுடைய ஆன்மாவைத் தூய்மைப்படுத்தவும், ஞானம் ஊட்டவும், வேண்டிக் குருவானவர் செய்யும் கிரியை தீட்சை எனப்படும்.தீட்சை என்னும் சொல் அழித்தல், கொடுத்தல் என்ற இரு பொருள் தருவது, ஆன்மாவின் அழுக்குகளை அழிப்பதும், இறைமைத் தன்மையைக் கொடுத்தலும் தீட்சையின் பயன்களாகும். இத் தீட்சை பலவகை, சைவ ஆகமங்கள் ஏழுவகை தீட்சைகளைக் குறிக்கும்.

1. நயன தீட்சை

தன் பார்வையாலேயே சீடனுடைய பாவங்களைப் போக்கி அருள்பாலிப்பது நயன தீட்சை எனப்படும்.’அடிகளார் பார்வைபடுமாறு பார்த்துக்கொள்’ என்று அன்னை அடிக்கடி பக்தர்கட்குக் கூறுவதன் உள்நோக்கம் நயன தீட்சை அளிப்பதற்காகவே, மீனானது தன் சினையைப் பார்த்த அளவில், சினைகள் மீன் வடிவம் பெறுதல் போல, குருவின் பார்வை பட்ட அளவில் சீடனும் தன்போல் சிவமாவான் என்று ஆகமங்கள் கூறும்.

2. ஸ்பரிச தீட்சை

ஆசாரியன் தன் வலக்கையால் சீடன் தலை மேல் வைப்பது, நெற்றிப் பொட்டில் கை வைத்து அருள்பாலிப்பது, திருவடிகளைத் தலை மேல் வைப்பது ஸ்பரிச தீட்சை. திருவடிகளைச் சீடன் தலை மேல் வைத்து அருள்பாலிப்பது திருவடி தீக்கை என்றே கூறப்படும். கோழி, மூட்டையை அடைகாத்துக் குஞ்சு பொறிப்பது போலச் சீடனை பரிசத்தால் ஞானமயமாக்குவது இது!

3. வாசக தீட்சை

குருவானவர், தம் சீடனுக்குத் தகுந்த மந்திரங்களை உபதேசித்து அவனை ஞானமயமாக்குவது வாசக தீட்சை எனப்படும்.பஞ்சாட்சர மந்திரம், பிரணவ மந்திரம்,ஹீ வித்யை, தத்துவமசி உபதேசம் என்பன வாசக தீட்சையில் அடங்கும்.

4. மானச தீட்சை

சீடன் ஒருவன் எங்கையோ இருந்து கொண்டு தன்னைத் தியானம் செய்யும் போது, அத் தியான சக்தி குருவை ஈர்க்கச் செய்யும். அத்தகைய காலங்களில் குரு தான் இருந்த இடத்திலிருந்து அவனுக்கு மனத்தால் அருள்பாலிப்பது மானச தீட்சை எனப்படும். ஆமையானது எங்கோ இருந்துகொண்டு தான் வைத்த முட்டையைத் தன் எண்ணத்தின் உறைப்பால் சினையாக்கும். அது போன்றது இது!

5. சாஸ்திர தீட்சை

சீடனுடைய சந்தேகங்களை நீக்க வேண்டிச் சாத்திரங்களை அருளுதல் சாஸ்திர தீட்சை எனப்படும். இருபா இருபது, உண்மை விளக்கம் என்ற சைவ சாத்திரங்கள் இதற்கு எடுத்துக் காட்டுகள்! அருச்சுனன் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டிக் கண்ணன் அருளிய பகவத் கீதை சாஸ்திர தீட்சைக்கு உதாரணம்.

6. யோக தீட்சை

தன் சீடனுக்கு யோகப் பயிற்சிகளை அளித்து பிராணாயாம நுணுக்கங்களை கற்பித்துக் குண்டலினி சக்தியை எழுப்ப வேண்டித் தீட்சை அளித்தல், சமாதி நிலைக்கு அவன் முன்னேறி வர உதவுதல் யோக தீட்சை எனப்படும்.

7. ஒளத்திரி தீட்சை

சீடனை ஒரு வேள்விக் குண்டத்தின் முன் அமரவைத்து, சக்கரம் வரைந்து அக்கினி வளர்த்து, அவனுக்கு ஞானம் ஊட்டுவது ஒளத்திரி தீட்சை எனப்படும்.

8. ஆசார்ய அபிடேகம்

தன்னைப் போல ஒரு ஆசாரியன் ஆகிற அளவிற்குப் பக்குவம் பெற்ற சீடனுக்கு ஆசாரிய ஸ்தானம் அளிக்க வேண்டிச் செய்யப்படுவது ஆசாரிய அபிடேகம் எனப்படும். இந்த அபிடேகம் முடிந்த பிறகே ஒருவர் ஆசாரிய ஸ்தானத்தைப் பெறுகிறார்.
அடிப்படை தீட்சை சமய தீட்சை
ஒருவர் சைவ நெறியை மேற்கொள்வதாக இருப்பினும், வைணவ நெறியை மேற்கொள்வதாக இருப்பினும், வைதிக நெறியை மேற்கொண்டு ஒழுகுவதாக இருப்பினும், தகுதிவாய்ந்த குருமாரிடம் சென்று தக்க மந்திரத்தை அவரிடம் கேட்டு, அதனையே ஜெபித்துத் தம் இஷ்ட தெய்வத்தை வணங்கி வர வேண்டும், என்பது அடிப்படை விதி, இந்த அடிப்படை அமைய வேண்டியே சமய தீட்சை பெற்றுக் கொண்டு அதன் பிறகு ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது விதி.

தீட்சையால் உண்டாகும் மாற்றங்கள்

அருணாசல குரு என்பார் இயற்றிய நிஜானந்த போதம் என்ற நூல்’ தச தீக்கை ‘எனப் பத்துவகைத் தீக்கைகளைக் கூறுகிறது. சீடனுடைய உடம்பிலும், உள்ளத்திலும் தீட்சையால் உண்டாகும் மாற்றங்களையும் கூறுகின்றது.

1. முதல் தீட்சையைல் ரோம துவாரங்கள் வழியாகத் கெட்ட நீர்கள் வியர்வையாய்க் கசியும்.

2. இரண்டாவது தீட்சையில் வாத, பித்தம் சிலேத்துமம் என்ற மூன்று தோஷங்கள் நீங்கும்.

3. மூன்றாவது தீட்சையில் பழைய கெட்ட உதிரங்கள் கசியும்.

4. நான்காவது தீட்சையால் சர்ப்பம் தோலுரிப்பது போலச் சரீரத்தில் தோலுரியும்.

5.ஜந்தாவது தீட்சையால் சட்டை கழன்று தேகம் சிவந்த நிறமாகும். பஞ்ச மூர்த்திகள் கோரியதைத் தருவார்கள்.

6. ஆறாவது தீட்சையில் சட்டை கழன்று சுழுமுனை வாசல் திறந்து தூர திருஷ்டி தெரியும்.

7. ஏழாவது தீட்சையில் சட்டை வெளுப்பாய்க் கழன்று தேகம் தூபம் போலப் பிரகாசிக்கும்.

8. எட்டாவது தீட்சையில் உடம்பை உயரத் தூக்கும். கூடு விட்டுக் கூடு பாயும் வல்லபம் உண்டாகும்.

9. ஒன்பதாவது தீட்சையில் தேகம் சூரியப் பிரகாசம் அடையும். அட்டமா சித்தியும் கைகூடும். தேவர்கள் சீடனுக்கு ஏவல் புரிவர்.

10. பத்தாவது தீட்சையில் தேகம் தீபம் போலப் பிரகாசிக்கும். சொரூப சித்தி கூடும். அண்டத்தில் மெளனம் நரை திரை ,மூப்பு, பிணி ,மரணம் ஏற்படா.

இத் தீட்சைகளால் பக்குவம் பெற்ற சீடன் உடம்பு, மனம், ஆன்மா, மூன்றும் ஞானம் பெறத் தகுதி பெறுகின்றன.

Saturday 20 February 2016

Ehtiraajusila swamigal

Thopukaranum is a varmam

"Thoppukarnam"

Thoppukaranam is a traditional practice in Indian Schools, accepted from Gurukula system of education to make the child sit and stand catching both the ears with hands crossing each other symbolizing punishment for lethargy, laziness and not memorizing or grasping and to improve brain power etc.

Most people do it in front of Lord Ganesha by crossing their arms and holding the ear lobes between the tips of the fore and middle finger; next they bend their knees and get up–doing this three times. This prayer is called thoppu karanam.“Thorpi: Karnam ” is thoppukarnam in its corrupted form. Which word, is related to the Sanskrit “Dvau-bhuja-karnam”“Thorpi = means with the hands, and “Karnam” = means ears. Hence “Thorpikarnam” means holding the ears with the hands.

A rather funny act of holding the right ear with the left hand and vice versa, cross our legs and do some sit-ups. This also has an interesting story from the puranas;

Once, when Lord Vishnu came to see Shiva, the Lord in his playfull mood, snatched the Sudarshana chakra from Vishnu and put it in his mouth, Lord Vishnu did many things to get it back. Even Lord Shiva could not help him. Finally, Vishnu held his ears with his hands crossed, and started to do some sit ups. This amused Lord Ganesha and he laughed out loudly, when the disc fell out. In this way, Lord Vishnu got back his chakra.

Each and every performance followed by Hindu culture is backed by some scientific truth.Thoppukaranam basically activates the acupuncture points at right and left ears thereby activating the right and left brains. Fifteen minutes of ’Thoppukaranam’ increases the brain power immensely according to sources.The physical body is a very complicated subtle electronic equipment. When a proper energy wiring connection is made, it produces the right results.The right ear lobe corresponds to the left brain.The left ear lobe corresponds to the right brain. When the right ear lobe is gently squeezed with the left thumb and left index finger with the thumb outside, it produces the necessary energy connection. This connection causes the left brain and pituitary gland to become energized and activated. Similarly, when the left ear lobe is gently squeezed with the right thumb and right index finger with the thumb outside, it produces the necessary energy connection, which causes the right brain and pineal gland to become energized and activated, which causes the right brain and pineal gland to become energized and activated.For energizing and activating the Left Brain and the Right Brain, the left arm must be inside, while the right arm must be outside.

Superbrain Yoga not only energizes and activates the brain, but also assists in balancing the energies of the heart, throat, ajna, (center of the brain-eyebrow center )forehead and crown energy centers.( The Crown energy center (also called the spiritual heart) located on the top of the head is the entry point to higher spiritual consciousness.) Synchronizes the right and left side of the brain to improve function and promote calmness, energizing of cells and nervous system, sharper mind, focus, additional energy. This an amazing yoga which you can do anywhere, anytime, any age. Also whenever knowingly or unknowingly If you have done mistake, put 11 thoppukaranam as saying sorry to God.

Thursday 18 February 2016

Jeeva samadhi in Chennai

#சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியலும், இருப்பிடமும்

திருவொற்றியூர்:
-------------------------
பட்டினத்தார்= கடற்கரையை ஒட்டி பட்டினத்தார் கோவில் வீதி.ஆவணி மாதத்தில் வரும் உத்ராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.

பாடகச்சேரி ராமலிங்கசாமிகள்= பட்டினத்தார் கோவில் வீதியில் இவரது பெயருள்ள மடம்

ஐகோர்ட் சாமி என்ற அப்புடுசாமி= பாடகச்சேரி ராமலிங்க சாமிகள் மடத்துள் இருக்கிறது.

அருள்மிகு யோகீஸ்வரர் சாமி=வடிவுடையம்மன் கோவில் அருகில் தட்சிணாமூர்த்தி ஆலயம் ஸ்தாபித்தவர்.

பரஞ்சோதி மகான்= டோல்கேட் பஸ் ஸ்டாப் அருகில் 4,தங்கம் மாளிகை அருகில்
.
ஞானப்பிரகாச சாமிகள்= வடக்கு மாடவீதி 145/30 இல் சிவாமிர்த ஞான ஆசிரமத்தில் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை.

மவுன குரு சாமிகள்= கடற்கரையோரம் சமாதி கோவில்.

முத்துக்கிருஷ்ண பிரம்மம்=ஆஞ்சநேயர் கோவில் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் எதிரே சமாதி; கார்த்திகை மாத சதயம் நட்சத்திரத்தன்று குரு பூஜை;

ஞானசுந்தர பிரம்மம்= முத்துக்கிருஷ்ண பிரம்மம் சமாதி அருகில் ஞான சுந்தர பிரம்மம் சமாதி.சித்திரை மாத உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!

ராயபுரம்:
-------------
குணங்குடி மஸ்தான் சாயபு= காய்கறி மார்க்கெட் பின்புறம் பிச்சாண்டி தெருவில் உள்ளது.

ஞானமாணிக்கவாசக சிவாச்சாரியார் சித்தர்= மன்னார்சாமி கோவில் தெரு பழைய பாலம் இறக்கத்தில் உள்ள ருத்ர சோமநாதர் கோவிலில் சமாதி .

வியாசர் பாடி:
-------------------
சிவப்பிரகாச சாமி=இரவீஸ்வரர்-மரகதாம்பாள் கோவிலில் சமாதி கோவில்.

கரபாத்திர சிவப்பிரகாச சாமி=1 வது தெரு சாமியார் தோட்டம் அம்பேத்கர் கல்லூரி அருகில்.பங்குனி உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!

பெரம்பூர்:
-------------
அந்துகுருநாத சுவாமிகள்=மாதவரம் நெடுஞ்சாலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சமாதி கோவில்-பஞ்சமுக வடிவமும் உள்ளது.

மதனகோபாலசாமி=மேல்பட்டி பொன்னப்பமுதலி தெரு ஈஸ்வரி கல்யாண மண்டபம் எதிரில் சமாதி கோவில்;

சந்திர யோகி சுவாமி=மங்களபுரம் ஐந்துலைட் அருகில்.
வேர்க்கடலை சுவாமி=அய்யாவு தெரு,திரு.வி.க.நகர்.

மதுரை சாமி=செம்பியம் வீனஸ் தியேட்டர் 2 வது குறுக்குத் தெரு வலது பக்கம் மதுரை சாமி மடத்தில்.

மயிலை நடராஜ சுவாமி=கொளத்தூர்- பெரவள்ளூர் செல்லியம்மன் கோவில் பின்புறம்.

ஓட்டேரி:
-------------
ஆறுமுகச்சாமி=173/77 டிமலஸ் சாலை,பெரம்பூர் பேரக்ஸ் ரோடு-ஓட்டேரி மயானத்தில் சமாதி கோவில்-உருவப்பட பூஜை.

புரசைவாக்கம்:
----------------------
வீரசுப்பையா சுவாமி
புவனேஸ்வரி தியேட்டர் எதிரில்-52,பெரம்பூர் பேரக்ஸ் ரோடு மடத்தில் சமாதி கோவில்.

ஈசூர் சச்சிதானந்த சாமி=கொசப்பேட்டை சச்சிதானந்தா தெரு(வசந்தி தியேட்டர் அருகில்) சமாதி கோவில்.

எழும்பூர்:
-------------
மோதி பாபா=422,பாந்தியன் சாலை போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரில் தர்கா.

அனந்த ஆனந்த சுவாமி மற்றும் சபாபதி சுவாமி=பாலியம்மன் கோவில் பின்புறம் சாமியார் தோட்டத்தில் இருவரது சாமதி கோவில்-ஐப்பசி திருவாதிரை நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.

நுங்கம்பாக்கம்:
----------------------
கங்காத சுவாமி=ஹாரிங்டன் ரோடு 5 வது அவென்யூ ஜெயவிநாயகர் கோவிலில் சமாதி.

நாதமுனி சாமி=ஹாரிங்டன் ரோடு,பச்சையப்பன் கல்லூரி பின்வாசல் அருகில் நாதமுனி மடத்தில் சமாதி கோவில்.

பன்றிமலை சாமி=5,வில்லேஜ் ரோட்டில் ‘ஓம்நமச்சிவாய’என்ற பெயரில் ஆஸ்ரமத்தில் சமாதி.

ஆதிசேஷானந்தா=நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தின் பின்புறம் ஆதிசேஷானந்தா கோவிலில் சமாதி.

வீரமாமுனிவர்=நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் காவல்நிலையம் எதிரில் அசலத்தம்மன் கோவில்.

கோடம்பாக்கம்:
----------------------
ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமி=அசோக் நகர்-சாமியார் மடம் டாக்டர் சுப்பராயன் நமர் சாமியர் மடம் ஞானோதய ஆலயம்-ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமிபீடம்.

வடபழனி:
---------------
அண்ணாசாமி,ரத்தினசாமி,பாக்கியலிங்கசாமிகள்=வடபழனி முருகன் கோவில் உருவாக இந்த மூவரும் காரண கர்த்தாக்கள்.இவர்களது சமாதி கோவில் முருகன் கோவில் பின்புறம் நெற்குன்றம் பாதையில் வள்ளி திருமண மண்டபம் அருகில்.

மைலாப்பூர்:
-----------------
திருவள்ளுவர்-வாசுகி அம்மையார்=லஸ் அருகில் திருவள்ளுவர் கோவிலில்.

அப்பர் சாமிகள்=171,ராயப்பேட்டை ஹைரோடு-சமஸ்க்ருத கல்லூரி எதிரில்,மைலாப்பூர் அப்பர் சாமிகள் சமாதி உள்ளது.

குழந்தைவேல் சுவாமி=சித்திரகுளம் எஸ்.டி.பி.கில்டு பில்டிங்கில் இருக்கிறது.

முத்தையா சாமிகள்=குழந்தைவேல் சாமிகள் சீடர்-அவரது சமாதி அருகில்.

ஆலந்தூர்:
--------------
தாடிக்கார சுவாமி=ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் தாடிக்காரசாமி தெரு-பழைய எண்:23-24 இடையே சந்து.உள்ளே தாடிக்கார சாமியின் சிறிய ஜீவ சமாதி கோவில்.சிவலிங்க பிரதிஷ்டை.
குழந்தைவேல பரதேசி=ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் பின்புறம் 53,சவுரித்தெரு,எஸ்.ஆர்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாயிலுக்குக் கீழ்ப்புறம் சமாதி கோவில்.

கிண்டி:
சாங்கு சித்தர் சிவலிங்க நாயனார்=எம்.கே.என்.ரோடு 36 ஆம் எண்-சாங்கு சித்தர் சிவலிங்கநாயனார் சமாதி கோவில்-சிவலிங்க பிரதிஷ்டை.இத்துடன் இவரது சீடர்கள் ஸ்ரீகொல்லாபுரி சாமி,ஸ்ரீஏழுமலை சாமிகளின் சமாதி,ஆனி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை.

சத்யானந்தா கோழீபீ சித்தர்=பஸ் ஸ்டாப் அருகில் உள்ள சாய்பாபா கோவில் வளாகத்தில்.

திருவான்மியூர்:
-----------------------
பாம்பன் சுவாமிகள்-கலா சேத்ரா அருகில் திருமட வளாகத்துள் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் சமாதி ஆலயம்.ஸ்ரீமுருகக்கடவுள் பிரதிஷ்டை.

வால்மீகி=மருந்தீஸ்வரர் கோவில் எதிரில் சிறிய கோவில்.
சர்க்கரை அம்மாள்=75,கலா சேத்ரா ரோடு,

வேளச்சேரி:
-----------------
சிதம்பரச்சாமி என்ற பெரியசாமி=காந்தி சாலை திருப்பம்-1,வேளச்சேரி மெயின் ரோடு-சிவலிங்க பிரதிஷ்டை.

ராஜகீழ்ப்பாக்கம்:
------------------------
சச்சிதானந்த சற்குரு சாமிகள்=அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையின் சமாதி.

பெருங்குடி:
----------------
நாகமணி அடிகளார்=கந்தன் சாவடி பஸ்ஸ்டாப் – நாகமணி அடிகளார் சாலை அம்மன் கோவிலுகுள்.

நங்கநல்லூர்:
------------------
மோனாம்பிகை-ஞானாம்பிகை- சாதுராம்
இம்மூவரின் சமாதி பிளாட் 21,பொங்கி மடம்(மாடர்ன் உயர்நிலைப் பள்ளி அருகில்)-ஸ்டேட் பாங்க் காலனி

சிட்லப்பாக்கம்:
---------------------
சாயி விபூதி பாவா= 83,முதல் மெயின் ரோடு,ஹெச்.சி.நகர்-சிட்லப்பாக்கம் பாலம் இறக்கத்தில் சமாதி கோவில்-அருகில் குமரன் குன்றம் மலைக்கோவில்.

தாம்பரம்:
-------------
எதிராஜ ராஜயோகி-ஊரப்பாகம் அருகில் கரணை புதுச்சேரியில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.

படப்பை:
-------------
துர்கை சித்தர்-ஜெயதுர்கா பீடம் கோவில்.
பெருங்களத்தூர்: ஸ்ரீமத் சதானந்தசாமி- ஆலம்பாக்கம் சதானந்தபுரம்- பெருங்களத்தூரில் சமாதி கோவில்.

புழல்
-------
கண்ணப்ப சாமி
புழல் சிறைச்சாலையை அடுத்து காவாங்கரையில் கண்ணப்பசாமிகள் ஆசிரமம்;ஜீவசமாதி மேடை மீது சாமிகள் அமர்ந்த கோலத்துடன் காட்சியளிக்கிறார்.இவருக்கு அருகில் இவரது சீடர் கோவிந்த சாமியின் ஜீவசமாதி.

காரனோடை
-------------------
மல்லையா சாமிகள்
காரனோடை தாண்ட குசஸ்தல ஆற்றுப்பாலத்தின் கீழ் வடகரையில் சமாதிகோவில் அமைந்திருக்கிறது.இங்கு சாமிகளின் சிலை கருங்கல்லால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார்
காரனோடை கோபிகிருஷ்ணா தியேட்டர் எதிரில் ஆத்தூர் சாலையில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.பிரதி ஆவணி மாதம் வரும் முதல் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அலமாதி
மார்க்கண்டேய மகரிஷி
அலமாதீஸ்வரர் கோவிலுக்குள் சமாதி அமைந்திருக்கிறது.

கோவணச்சாமி
அலமாதீஸ்வரர் கோவில் அருகில் சமாதி இருக்கிறது.

பூதூர்
--------
ஷா இன்ஷா பாபா
செங்குன்றம் வடக்கே சோழவரம் டூ ஓரக்காடு ரோட்டில் 6 கி.மீ.பூதூர் கிராமம் இருக்கிறது.இந்த கிராமத்தின் மேற்குப்பகுதியில் தர்கா உள்ளது.

பஞ்சேஷ்டி
புலேந்திரர்(சித்தர்களின் தலைவர் அகத்தியரின் சீடர்)
ரெட் ஹில்ஸ்  டூ பொன்னேரி நெடுஞ்சாலையில் ஜனப்பன் சத்திரம் கூட்டுரோடு தாண்டி பஞ்சேஷ்டி திருத்தலத்திலுள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தினுள் ஜீவசமாதி உள்ளது.இங்கு இருக்கும் இஷ்டலிங்கேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அம்பத்தூர்
----------------
ஐயா சூரியநாத கருவூரார்
பதினெண் சித்தர் மடம்,13,குமாரசுவாமி தெரு,வரதராசபுரம்,அம்பத்தூர்.பிரதி அக்டோபர் 10 ஆம் தேதி வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

வடதிருமுல்லைவாயில்
அன்னை நீலம்மையார்
37/1 வடக்கு மாடவீதி மாசிலாமணி ஈஸ்வரன் கோவில் அருகில் ஜீவசமாதி இருக்கிறது.பிரதி கார்த்திகை மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

மாசிலாமணி சுவாமிகள்
சோளம்பேடு தாமரைக்குளம் ஆஞ்சநேயர் கோவிலில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

பூந்தமல்லி
-----------------
கர்லாக்கட்டை சித்தர்
வைத்தீஸ்வரன் கோவிலில் சிவன் சந்நதிக்கு வலப்புறம் தூணில் உள்ளார்.

பைரவ சித்தர்
பஸ்நிலையம் எதிரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.

கருடகோடி சித்தர்
பூந்தமல்லி தண்டரை சாலையில் அமைந்துள்ள சித்தர்காட்டிலிருந்து 1 கி.மீ.தூரத்தில் சுந்தரவரதபெருமாள் கோவில் தெப்பக்குள இடப்பாகத்தில் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர்:
----------------------
அருள்வெளி சித்தர்
பூதேரிபண்டை கிராமம்= வி.ஜி.பி.ராமானுஜ கிராமத்தில் ஜீவசமாதி இருக்கிறது.உயரமான சமாதி மேடை.சுவாமிகளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

வெள்ளறை கிராமம்
-------------------------------
ராஜராஜ பாபா சித்தர்
கொளத்தூர் சமீபம் வெள்ளறை கிராமத்தில் அமைந்துள்ளது.

மாங்காடு :
----------------
சர்வசர்ப்ப சித்தர்
மாங்காடு டூ போரூர் சாலையில் பேரம்புத்தூர் அருகில் கோவிந்தராஜா நகரில் ஸ்ரீசிவசித்தர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.

புதுப்பட்டிணம்(ஈ.சி.ஆர்)
------------------------------------
மாயவரம் சித்தர்சாமி & மாதாஜி சித்தர்
ஈ.சி.ஆர்.சாலை புதுப்பட்டிணம் அருகே மாயவரம் சித்தர்சாமி மற்றும் 18 சித்தர் திருவுருவங்கள் இருக்கின்றன.இருவருக்கும் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.

கோவளம்
---------------
ஆளவந்தார் சாமி
கோவளம் டூ நெமிலி வி.ஜி.பி.தாண்டி பீகாவரம் அருகில் இருக்கும் நெமிலியில் இவரது ஜீவசமாதி இருக்கின்றன.

திருக்கழுகுன்றம் :
---------------------------
குழந்தை வேலாயுத சித்தர்
செங்கல்பட்டிலிருந்து வடக்கே 12 கி.மீ.தூரத்திலுள்ள திருக்கச்சூரில் சிறிய மலையில் மருந்தீஸ்வரர் கோவில் அருகே ஜீவசமாதிக் கோவில் அமைந்திருக்கிறது.

அப்பூர்=பதஞ்சலி சுவாமி
திருக்கச்சூர் டூ ஓரகடம் இடையே அமைந்துள்ள அப்பூர் பஸ்நிலையம் அருகில் கருமாரியம்மன் புதுக்கோவில் அகஸ்தீஸ்வரர் ஆஸ்ரமத்தில் ஜீவசமாதி இருக்கிறது.

திருப்போரூர் :
---------------------
சிதம்பரச்சாமி
திருப்போரூரிலிருந்து 2 கி.மீ.கண்ணகப்பட்டு உள்ளது.இங்கே சிதம்பரசாமிகள் மடாலயம் நடுப்பகுதியில் ஜீவசமாதியின் கருவறையில் சிவலிங்கப்பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது.பிரதி வைகாசி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

செம்பாக்கம் :
--------------------
இரட்டை சித்தர்கள்
செங்கல்பட்டு டூ கூடுவாஞ்சேரி சாலையில் செம்பாக்கம் ஸ்ரீபொன்னம்பல சாமிகள் மற்றும் ஸ்ரீதிருமேனிலிங்க சாமிகள் ஆகியோரது ஜீவசமாதிகள் உள்ளன.

கூடுவாஞ்சேரி :
-----------------------
மலையாள சாமி
கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் காசிவிஸ்வநாதர் கோவில்பின்புறம் ஜீவசமாதி இருக்கிறது.அருகில் இருக்கும் வயல்வெளியில் தியாகராய சாமி ஜீவசமாதி இருக்கிறது.

அச்சரப்பாக்கம் :
-----------------------
முத்துசாமி சித்தர்
அச்சிறுப்பாக்கம் டூ கயப்பாக்கம் சாலையில் 8 கி.மீ.தூரத்தில் நடுப்பழனி முருகன் கோவில் உள்ள குன்று இருக்கிறது.இந்த முருகன் கோவில் வெளியே சன்னதிக்கு வடபுறம் முத்துச்சாமி சமாதி மண்டபம் இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

Collection of agathiar photos

Chanakya quote about fear , angry , envy and hatred

Best quotes from Chanakya

Agathiar photos

Collection of agathiar photos

Tuesday 16 February 2016

Rudraksha from 1 face to 14 face / 1 mukhi to 14 mukhi

If anyone interested and do let us know via email sitthanarul@gmail.com.

Triphala - medicine for all diseases

திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து

இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம். அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு உடலும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும். உடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் விளங்குவதற்கு, அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் செய்து வர வேண்டும். முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில் மிகவும் வசதியான முறையில் வாழ்கிறோம். ஆனால், மனதளவில் மிகவும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்கிறோம். இத்தகைய வாழ்க்கை முறை சீக்கிரமாகவே முதுமையாக உணர வைத்து விடும் அல்லது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

திரிபலா என்றால் என்ன?

திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும்.

திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?

திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.

நோய் எதிர்ப்புச் சக்தி

ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் 'ஆன்டிபாடி' (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான "கட்டற்ற காரணிகளை" (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.

செரிமானமின்மை

செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.

மலச்சிக்கல்

திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.

வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்

வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.

இரத்தசோகை

இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).

சர்க்கரை நோய்

திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.

உடல்பருமன்

இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.

சருமப் பிரச்சனைகள்

இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.

சுவாசக் கோளாறுகள்
சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.

தலைவலி

தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.

புற்று நோய்

புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.