AimShreemHreem - Secret of Successful Peopl

AimShreemHreem - Secret of Successful Peopl
Click Here

Monday 24 April 2017

சத்துரு மாரணம்-அகத்தியர்

சத்துரு மாரணம்-அகத்தியர்

செயமாகச் சத்துரு மாரணத்தை கேளு
செப்புகிறேன் யவசிவய வென்று மாறு
பயமாகிச் சத்துருவும் மயங்கிப் போவான்
... 
பஞ்சதனிற் அக்கினிபோல் பற்றும் பற்றும்
நயமாக மாறி நிற்பதாரை யென்றால்
நல்லோரை தூஷணிப்போர் நன்மையில்லோர்
மயமான சீவசெந்தை அழித்தோர் தன்னை
மாரணிப்பாய் புலத்தியனே மனதிற்காணே.

-அமுத கலைஞானம்
விளக்கம்:
                                            எதிரி மாரணதை சொல்கிறேன் கேள்,முதலில் "யவசிவய" என்னும் 
இம்மந்திரத்தை 1008 உரு செபித்து சித்திசெய்து கொள்ளவும்.பின்னர் தேவை ஏற்படும் போது உன் முச்சை நன்றாக இழுத்தடக்கி எதிரியை பார்த்துஇம்மந்திரத்தை மனதால் செபித்தால் சத்துரு மயங்கிப் போவான். பஞ்சில் தீ பற்றுவது போல் இம்மந்திரத்தின் ஆற்றல் அவனை மாரணித்து விடும்.இம்மந்திரத்தை யாரிடம் பிரயோகிக்க வேண்டும் என்றால் நல்லவர்களை அவமதிப்பவர்கள், தீயோர்கள், உயிர்களை அழித்த பாவிகளிடம் பிரயோகிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.

அனுமந்தர் வசிய மந்திரம்

அனுமந்தர் வசிய மந்திரம்


ஓம் ராம் அனுமந்தா ஓங்கார அனுமந்தா ஆங்கார அனுமந்தா 
ஊங்கார அனுமந்தா அஞ்சனாதேவிபுத்திரா அரிராம தூதா 

அகோரவீரா அங் இங் ராம் அனுமந்தா வருக வருக 
வசி வசி சுவாகா. 
 

இம்மந்திரத்தை அனுமந்தர் சிலை வைத்து துளசி மாலை 
அணிவித்து கிழக்கு நோக்கி அமர்ந்து 48 நாட்களில் லட்சம் 
உரு செபிக்க சித்தியாகும். 
                                             

செபிக்கும் முறை
 

மிகவும் சுத்தமாய் தூய்மையான இடத்தில் அமர்ந்து செய்யவும்.
மந்திரம் செபிக்கும் 48 நாட்களும் தனி அறையில் படுக்கவேண்டும் 
தீட்டு பட்டவர் பார்க்காதவாறு நம்மீது அவர்கள் ஒட்டாமலும் செபிக்கவேண்டும்.பெண்கள் சகவாசம்,மது,மாமிசம்,புகையிலை 

போன்ற பழக்கம் இல்லாமல் இருக்கவேண்டும்.
 

மந்திரம் செபிக்க தொடங்கியதும் இடையில் நிறுத்தக்கூடாது நிறுத்தினால் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதை 
கவனத்தில் கொள்ளவும். 
                                இம்மந்திரத்தின் பலன்
 

இம்மந்திரத்தை முறையாக செபித்தவருக்கு எதிரிகாளால் எந்த துன்பமும் ஏற்படாது.சகல காரியமும் சித்தியாகும்.
அனுமந்த உபாசகரை கண்டாலே பேய் பிசாசு பில்லி சூனியம் 
சகலமும் மிரண்டு ஓடிவிடும் அனுமந்த உபாசகரை எதிர்த்தவன் 
பல துன்பங்களுக்கு ஆளாகி தொலைந்து போவான்.