AimShreemHreem - Secret of Successful Peopl

AimShreemHreem - Secret of Successful Peopl
Click Here

Sunday 29 December 2019

அனைத்தையும் தீர்க்கும் மாந்திரீக தந்திர ரகசியங்கள்

அனைத்தையும் தீர்க்கும் மாந்திரீக தந்திர ரகசியங்கள்
(share) செய்யுங்கள்)
(1) கொடுத்த கடன் தொகைகள் திரும்ப கிடைக்காமல் இருப்பின்-ஆண்கள் தொடர்ந்து புதன்கிழமைகளில் காலை 6 மணிக்கு முன்னர்சவரம் செய்து வர கடன் வசூலாகும்.
(2) வியாபாரம் மற்றும் குழந்தைகள் கல்வியில் தடைகள் ஏற்பட்டால் ஆன்மீக புத்தகங்களை அச்சிட்டு இலவச விநியோகம் செய்ய தடைகள் விலகும்.
(3) சிவன் கோவிலுக்கு தொண்டுகள் செய்ய அரசாங்கத்தால் வியாபாரத்திற்கு ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.
(4) நவதானியங்களை மஞ்சள் துணியில் முடிந்து கடை / ஆபீஸ் வாசலில் கட்டி,கல்லாவிலும் போட்டு வைக்க வியாபாரம் நஷ்டம் என்பதே இருக்காது.
(5) பூர்வீக சொத்து கிடைக்க வீட்டிலேயே திருச்செந்தூர் முருகன் படம் வாங்கி வைத்து செவ்வாய் தோறும் செவ்வரளி பூவால் 27 வாரங்கள் (செவ்வாய்ககிழமைகள் மட்டும்) அர்ச்சித்து வர கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்கும்.
(6) சித்திரை நட்சத்திரத்தில் விரதமிருந்து முருக பெருமானையும் வள்ளியையும் வழிபட காதல் முயற்சிகள் கை கூடும்.
விளக்கு ஏற்றும் விதம்
(7)தாமரைத் தண்டு நார் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும்
(8)வாழைத் தண்டு நார் திரி போட்டால் குல தெய்வ குற்றம் சாபம் போகும், நாம் செய்த தெய்வ குற்றத்தை விலக்கி சாந்தி தரும்
(9)புது மஞ்சள் சேலை துண்டில் திரி போட்டால் தாம்பத்ய
புது வெள்ளை வஸ்திரத்தில் பன்னீர் விட்டு நனைத்து காய வைத்து திரி போட்டால் லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு ,மூதேவி விலகிவிடும்
(10)சிகப்பு துணி திரி போட்டால் திருமணத் தடை மலடு நீங்கும்
(11)பஞ்சு பருத்தி திரியினால் விளக்கேற்றினால் அனைத்து நலனையும் தரும்
(12)கணபதிக்கு தேங்காய் எண்ணெயினால் விளக்கு ஏற்ற வேண்டும்
(13)மகாலட்சுமிக்கு பசும் நெய்யிணால் விளக்கு ஏற்ற வேண்டும்
(14)பராசக்திக்கு வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்ற வேண்டும்
(15)குல தெய்வத்திற்கு வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்ற வேண்டும்
(16)நெய், விளக்கெண்ணை ,வேப்ப எண்ணெய் ,இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கு ஏற்றி ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் தொடர்ந்து வழிபட்டால் தேவியின் அருள் கிடைக்கும்; நினைத்தது நடக்கும்; மந்திர சக்தி கிடைக்கும்
(17)நல்லெண்ணெயில் விளக்கேற்றினால் சகல பீடைகளும் விலகும்
(18)விளக்கெண்ணையில் விளக்கேற்றினால் உறவு காரர்களால் சுகம் உண்டாகும்
(19)வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்றுவதால் செல்வம் உண்டாகும்
(20)ஐந்து முகம் வைத்து விளக்கேற்ற செல்வத்தைப் பெருக்கும்
கிழக்கு திசை – நோக்கி விளக்கேற்றினால் துன்பம் கடன் பகை விலகும்
வடக்கு திசை – நோக்கி விளக்கேற்றினால் சர்வ மங்களம் திரவியம் கிட்டும்
மேற்கு திசை – நோக்கி விளக்கேற்றினால் கடன் இராது சனி தோஷம் விலகும்
அதிகாலை 03.00 மணிமுதல் அதிகாலை 05.00 மணிக்குள் பிரம்ம முகூர்த்தம் விளக்கு ஏற்றினால் வீட்டில் சர்வ மங்களமும் உண்டாகும்;
வேலை வேண்டுவோர்;நல்ல கணவன் வேண்டுவோர்;
குடும்ப சுகம் புத்ர சுகம் வேண்டுவோர்;
சாயங்கால வேளை தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட இப்பலனை அடையலாம் 

சகலத்திர்கும் கட்டு மந்திரம்

சகலத்திர்கும் கட்டு மந்திரம் …
*****************************

"ஓம் பஹவதி ப்ய்ரவி
என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு
கடுகென பட்சியை கட்டு மிருகத்தைகட்டு
ஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரி
அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு
சத்ருவை கட்டு எதிரியை கட்டு
எங்கேயும் கட்டு
சிங்க் வங்க் லங்க் லங்க்
ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம"
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாமே நம: ஸ்வாஹா"

இந்த மந்திரத்தை உதடு அசையாமல் நாக்கு உச்சரிக்காமல் மனதிற்குள் ஆழமாக, மிக ஆழமாக இருபது நிமிட நேரம் தொடர்ச்சியாக சொல்லுங்கள். சில நாட்களிலேயே உங்கள் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படுவதை அறிவீர்கள். மந்திரம், மாயம் என்று நம்புபவர்கள், தன்னம்பிக்கை இல்லாத கோழைகள் என்று சிலர் சொல்லலாம். அதற்கான பதிலை தேடி மனதை அலையவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆற்று சுழலில் அகப்பட்டு வெளியில் வர முயற்சிப்பவனுக்கு கையில் கிடைக்கும் கட்டை போன்றது இந்த மந்திரம். இதை பற்றிக் கொண்டால் கரைசேரலாம் என்று சவால்விட்டு சொல்கிறேன். 

Wednesday 28 August 2019

துஷ்டர்களின் செய்கை துஷ்ட ஆவிகளின் செய்கை நம்மை அணுகாதிருக்க உடற்கட்டு சுப மந்திரம்


நம் குடும்பத்தில் அசுப தசா புக்திகள் நடக்கும் சமயம், துஷ்ட சக்திகள் நம்மையோ நம் சந்ததிகளையோ ஆட்கொண்டு ஆட்டிபடைக்கும்.  அச்சமயங்களிலும் சரி, அவைகளனுகாதிருக்கவும், விடுதலைப் பெறுவதற்கும் உண்டான " உடற்கட்டு சுபமந்திரம் "  இம் மந்திரத்தை தாமும் தம் பிள்ளைகளும் மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு, விபூதி 1 சிட்டிக்கை எடுத்து கீழ்வரும் மந்திரத்தை மும்முறை சொல்லி நெற்றியில் அணிந்து கொண்டு படுக்கைக்கு சென்றால் மேற்கண்ட துஷ்ட சக்திகள் ஏணையோரையும் அணுகாது. 

சுபமந்திரம்

ஓம்சக்தி சிவசக்தி சாமுண்டிபரமேஸ்வரி 
ஐயுங்கிலியும் சௌவும் ஆகாயத்தைக் கட்டினேன், 
சௌவுங் கிலியும் ஐயும் பாதாளத்தைக் கட்டினேன், 
எட்டுதிசையும் பதினாறு கோணமும் ஈஸ்வரனைக் கொண்டு கட்டினேன், கண்ணுடன் சிரசைக் கணபதியால் கட்டினேன், கண்டமும் உடலும் கந்தசாமியால் கட்டினேன் 
மற்றவை துஷ்டவை மகாதேவனால் கட்டினேன் 
என் உடலையும் உயிரையும் உன் உயிராய் கட்டினேன் 
என்கட்டே கட்டு என்கட்டு உன் கட்டாக நிற்க சுவாஹ: 

என்று சொல்லவும். இதற்கு பூஜாவிதிமுறைகள் ஏதுமில்லை. ஸ்லோகங்கள் போலவே இதுவும்

Tuesday 20 August 2019

கோரக்கர்

18 சித்தகளில் பத்தாவது சித்தர் கோரக்கர் ஆவார்

கோரக்கர்
 குரு:தத்தாத்ரேயர், மச்ச முனி, அல்லமா பிரபு
காலம்:880 ஆண்டுகள், 32 நாட்கள்

சீடர்கள்:நாகர்ஜூனா

சமாதி:போயூர்

மச்சமுனியின் அருளால் கோசாலையில் இருந்து அவதரித்தவர். அல்லமாத்தேவரிடம் போட்டியிட்டு தன்னையும் விஞ்சியவர் அல்லமாத்தேவர் என்பதை உணர்ந்து அவரிடம் அருளுபதேசம் பெற்றார்.போயூர் என்ற இடத்தில் சமாதி அடைந்தார்

கோரக்கர் சித்தரின் வரலாறு

மனித வாழ்வில் ஏற்படும் முதுமைக்கும் உடலின் தளர்ச்சிக்கும் எது காரணம் என ஆராய்ந்து உடம்பினை என்றும் இளமையாய் அழகாய் இருக்க உதவும் காய கல்பத்தைக் கண்டு பிடித்தவர். கோரக்கர் 80 வயது வரை வாழ்ந்த வட இந்தியர் என கூறப்படுகிறது. கார்த்திகை மாதம் ரோகினி நட்சத்திரம் 2ம் மாதத்தில் பிறந்ததாக நூல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய நாட்டின் தென் வட மாநிலங்களிலும், சீன நாடு முதலிய கீழ் நாடுகளிலும் கோரக்கர் வரலாறு அறியப்பட்டுள்ளது. பதினெண் சித்தர்களில் 16வது இடத்தில் உள்ளவர் கோரக்கர் சித்தர் ஆவார். மச்சேந்திர சித்தரின் மாணாக்கர் கோரக்கர் என்று கூடச் சொல்லலாம். மச்சோந்திரரிடம் இலக்கணங்களோடு ஞான நெறியும் கற்று குருகுலவாசம் இருந்தவர். நாகப்பட்டினம் அருகே வடக்கு பொய்கை நல்லூரில் கோரக்க சித்தர் ஆலயம் உள்ளது. நாள்தோரும் 3 காலபூசைகள் இந்த ஆலயத்தில் நடந்து வருகின்றன.

 நாள்தோரும் ஒவ்வொரு சித்தராக ஆண்டு முழுவதும் தொடர்ந்து சித்தர் பலர் இவ்விடம் வந்து கோரக்கரை வழிபட்டுச் செல்வதாக மரபு உள்ளது. கோரக்கர் எழுதிய நூல்கள்: நமநாசத்திறவு கோல் முக்திநெறி பிரம்மஞானம் மலைவாகடம் கற்பம் அட்டகர்மம் சந்திரரேகை வகாரசூத்திரம் கண்டகம் ஞான சோதி கற்பசூத்திரம் கல்ப போதம் ரச மேகலை மரளி வாதம் மூலிகை முத்தாரம் காளிமேகம் கோரக்கர் பொய்கை நல்லூரில் சமாதி கூடியகாலம் கி.பி. 1233ம் ஆண்டாகும். இவர் பட்டினத்தார் காலத்திற்குப் பின்னும் வாழ்ந்திருந்தார் எனக்கூறப்படுகிறது.

கோரக்கரின் ஜீவசமாதி இடங்கள்: 
1. பொதிய மலை 
2. ஆனை மலை 
3. கோரக் நாத்திடல் (பாண்டிய நாடு) 
4. வடக்கு பொய்கை நல்லூர் 
5. பரூரப்பட்டி (தென் ஆற்காடு) 
6. கோரக்கர் குண்டா (சதுரகிரி) 
7. பத்மாசுரன் மலை (கர்நாடகம்) 
8. கோரக்பூர் (வட நாடு) 

இவற்றில் வடக்கு பொய்கை நல்லூர் மற்றும் படூர்பட்டி ஜீவசமாதிகள் பற்றி கோரக்கரே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பொதிய மலை ஆனைமலை சமாதிகள் பற்றி அறிய முடியவில்லை. கோரக்நாத்திடல் மானாமதுரை அருகே வந்தமனூர் என்ற இடத்திலுள்ளது. அங்குள்ள கோரக்கர் சமாதிக்கு சித்ரா பௌர்ணமியன்று பொங்கலிட்டு படையல் செய்து வழிபட்டு வருகின்றனர்.

 உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட கோரக்நாத் மந்திர் என்ற சமாதி கோவில் அமைந்துள்ளது. ஐப்பசி பௌர்ணமி நாளில் சமாதி கூடிய இவர் அன்றைய தினம் வழிபடுபவர்க்கு (வடக்கு பொய்கை நல்லூரில்) இன்றும் வரம்பல அருளும் பேரருளாளர்.

கோரக்கர் சித்தரின் வாழ்க்கை சித்த புருஷர்களில் பிறப்பிலேயே விசேஷமான தன்மை கொண்டவர். விபூதி எனில் சாம்பல் என்று ஒருபொருளும், ஞானம் என்று மறுபொருளும் உண்டு. அப்படிப்பட்ட விபூதியிலிருந்து பிறந்தவர் இவர், என்பார்கள். ஆணும் பெண்ணும் கூடி அந்தக்கருவால் வளரும் உயிர்கள் கருமஞ்சார்ந்தவை... ஆனால் அவ்வாறு இல்லாமல், விதிவிலக்காக பல மனித உயிர்களும் தோன்றியுள்ளன. அப்படி விசேஷமாகப் பிறந்தவர்களுக்கு ஒரு பெரிய கடமை இந்த உலகத்தில் காத்திருந்தது. இந்தப்பட்டியலில் கோரக்கரையும் இவரது குருவான மச்சமுனியையும் சேர்க்கலாம்.

 மச்சமுனியும் சரி, கோரக்கரும் சரி சிவாம்சத்துடனும் முழுமையான சிவனருளோடும் பிறந்தவர்கள்! அதிலும் மச்சமுனியின் பிறப்பு மிக விசேஷமானது. 

தடாகம் ஒன்றின் கரையில் சிவபெருமான் உமாதேவியாருடன் பிறப்பு மற்றும் இறப்பு பற்றியும் உயிர்களின் தோற்றம் மாற்றம் பற்றியும் பலவாறாக பேசியபடி இருக்க, அதைக் கேட்டபடி இருந்த உமா தேவிக்குக் கண்ணயர்ச்சி ஏற்பட்டு உறக்கம் வந்து விட்டது. ஆனால், தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்த தாய் மீன் ஒன்று, அதைக் கேட்டபடி இருந்தது. மீனுக்கு ஏது காது?அதற்கு ஏது மொழியறிவு? அதனால் எப்படிக் கேட்க முடியும்? _ என்ற கேள்விகள் எல்லாம் இன்றைய விஞ்ஞான பாதிப்பு நமக்குள் மூட்டுபவை. ஆனால் இந்த சம்பவங்களை அன்றைய நாளில் எழுதி வைத்தவர்கள், இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் கேட்கத் தெரியாதவர்கள் அல்லர். ஆனால், அவர்களுக்கெல்லாம் பிறர் கூற வேண்டிய அவசியமே இன்றி இதற்கெல்லாம் விடைகள் தெரிந்திருந்தன. எங்காவது பட்சிகள் பேசினால், நாகங்கள் காவல் பணிகளில் இருந்தால் அவை, பட்சி வடிவம் கொண்ட ஒரு தேவன் என்றோ தேவதை என்றோதான் கருதினார்கள்.

 அவர்கள் வரையில் அவ்வாறு பட்சியாகவும் நாகமாகவும் தேவர்கள் இருக்க நிச்சயம் ஒரு காரணம் இருந்தது. 
அந்தத் திருக்குளத்து மீனும் கூட மீன் வடிவத்தில் இருந்த ஒரு தேவதை போலும்... அந்த தேவதை மீனின் வயிற்றில் ஒரு குஞ்சு மீன்! அந்த மீன், கொடுத்து வைத்த மீன். கருவில் திருகொண்ட மீன். உலக நாயகன், உலகநாயகிக்குக் கூறிய உபதேச மொழிகளை முழுவதுமாகக் கேட்க கொடுத்து வைத்திருந்த மீன் அது. 'என்று ஒரு தேவ குரலை அது செவி மடுக்கிறதோ, அன்று அதற்கு சாபவிமோசனம்' என்று இருந்திருக்க வேண்டும். அந்தக் குஞ்சு மீன், ஒரு பாலகனாய் மாறி உமாதேவன் முன்னால் காலை உதைத்துக் கொண்டு அழுதது. தாய்மீனும் மானிட வடிவம் கொண்டு ஓடிவந்து அணைத்துக் கொண்டு, அப்படியே உலக நாயகன் நாயகி காலில் விழுந்தாள். 

மச்சமாய் இருந்து, இறை உபதேசம் கேட்டு பிறந்ததால் மச்சேந்திரநாதன் என்ற திருப்பெயரும் ஏற்பட்டது. கூடவே, அந்த ஈஸ்வரனின் பரிபூர்ண கிருபா கடாஷமும் மச்சேந்திரனுக்குக் கிட்டியது! இப்படி பிறக்கும் போதே சித்த நிலை கொண்டு பிறந்தவர் மச்சேந்திரர் என்கிற மச்சமுனி. இவரால் கோரப் பெற்றவர்தான், கோரக்கர். எப்படி? மச்சமுனி ஒருநாள், பிட்சை கேட்டு வந்தபடி இருந்தார். உடம்பை வளர்த்தால்தானே உயிரைப் பேண முடியும்? உடம்பு வளர உணவு வேண்டுமே..? பசியும் தாகமும் உடம்போடு ஒட்டிப் பிறந்ததாயிற்றே... அல்ப வித்தைகளால், காற்றை மட்டுமே ஆகாரமாகக் கொண்டு உயிர் வாழ முடியும்தான்... மச்சமுனியோ, அதைப்பிறகு பார்த்துக் கொள்ளலாம். சிறிது காலம் பிட்சை கொண்டு உடம்பைப் பேணுவோம் என்று முடிவு செய்து விட்டார். இப்படி சித்த புருஷர்கள் மனதில் பிட்சை கேட்கவேண்டும் என்று தோன்றுவதற்குப் பின்னால் ஒரு கணக்கு உள்ளது. அவர்கள் அப்படிப் பிட்சை கேட்டு வரும் போது, பிட்சையிடும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைக்கிறது என்றால், அதற்குப் பின்னாலும் ஒரு கணக்கு உள்ளது. 

நல்ல சாஸ்த்ர ஞானம் உள்ளவர்கள் குரு தரிசனத்தை இருள் விலகப்போகிறது என்பதற்கான முன்னோட்டமாகவே பார்ப்பார்கள். அதேபோல அவர்களுக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பை, கர்மத்துயரத்தை விலக்கக் கிடைத்த ஒரு மறைமுக சந்தர்ப்பமாகவே கருதுவார்கள். ஆனால் சராசரிகளோ, சித்த புருஷர்களை பிச்சைக்காரர்களாகவே பார்ப்பார்கள். 
மச்சமுனி பிச்சை கேட்டு வரும்போது, ஒரு மாதரசி கூட அப்படித்தான் பார்த்தாள். அவளுக்கோ பிள்ளைப் பேறு இல்லை. அவள் ஜாதகம் அப்படி... அதனால் அவள் முகத்தில் சதா சர்வ காலமும் ஒரு துக்கம். இந்த நிலையில்தான் மச்சமுனி அவள் எதிரில் நின்றபடி பிச்சை கேட்டார். அவளும் அலுப்புடனேயே பிட்சை இட்டாள். 

பிட்சை இட்டால் காலில் விழுந்து வணங்க வேண்டும். வணங்கும்போது சித்த சன்யாசிகள் ஆசிர்வதிப்பார்கள். அவள் மனம் துயரத்தில் இருந்ததால், அவளுக்கு வணங்கத் தோன்றவில்லை. பேசாமல் திரும்பி நடந்தாள். ''நில் தாயே..'' _ தடுத்தார், மச்சமுனி. அவளும் திரும்பினாள். ''பிட்சையிட்ட நீ வணங்க வேண்டாமா?'' _ மச்சமுனிதான் கேட்டார். ''நான் வணங்க நீர் என்ன தெய்வமா?'' _ அவள் கேள்வியில் அஞ்ஞானம் கொடி கட்டிப் பறந்தது. மச்சமுனியின் முக்கால ஞானத்திற்கோ நொடியில் அவள் நிலைப்பாடு விளங்கி விட்டது. ''தாயே... என்போன்ற சித்த சன்யாசிகளும் கடவுள் தானம்மா..'' என்றார். ''அப்படியானால், எனக்குப் புத்திரபாக்யமில்லை. உம்மால் தர இயலுமோ?''_அவளிடம் இருந்து கோரிக்கை துள்ளி வந்து விழுந்தது. உடனேயே புன்னகையுடன் சிவநாமத்தை ஜெபித்து, ஒரு சிட்டிகை விபூதியை அவளுக்குத் தந்தார் மச்சமுனி. '

'இதை சிவநாமம் கூறி நீ உண்பாயானால் உனக்கு பிள்ளைப் பேறு உண்டாகும்...'' ''இது சாம்பல்.. இது எப்படி எனக்குப் பிள்ளைப்பேறு தரும்?'' ''சாம்பல் தானம்மா... இருந்தாலும் 'இதை நீ உண்டால் பிள்ளைபேறு பெற்றிடுவாய்.. ஒருநாள், நான் அந்த பாலகனைக் காண நிச்சயம் திரும்பவும் வருவேன்'' என்று கூறியபடியே பிட்சைப் பொருளுடன் திரும்பி நடந்தார். பார்த்துக் கொண்டேயிருந்தாள், பக்கத்து வீட்டுக்காரி, ஓடி வந்தாள். ''கையில் என்ன?'' கேட்டாள். ''விபூதி..'' கோ சாலை நோக்கி நடந்தபடியே பதில் சொன்னாள் அந்தப் பெண். ''இது விபூதியல்ல. அவனும் ஒரு மாயாவி. இதை நீ உண்டால் மயங்கக் கூடும். திரும்பவந்து உன்னை அவன் அபகரிக்க கூடும். இதை வீசி எறி..'' _அவள் கூறிட, அந்த பெண்ணும் உடனே கோசாலையாகிய மாட்டுத் தொழுவத்தில் எருமுட்டைகள் கொண்டு மூட்டப்பட்ட வென்னீர் அடுப்பில் அந்த விபூதியைப் போட்டுவிட்டு, கைகளையும் தட்டி உதறிக்கொண்டாள். 

அவள் விதி அந்த விபூதியின் வழியை மாற்றி விட்டது. கிட்டுவதே கிட்டும், ஒட்டுவதே ஒட்டும் என்று ஆன்றோர்களும் காரணமில்லாமலா கூறிச் சென்றனர்? சில காலம் சென்றது. மச்சமுனி, முன் சொன்னது போல திரும்பி வந்தார். அந்தப் பெண்ணிடம், ''விபூதியால் பாலகன் பிறந்தானா, எங்கே அவன்?'' என்று கேட்க, அவளிடம் தடுமாற்றம். திக்கினாள், திணறினாள். ''உங்களை மாயாவியாக நான் எண்ணி விட்டதால், கோவகத்து அடுப்பில் அந்த விபூதியை வீசி விட்டேன். அதுவும் சாம்பலோடு சாம்பலாகி விட்டது..'' என்றாள். உடனே அந்த அடுப்பின் முன் சென்று நின்றவர் மனம் வருந்தினார். ''தாங்கள் கடவுள் என்றால், அந்த அடுப்புச் சாம்பலில் இருந்து கூட ஒரு உயிரை உருவாக்க இயலுமே''_என்று சந்தேகத்தையே முன் நிறுத்தினாள். 

மச்சமுனி அதைக்கேட்டு சினமுற்றார். சித்தன் வாக்கு பொய்க்கக் கூடாது. எந்த விபூதியால் ஒரு பிள்ளை பிறக்கும் என்றேனோ அந்த விபூதியால் நிச்சயம் பிள்ளை பிறக்கும். உன் கருப்பைக்குள் வளரத்தான் உன் கர்மம் இடம் தரவில்லை. ஆனால், கோசாலையாகிய இந்த கோவகம் அதற்கு இடமளித்துவிட்டது. நான் சிவசித்தன் என்பது சத்யமானால், இந்த கோவகம் ஒரு கோவகனைத்தரட்டும். நான் கோருவதால் வரப்போகும் பிள்ளை, கோவகன் மட்டுமல்ல, கோரகனும் கூட. கோவாகிய பசுவுக்கு உள்ள இரக்கம் இவனிடமும் இருக்கப் போவது சத்யம். அதனால், இவன் கோ இரக்கனும்கூட. முக்கண்ணன் அருளால் நான் மச்சத்தில் இருந்து உதித்து மச்சமுனியானது போல, என்னுள்ளில் இருக்கும் அந்த முக்கண்ணனே மூன்று நாமங்களை இவனுக்குப் பிறக்கும் முன்பே அளித்துவிட்டான். 

அந்த நாமங்களைக் கூறி அழைக்கிறேன்... கோவகனே... கோரகனே... கோ இரக்கனே... சிவமுனி அழைக்கிறேன் வா...'' என்று உணர்ச்சி மிகுதியோடு அழைத்திட, கோரக்கரும் அந்த சாம்பலுக்குள் இருந்து ஒரு பாலகனாய் வெளிப்பட்டார். 
பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி, கோரக்கன் இப்படி எழுந்து வந்த நாள், ஒரு கார்த்திகை மாதத்து அவிட்ட நட்சத்திர நாளாகும்... இச்சம்பவம் நிகழ்ந்த ஊர், வடபொய்கை நல்லூர். அதன்பின் கோரக்கர், மச்சமுனியின் திருச்சீடராக அவர் செல்லும் இடமெல்லாம் சென்றார். குருசேவையை தன் வாழ்வின் கடப்பாடாய் கொண்டார். இப்படி அவர் சேவை செய்த நாளில் எவ்வளவோ சோதனைகள்.. அவைகளை சாதனைகளாக ஆக்கிக் காட்டினார். அதில் ஒன்று, குருவுக்காக கண்ணையே இழந்த படலம். ஒருநாள், குருவுக்கும் சேர்த்து பிட்சை கேட்கச் சென்றபோது, ஒரு பார்ப்பனப் பெண் நெய்யில் பொரித்த வடையை பிட்சையாக இட்டனள். வாசம் மணக்கும் அந்த வடை, புலன்களை அடக்கி ஆள வேண்டிய கோரக்கர் நாவில் நீர் ஊறச் செய்தது. இருந்தும் அடக்கிக்கொண்டு, அதை குருபிரசாதமாக்கினார். மச்சமுனியும் அந்த வடையை உண்டு, அதன் ருசியில் மயங்கி விட்டார். வந்தது ஆபத்து.. 

பண்ட ருசி என்பதும் உலக மாயையில் ஒன்று. ஒரு ருசி ஒருமுறை ஒருவருக்குள் புகுந்தால் பலமுறை அதற்காக ஏங்க வைத்துவிடும். நம்பேச்சை உடல் கேட்டது போக அதன் பேச்சை நாம் கேட்கும் நிலை தோன்றி விடும். மகாஞானியான மச்சமுனிக்கு மீண்டும் வடைதின்னும் ஆசை தோன்றிவிட்டது. சீடன் கோரக்கனிடம் 'எனக்கு மேலும் வடை தேவை' என்றார். கோரக்கரும் பார்ப்பனப் பெண்ணிடம் சென்று வடை கேட்டார். அவளோ அனைத்தும் தின்று தீர்ந்தாகிவிட்டது என்றாள். 'சுட்டுத்தாருங்கள் தாயே' என்று மன்றாடினார். ''ஏலாதப்பா...! எனக்கு களைப்பாக உள்ளது. உரிய பொருட்களும் இல்லை..'' என்றாள், அவள். ''இது குருவின் விருப்பம். உயிரைத் தந்தாகினும் நான் ஈடேற்ற வேண்டும்'' என்றார், கோரக்கர். ''உன் குருவுக்கு ஏன் இப்படி ஓர் அற்ப ஆசை. நான் முன்பே வடை பொரிக்கும்போது எண்ணெய் தெரித்து கண்ணில்பட்டு கண்போகத் தெரிந்தது. நல்லவேளை தப்பித்தேன். இனியருமுறை வடைபொரிக்கும்போது, எனக்கு கண் போனால், நீ என்ன உன் கண்களை பிடுங்கியா தருவாய்?'' _ எகத்தாளமாய் கேட்டாள். 

''அதற்கென்ன தந்தால் போச்சு..'' என்ற கோரக்கர், அடுத்த நொடியே நெய்வடைக்காக தன் மெய்க்கண்கள் இரண்டையுமே பறித்து, தந்துவிட, அந்தப் பெண்மணி அரண்டுபோனாள். அடுத்த நொடி, கோரக்கரின் குருபக்திக்காகவே சுடச்சுட நெய்வடை பொரித்துத் தந்தாள். கோரக்கரும் முகத்தை மூடியபடி வந்து வடையைத்தர மச்சமுனியும் உண்டுவிட்டு, கோரக்கர் முகத்தை மறைத்திருப்பதன் காரணம் அறியமுயல பகீரென்றது. ''கோரக்கா.. எனக்காக.. அற்பவடைக்காக உன் கண்களையா தந்தாய்?'' ''ஆம் ஸ்வாமி. வேறுவழி அப்போது தெரியவில்லை.'' ''அடப்பாவி.. இப்படி ஒரு குருபக்தியா?''_என்று கேட்டு, கோரக்கனை ஆரத்தழுவி ஆலிங்கனம் புரிந்த மச்சமுனி தன் தவ ஆற்றலால் மீண்டும் கண்களை தருவித்தார். 
கோரக்கரும் பார்வை பெற்றார். அதன் பின்னும் குருசேவை கோரக்கர் வரை தொடர்ந்தபடிதான் இருந்தது. மெல்ல மெல்ல மச்சமுனி மூலமாகவே சிவஞானபோதம் அறிந்தார்.

 காயகற்ப முறைகளை கற்றார். தன் உடம்பை உருக்கு போல ஆக்கிக் கொண்டார். இவரை ஒரு வாள் கொண்டு வெட்ட முனைந்தால் வாளே முனை மழுங்கும். இதனை உணர்த்தும் ஒரு சம்பவம் இவருக்கும் அல்லமத்தேவர் என்னும் சிவஞானிக்கும் இடையே நிகழ்ந்தது. அல்லமத்தேவர் ஓர் அபூர்வ ஞானி. மரங்கள் இவரைக் கண்டால் அசைந்து கொடுத்து மகிழ்ச்சி தெரிவிக்கும். பட்சிகள் இவரோடு பேசும். மொத்தத்தில் இயற்கையின் பல பரிமாணங்களில் அல்லமத்தேவர் அரசனாக விளங்கியவர். அல்லமத் தேவர் உடலோ வாளால் வெட்டுப்பட்டாலும் திரும்பவும் உடனே சீரானது. கோரக்கரே இவரை வெட்டியவர். தன்னிலும் விஞ்சிய ஞானி அல்லமர் என்று அறிந்து அவரைப் பணிந்து, அல்லமரின் வழிகாட்டுதலையும் பின் பெற்றார். இதை பிரபுலிங்கலீலை எனும் வரலாற்றில் விரிவாகவே அறியலாம். இப்படி சாம்பலில் தோன்றியவர் ஓங்கி வளர்ந்தார். பின்னாளில் பிரம்ம முனியின் நட்பு கிட்டியது. இருவரும் ஒன்றாகவே எங்கும் சென்றனர்... ஒட்டியே இருக்கும் இரட்டைச் சித்தர்கள் என்கிற பெயர் இதனால் ஏற்பட்டது.
"

சொல்லவே கோரக்கர் பிறந்த நேர்மை 
சுந்தரனார் வசிஷ்ட மகா ஷியாருக்கு 
புல்லவே காணக் குற ஜாதியப்பா 
புகழாகான கன்னியவள் பெற்ற பிள்ளை 
வெல்லவே அனுலோமன் என்னலாகும் 
வேதாந்த கோரக்கர் சித்து தாமும் 
நல்லதொரு பிரகாசமான சித்து " 
- போகர் 7000 -
கோரக்கர் வசிட்டரின் மகன் என்று போகர் தனது போகர் ஏழாயிரத்தில் குறிப்பிடுகிறார். சட்டை முனி, கொங்கணவர் போன்றோரின் நெருங்கிய நண்பாராக இருந்ததாய் தனது நூலான கல்ப போதம் என்னும் நூலில் குறிப்பிடுகிறார். புதுச்சேரி மாநிலத்திலுள்ள கோர்க்காடு என்ற ஊரில் இவர் தவம் செய்ததாகவும் அதனால் அந்த ஊருக்கு கோர்க்காடு என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப் படுகிறது. இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் படிப்பவர்களுக்கு எளிமையாகாவும் பொருள் புரிந்து கொள்ள இலகுவாகாவும் உள்ளது குறிப்பிட தக்கது. ஆகிய நூல்களை இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது. இவர் பேரூரில் சித்தியடைந்ததாக சொல்லப் படுகிறது.
அண்டசராசரங்களும் ஆதிகுருவாக விளங்கக்கூடிய அருள்குரு காகபுஜண்டரின் எண்ணற்ற சீடர்களுள் ஒருவர் கோரக்கர். 

இந்த சித்தர் கொல்லிமலையின் அதிபதியாவார் (கொல்லிமலையானது தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது). பதினெண்சித்தர்களில் மிகப்பெருமை பெற்றவர் இவர். பல ஆயிரம் ஆண்டுகள் ஆயுள் கொண்ட மிக உயர்ந்த உயிர்மருந்துகளைத் தயாரித்த சித்தர் இவர் மட்டுமே. அட்டமாசித்திகளையும் பூரணமாகப் பெற்றவர் இவர். "கஞ்சா" என்னும் மூலிகையை அடிப்படை குருமூலிகையாகக் கொண்டு மிக உயர்ந்த மருந்துகளைத் தயாரித்து வைத்தியம், வாதம், யோகம், மற்றும் ஞானம் போன்றவழிகளை உலகிற்குப் பூரணமாக உணர்த்தியவர் கோரக்கரே! எனவே தான் கஞ்சாவிற்கு கோரக்கர் மூலி என்கிற தனிப்பெயரொன்றுண்டு. பல சித்தர்கள் தேவரகசியங்களை வெளிப்படையாக ஓலைச்சுவடிகளில் எழுதிவைத்ததை அறிந்த பதினெண்சித்தர்களின் தலைவராக விளங்கக்கூடிய அகத்தியர், அனைத்து சித்தர்களையும் ஒன்றுகூடி அவர்கள் எழுதிய அனைத்து ஓலைச்சுவடிகளையும் கைப்பற்றி ஒரு பேழைக்குள் வைத்துப்பூட்டி ஒரு பெரும் பாறையில் வைத்து மூடிவிடும்படி கோரக்கருக்கு கட்டளையிட்டார். 

அவ்வாறே, அகத்தியரின் வார்த்தையை மதித்த கோரக்கர் பெரும்பாறையொன்றினுள் அனைத்து ஓலைச்சுவடிகளையும் அடைத்து மறைத்து வைத்துவிட்டு அதன் சாவியை மட்டும் (திறவு கோல்) தானே வைத்துக் கொண்டார். எனவே தான் தற்காலத்தில் சொற்ப அளவில் சித்தர் நூல்கள் உலாவிக் கொண்டு வருகின்றன. பிரம்ம சுவடிகளைக் காண விரும்பும் சித்தர்களுக்கு வசதியாக அவர்களுக்கு மட்டும் "சூட்சுமத்திறவுகோல்" மந்திரத்தை கோரக்கர் உபதேசித்தார். எனவே, இன்றளவும் குருமுகாந்திரமாக தீட்சை பெற்று சித்தரானவர்கள் கோரக்கரை வழிபட்டால்தான் சுருதியின் உண்மை நிலையை உணரமுடியும் என்கிற நிலை சித்தர்களின் சாபத்தால் விளங்கிவருகின்றது. 

கோரக்கர் குண்டம்: கொல்லிமலையில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் கோரக்கர் பல்லாயிரம் உயிர்மருந்துகளையும், சித்தர் குளிகைகளையும் தயாரித்து அவற்றினுடன் தான் ஞானத்தாலுணர்ந்த தேவரகசியங்களை ஓலைச்சுவடிகளில் எழுதி ஏழு பெட்டிகளை உருவாக்கி ஒவ்வொரு பெட்டியிலும் ஒவ்வொரு வகைப்பொருளாக அடைத்து அவற்றையெல்லாம் "கோரக்கர் குண்டம்" என்னும் ரகசிய இடத்தில் புதைத்து வைத்தார். 

கோரக்கரின் நூல்கள்: கோரக்கர் பலநூல்களை எழுதியுள்ளார், அவரது நூல்கள் பல வைத்தியம், வாதம், யோகம் மற்றும் ஞானம் என்னும் நான்கு பாடப்பிரிவுகளை அடிப்படியாகக் கொண்டதாகும். மானிடரால் கண்டுபிடிக்கப்பட்டு அச்சேரிய அவரது நூல்கள் பின்வரும் நான்கு நூல்கள் மட்டுமே. 
1. கோரக்கர் சந்திரரேகை. 
2. கோரக்கர் ரவிமேகலை. 
3. கோரக்கர் முத்தாரம். 
4. கோரக்கர் மலைவாகடம். 
கோரக்கரின் கர்மசித்தி மூலமந்திரம் " ஓம் க்லீம் ஸ்ரீம் ஸ்ரீகோரக்க தேவாய சர்வசித்தர் அனுகிரகாய தேவாய நமஹ " கோரக்கரின் ஞானசித்தி மூலமந்திரம் " ஞானபிரம்ம ரூபமயம் ஆனந்தசித்தி கர்மமயம் அமிர்தசஞ்சீவி ஔடதமயம் கோரக்கம் உபாஸ்மகே!"

கோரக்கர் சித்தர்
சாம்பலில் அவதரித்த கோரக்கர் சித்தர் கோரக்கர் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று போகர் கூறுகிறார். இவர் வட இந்தியாவை சேர்ந்த கோரக்கர் (மராட்டியர்) ஆயினும் தமிழ்நாட்டில் உள்ள சதுரகிரியை நோக்கி பயணம் செய்து போகரை தோழராகக் கொண்டார். சட்டைமுனி, கொங்கணர் இவருக்கு நெருக்கமானவர்கள். ஒரு சமயம் சிவபெருமான் கடற்கரையில் உமாதேவிக்கு தாரக மந்திரத்தை உபதேசித்த பொழுது தேவி சற்று கண்ணயர்ந்தாள். சிவபெருமான் உரைத்துக் கொண்டிருந்த தாரக மந்திரத்தை மீன் குஞ்சு ஒன்று கேட்டு மனித வடிவமாகியது. சிவபெருமான் அதற்கு மச்சேந்திரன் என்று பெயரிட்டு சிறந்த சித்தராக்கி ஞானத்தைப் பரப்புமாறு அருள்புரிந்தார். மச்சேந்திரன் தவம் புரிந்து சிறந்த சித்தரானார். இவர் ஒரு ஊரில் சென்றுகொண்டிருந்த பொழுது இவருக்கு பிச்சையிட்ட பெண் மனக்குறையோடு பிச்சையிட, மச்சேந்திரர் அப்பெண்ணிடம் உனக்கு ஏற்பட்ட துன்பம் யாது என வினவினார். அப்பெண் தான் மகப்பேறு இன்றி வருந்துவதை கூறினாள். மச்சேந்திரர் சிறிது திருநீற்றை கொடுத்து "இதனை நீ உட்கொள்வாயானால் மகட்பேற்றை அடைவாய்" என்று கூறிவிட்டுச் சென்றார். 

தான் திருநீறு பெற்ற செய்தியை அவள் அண்டைவீட்டுப் பெண்ணிடம் கூறினாள்.
அவளோ "உனக்கு விபூதி கொடுத்தவர் போலித் துறவியாய் இருந்தாலும் இருக்கலாம். எனவே நீ அவ்விபூதியை உட்கொள்ளாதே" என்று சொன்னாள். இதனால் அச்சமடைந்த அப்பெண் தான் பெற்ற திருநீற்றை அடுப்பில் கொட்டினாள். சில ஆண்டுகள் சென்றபின் மச்சேந்திரர் மீண்டும் அவ்வூருக்கு வந்தார். தான் முன்பொரு சமயம் பிள்ளைப் பேற்றிற்காக திருநீறு அளித்த பெண் வீட்டிற்கு சென்று "அம்மணி, உன்னுடைய மகனை நான் பார்க்க வேண்டும். அவனை அழைப்பாயாக", என்று கூறினார். பக்கத்துவீட்டு பெண் பேச்சைக் கேட்டு அன்புடன் அளித்த விபூதியை உண்ணாமல் அடுப்பில் போட்டுவிட்டு இப்பொழுது மகன் இல்லாமல் வருந்தும் நிலையை கூறி தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள் அப்பெண். மச்சேந்திரர் சரி அந்த விபூதியை எங்கு கொட்டினாய் என்று கேட்டார். அவளும் அந்த விபூதி இருந்த அடுப்பின் சாம்பலைக் காட்டினாள். 

மச்சேந்திரர் அடுப்பின் பக்கத்தில் நின்று "கோரக்கா" என்று கூப்பிட்டார். அடுப்பு சாம்பலில் இருந்து குழந்தை ஒன்று சித்தர் திருநீறு கொடுத்த காலம் முதல் இருக்கவேண்டிய வளர்ச்சியோடு வெளிப்பட்டது. அந்த கோதார அடுப்பின் சாம்பலில் இருந்து வெளிப்பட்டதால் கோரக்கர் என்று பெயரிட்டு சீடனாக ஏற்றுக் கொண்டார். 

ஒருநாள் கோரக்கர் ஒரு வீட்டிற்குச் சென்று பிச்சை கேட்டார். அந்த வீட்டுப் பெண்மணி ஒரு வடையை கொடுத்தாள். அந்த வடையை கோரக்கர் மச்சேந்திரருக்கு கொடுத்தார். வடையைத் தின்ற மச்சேந்திரர் மறுநாளும் அதே போன்ற வடை வேண்டும் என்று கேட்டார். கோரக்கரும் மறுநாள் வடை தந்த வீட்டிற்கே பிச்சை கேட்டு சென்றார். ஆனால் அப்பெண்ணோ வடை இல்லை என்று சொல்லி சாதம் போட்டாள். ஆனால் கோரக்கரோ தன் குருவிற்கு வடைதான் வேண்டும் என்று கேட்டார். அந்தப் பெண்ணிற்கு கோபம் வந்தது. எது இருக்கிறதோ அதைத் தானே போடமுடியும் என்றாள். உன் குரு வடை கேட்டதால் போயிற்று இதுவே உன்னுடைய கண்ணை வேண்டுமென்று கேட்டால் தருவாயா என்றாள். இதனைக் கேட்ட கோரக்கர் என்னுடைய குருநாதர் என் கண்ணைக் கேட்டாலும் தருவேன். அந்த கண்ணை நீயே பெற்றுக் கொண்டு வடையைக் கொடு என்று கூறி தன்னுடைய கண்ணை பெயர்த்து அப்பெண்ணிடம் கொடுத்தார். இதைக் கண்ட அப்பெண் அச்சம் கொண்டு உடனே இனிமையான வடைகளை நெய்யில் சுட்டுக் கொடுத்தாள். வடையை கோரக்கர் தம்முடைய குருவிற்களித்தார். 

வடைகளைச் சுவைத்த மச்சேந்திரர், கோரக்கரை பார்த்து உன்னுடைய கண் எங்கே என்று கேட்க கோரக்கர் நிகழ்ந்ததைக் கூறினார். கோரக்கர் தன் மேல் வைத்த அன்பை உணர்ந்த மச்சேந்திரர் இழந்த கண்ணை திரும்ப பெறுமாறு செய்தார். ஒரு சமயம் மச்சேந்திரர் மலையாள நாட்டிற்குச் சென்றார். அந்நாட்டு அரசி பிரேமலா என்பவளை மணந்து இல்வாழ்க்கை நடத்திவந்தார். இவர்களுக்கு மீனநாதன் என்ற குழந்தை பிறந்தது. இதனையறிந்த கோரக்கர் குருவை எப்படியும் அழைத்துக் கொண்டு வர வேண்டுமென்று மலையாள நாட்டை அடைந்தார். மச்சேந்திரரை பார்த்து குருவே புறப்படுங்கள் நாம் நமது இருப்பிடத்திற்குச் செல்வோம் என்று அழைத்தார். இவர்களுக்கு வழிசெலவிற்கு வேண்டும் என்று பிரேமலா ஒரு தங்கக் கட்டியை பையிலிட்டு கோரக்கர் அறியாமல் மச்சேந்திரரிடம் கொடுத்தார். இருவரும் செல்லும் வழியில் ஆங்காங்கே எதிர்பட்டவர்களிடம் இங்கே கள்வர்கள் பயமுண்டோ என்று கேட்டுக்கொண்டே வந்தார் மச்சேந்திரர். 

இதனை கவனித்த கோரக்கர், மச்சேந்திரருக்குத் தெரியாமல் அவருடைய பையிலிருந்த தங்கக்கட்டியை எடுத்து வெளியே எரிந்துவிட்டு அதற்கு பதிலாக ஒரு கல்லை வைத்தார். மச்சேந்திரர் தங்கக்கட்டி உள்ளதா என்று பையை திறந்து பார்த்த பொழுது தங்கத்திற்கு பதிலாக கற்கள் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். கோரக்கர் மீது கோபம் கொண்டார். "அடப்பாவி! நீ என்னுடைய பொருளை கைப்பற்றிக் கொண்டாயே. நீ எனக்கு சீடனில்லை. இனி நீ என்னுடன் சேராதே" என்று கூறினார். குருவை நல்வழிப் படுத்த நினைத்த கோரக்கர் ஒரு மலை மீது ஏறி சிறுநீர் கழித்தார். உடனே அந்த மலை முழுவதும் தங்கமலை ஆனது. கோரக்கர் குருவைப் பார்த்து தங்களுடைய பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். 

அறியாமையையால் உழன்ற மச்சேந்திரரை பிடித்திருந்த மாயை விலகியது. மனம் தெளிவு பெற்ற குரு, சீடரை வெகுவாகப் பாராட்டினார். ஆயினும் குருவைப் பிரிந்து கோரக்கர் தனியே சென்று தவம் புரிந்து அஷ்டமா சித்திகளையும், காய சித்திகளையும் பெற்றார். பின்னர், திருக்கையிலாயத்தை அடைந்து அங்கு அல்லமாதேவர் என்பவரை சந்தித்தார். கோரக்கர் அல்லமா தேவரிடம் நீங்கள் யார் என்று கேட்டார். அதற்கு அவர் இறந்து போகும் உடலில் பற்றுக்கொண்டுள்ளவரை மதித்து சொல்ல தக்கது ஒன்றுமில்லை என்றார். கோரக்கர் குருவின் அருளால் காய சித்தி பெற்று எக்காலத்திலும் அழியாத உடலை பெற்றவன் நான் என்றார். ஆனால் அல்லமரோ காய சித்தி பெற்றுள்ளதால் வாழும் நாள் அதிகமாகுமே அன்றி அது நிலைத்திருக்காது. ஆகவே அழியும் இந்த உடலை அழியா உடலாகக் கூறுவது வீண் என்றார். வீண் தர்க்கம் வேண்டாம் இதோ நிரூபித்து காட்டுகிறேன் என்று கூறி அல்லம தேவரிடம் கூர்மையான வாளினைக் கொடுத்து உன் தோள்வலிமையால் என்னை வெட்டு என்றார். அல்லமர் கோரக்கரை வெட்டினார். உடலின் மீது பட்ட வாள் 'கிண்' என்ற ஒலியுடன் தெரித்து அகன்றதே அன்றி அவர் உடம்பில் எந்த வித ஊறுபாடும் உண்டாக்கவில்லை. செருக்குடன் அல்லமரை கோரக்கர் நோக்கினார். அல்லமர் கோரக்கரை நோக்கி "சரி, உன் திறமையை நிருபித்து விட்டாய். 
இதோ இவ்வாளினால் உன் வலிமையுடன் நீ என்னை வெட்டு" என்று கூறினார். 

கோரக்கரும் அல்லமரை வாள் கொண்டு வெட்டினார். அவ்வாள் அல்லமரின் உடலில் புகுந்து வெளிப்பட்டது. மறுபடியும் வெட்டினார். காற்றை வெட்டுவது போன்று உடலினுள் புகுந்து வெளிவந்தது. தன்னைவிட மிக்க சக்தி பெற்ற அல்லமரை வணங்கி தன் பிழையை பொறுக்க வேண்டினார் கோரக்கர். இனியாகிலும் உடம்பிலுள்ள பற்றினை நீக்கி உனது உண்மை நிலையை அறிவாயாக என்று கூறினார் அல்லமர். இதனைக் கேட்ட கோரக்கர் தன் உடலையே ஆன்மாவின் வடிவம் என்று எண்ணியிருந்ததை விடுத்து உண்மை நிலையை உணர்ந்தார். கோரக்கர் செய்த நூல் "கோரக்கர் வைப்பு" என்று மீன் குஞ்சு வடிவத்தில் மச்சேந்திரர் கேட்ட தாரக மந்திரமே ஞானசர நூல் என்றும் கூறுவர். இதில் சரம்பார்க்க ஆசன விதி, சரம்பார்க்கும் மார்க்கம், போசன விதி, கருப்பக் குறியின் முறை, நாடிகளின் முறைமை முதலியவைகள் கூறப்பட்டுள்ளன. கோரக்கர் வரதமேடு என்னும் காட்டினுள் தவம் செய்யச் சென்றபோது பிரம்ம முனியை சந்தித்து நண்பர்களாயினர். இருவரும் செய்த வலிய தவத்தினால் அரும்பெரும் சித்துகளை அடைந்தனர். மேலும் ஐந்தொழிஐயும் இயக்கும் ஆற்றல் பெற வேண்டி இருவரும் யாகம் செய்யத் துவங்கினர். யாகத்தீயிலிருந்து இரண்டு அழகான பெண்கள் எழுந்து வந்தார்கள். அதே சமயம் அங்கு வந்த அக்கினியும், வாயுவும் அவ்விரு பெண்களையும் கண்டு மோகித்து நின்றார்கள். யாகத்தைத் தடை செய்ய வந்த பெண்கள் மீது கோபம் கொண்டு கமண்டலத்திலிருந்த நீரை எடுத்து இரு பெண்களின் மீதும் தெளிக்க ஒரு பெண் புகையிலைச் செடியாகவும், இன்னொரு பெண் கஞ்சா செடியாகவும் மாறினார்கள்.
'

கோரக்கர் மூலிகை' (கஞ்சா), 'பிரம்மபத்திரம்' (புகையிலை) பெண்கள் மீது மோகித்த அக்கினியும், வாயுவும் நெருப்பும், நீருமாக மாறி அச்செடிகளுடன் சேர்ந்தார்கள். அப்பொழுது சிவபெருமான் முனிவர்கள் முன் தோன்றி, "இறந்து போனவர்களைப் பிழைக்க வைக்கும் சக்தி உங்களுக்கு கிடைக்கும். உங்களினால் உண்டான இரு செடிகளும் கற்ப மூலிகைகளாகத் திகழுமென வரம் தந்து மறைந்தார்.

 கோரக்கர் தாம் அறிந்த ஞானமெல்லாம் எல்லோரும் அறிய வெளிப்படையாக பாடினார். அந்த நூல்கள் தீயவர்களிடம் கிடைத்துவிடக் கூடாது என்று எண்ணிய சித்தர்கள் கோரக்கர் எழுதிய நூல்களை எடுக்க அவருடைய ஆசிரமத்திற்கு வந்தார்கள். இதனையறிந்த கோரக்கர், அரிசியுடன் கஞ்சாவைச் சேர்த்து அடை செய்து சித்தர்களின் கண்ணில் படும்படியாக வைத்தார். நூல்களை எடுக்க வந்த சித்தர்கள் அடையைப் பார்த்ததும் அதனை எடுத்து உண்டு மயங்கினர். அதுசமயம் முக்கியமான நூல்களை எடுத்து மறைத்து வைத்தார். சித்தர்கள் எழுந்த போது அங்கிருந்த சில நூல்களை மட்டுமே எடுத்துச் சென்றார்கள்

Sunday 18 August 2019

Mantras for Internal Organs

Mantras for Internal Organs

Special Mantras for Internal Organs

Chant the five mantras together. This set of mantras improves thyroid also, which is responsible for all organs and stimulates all organs. 

Om Hraam Namaha

This is good for heart. It can handle any heart problem. For BP do the Heart Mudra and chant this Mantra.

• Fold the forefinger down on the mound of the thumb,. Join the thumb with the tips of the third and fourth finger.

Om Hraim Namaha

It works on our Kidneys and Urinary bladder.

Om Hreem Namaha

This stimulates the lungs. It reduces fever. For fever with cold, chant Om Hreem Namaha and Om Hraim Namaha.

Om Hroom Namaha

This mantra takes care of Liver, Gall Bladder, Pancreas (secretes digestive enzymes), Spleen, Small Intestine and thus works for all digestive organs.  This mantra heals Jaundice and provides us with vital essence.

Om Hraum Namaha

This mantra heals Constipation and gas problems, and takes care of Large intestine, which eliminates wastage elements.

Friday 2 August 2019

Vibuthi Benefits

அணியும் முறை
வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது
நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல்,
வலது கையின் ஆட்காட்டி விரல், நடு விரல்,
மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால்
திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று,
பூசிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும் போது
திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது
சிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு
பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக்
கொள்ளுதல் வேண்டும். ஒன்று நெற்றி
முழுவதும் அல்லது 3 படுக்கை வசக்
கோடுகளாகத் தரிக்க வேண்டும். காலை,
மாலை, பூசைக்கு முன்னும் பின்னும்,
ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு
உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க
வேண்டும்.நெற்றியில் முழுவதும் பரவிப்
பூசுவதை "உத்தூளனம்" எனப்படும். மூன்று
படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை
"திரிபுண்டரம்" எனப்படும்.
திருநீறு அணியும் இடங்கள்
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப்
பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன.
அவை
தலை நடுவில் (உச்சி)
நெற்றி
மார்பு
தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
இடது தோள்
வலது தோள்
இடது கையின் நடுவில்
வலது கையின் நடுவில்
இடது மணிக்கட்டு
வலது மணிக்கட்டு
இடது இடுப்பு
வலது இடுப்பு
இடது கால் நடுவில்
வலது கால் நடுவில்
முதுகுக்குக் கீழ்
கழுத்து முழுவதும்
வலது காதில் ஒரு பொட்டு
இடது காதில் ஒரு பொட்டு
பலன்கள்
திருநீறுஅணிவதால் தடையற்ற இறைச்
சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற
செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற
எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.
உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும்.
பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை
ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள்
அனைத்தையும் அழித்தும் அனைத்துப்
பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி
அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல
வழிகாட்டும். இதைத்தான் திருமூலர்
பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!
அகத்திய மாமுனிவர் சொன்ன வசிய திருநீறு...

Wednesday 17 July 2019

Varmam for vata

Got this from another source. Good article for reading. 

Varmam

I got this from another source within Internet. 

Interesting fact to read. 

Thanks


Wednesday 12 June 2019

சகலத்திர்கும் கட்டு மந்திரம்

சகலத்திர்கும் கட்டு மந்திரம் …
*****************************

"ஓம் பஹவதி ப்ய்ரவி
என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு
கடுகென பட்சியை கட்டு மிருகத்தைகட்டு
ஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரி
அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு
சத்ருவை கட்டு எதிரியை கட்டு
எங்கேயும் கட்டு
சிங்க் வங்க் லங்க் லங்க்
ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம"
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாமே நம: ஸ்வாஹா"

Tuesday 4 June 2019

Nava Durgai Amman

Image may contain: text

No photo description available.

சித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை .. !

சித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை .. !


நிச்சயம் உங்களுக்கு சித்த தரிசனம் பெற வைக்கும்,ஒரு எளிய பயிற்சி முறை .. !

மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் - சுமார் நாற்பது ஆண்டு காலம் ஆன்மீக ஆராய்ச்சி செஞ்சு , ஒரு சில முறைகளை செஞ்சு பார்க்க சொல்றார். அது சம்பந்தமா , நாம நிறைய பகிர்ந்துக்கப் போறோம்.. அதுலே , ஒரு விஷயம் இன்னைக்கு முக்கியமா... !

சித்தர்களை நாம எல்லோருமே நம்புறோம்.. சில விஷயங்கள் நாம் கேளிவிப்பட்டவரையில்  மிகைப் படுத்துதல் போல தோன்றினாலும், அவங்க  இருந்தாங்க.. இன்னும் பலப்பல வகையில், தன்னை நம்பியவர்களுக்கு சித்தர்கள் உதவி செய்யறாங்க. இதை நாமே எல்லோருமே ஓரளவுக்கு ஒப்புக்கொள்கிறோம். அவங்கள்ளே யாரையாவது நமக்கு தொடர்பு ஏற்படுத்திக்கிட்டா, நமக்கு கர்ம வினைகள் சுத்தமா அழிஞ்சிடுமே.. அவங்களோட வழிகாட்டுதல் பெற , அவங்களை சந்திச்சு தொடர்பு ஏற்படுத்திகிட ஒரு அற்புதமான முறையை சொல்லியிருக்கிறார்.
  
பதினெட்டு சித்தர்கள்ளே ஒருவர், நம் முன்னோர்களில் ஒருவராக இருக்க கூடும். இயல்பாக , உங்களுக்கு யார் மேல் ஈடுபாடு வருகிறது என்று பாருங்கள். இவர்தான் நீங்கள் சந்திக்கவிருக்கிற சித்தர். தியானத்தில் ஒரு நிலையை அடைந்த பிறகு, உங்களுக்கு இது தெரிய வரும். ஞானக் கோவை என்னும் சித்தர்கள் பாடலைப் படித்தால், உங்களுக்கு யாரேனும் ஒரு சித்தர் மேல் ஈடுபாடு வரும். அவர்தான் , உங்கள் ஜென்ம விமோச்சகர் .

பதினெட்டு வயதுக்கு மேல் ஆனவர்கள் மட்டும், இந்த பயிற்சியை செய்யவும்.
ஒரு திருவிளக்கை எட்டடி தூரத்தில் வைக்க வேண்டும். தாமரை நூல் திரியிட்டு , பசு நெய் ஊற்றி விளக்கேற்றுங்கள்.  ஒரு சிறிய காசி செம்பில், சுத்தமான தண்ணீர் எடுத்து விளக்கு முன் வைக்கவும். 

ஆசனப் பலகை அல்லது , தரையில் - மஞ்சள் துணி விரிப்பு விரித்து , விளக்கு ஒளி எட்டு அடி தூரத்தில் - உங்கள் புருவ மத்திக்கு நேர் கோட்டில் இருக்கும்படி, அமர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் சந்திக்க விரும்பும் சித்தர் பெயரை , மனதுக்குள் நினைத்துக் கொள்ளுங்கள்.  பின்பு, 

ஓம் சிங் ரங் அங் சிங் 

என்ற மந்திரத்தை திருவிளக்கைப் பார்த்தபடி , மனதுக்குள் ஜெபித்து வாருங்கள். இந்த மந்திரம் தான் , விண்வெளியில் இருக்கும் சித்தரை , உங்கள் பக்கம் ஈர்க்க தேவையான அலைவரிசை ட்யூனர்.  

நீங்கள் ஆரம்பிக்கும் தினம், அமாவாசை தினமாக இருக்கட்டும். தினமும் இடைவிடாமல் - தொண்ணூறு நாட்களுக்கு ஜெபிக்கவேண்டும். நீங்கள் பயிற்சி மேற்கொள்ளவேண்டிய நேரம் - இரவு எட்டிலிருந்து , ஒன்பது மணி வரை.  இந்த ஒரு மணி நேரத்தில் உங்களால் எவ்வளவு ஜெபிக்க முடியுமோ, ஜெபிக்கவும். எண்ணிக்கை முக்கியமில்லை.

 ஜெபம் முடிந்த பிறகு, இரவு உணவாக படையல் செய்த பழங்களை  உண்டு , பின் காசி செம்பிலுள்ள நீரை அருந்தவும். இரவு உணவாக பால் சாதம் சாப்பிடலாம். பயிற்சி மேற்கொள்ளும் மொத்த நாட்களில் - உப்பு ,புளி , காரம் குறைத்துக் கொள்வது நல்லது. அசைவ உணவு, புகை, மது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். இதனால் ,  உங்களுக்குமனபலம் கூடும். 

கண்டிப்பாக , தொண்ணூறு நாட்களுக்குள் உங்களுக்கு சித்தர் தரிசனம் கிட்டும். 
எதையோ, எங்கெங்கோ தேடி - முயற்சிகள் வீணடிப்பதைவிட, நேரடியாக சித்தரையே தரிசனம் செய்து விடுதல் நலம் இல்லையா...?

ஒரு சாதாரண செடி வளர்வதே - அந்த இடத்தின், சூழல் , மண் வளம் என்று வேறுபடும்போது , நம் அனுபவும் இந்த பயிற்சியில் ஒருவருக்கொருவர் வேறுபடலாம்.  நம் உடல் அமைப்பு, கிரக அமைப்பு எல்லாம் நமக்கு ஒத்துழைக்க வேண்டும் இந்த பயிற்சிக்கு. விடா முயற்சியுடன், முயன்றால் , ஒரு அளப்பரிய தெய்வீக அனுபவம் கிட்டும்... 

எதெதையோ பேசிக்கொண்டு , விதண்டாவாதம் செய்வதைவிட - நாமே ஒரு சாதனை செய்ய முயன்று பார்ப்பதில் அர்த்தமுள்ளது.. நம்பிக்கையுடன் செயல்படுங்கள்....!   மிக பிரமாதமான அனுபவம் உங்களுக்கு காத்திருக்கிறது..!
பயிற்சி நாட்களில் ஏற்படும் அனுபவங்களை மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ளுங்கள்...

Sunday 2 June 2019

வசீகரிக்க

வசீகரிக்க

எல்லோரையும் வசீகரிக்க ஒரு ஆன்மீக
வழிமுறை !!!
-------------------------------------

"வசி வசி சகலமும் வசி சர்வமும் வசி
சகலரும் வசி" என 18 முறை கண்ணாடியில்்
உங்க முகத்தை பார்த்தபடி
சொல்லுங்க.அன்றைய நாளில் இன்னும்
கூடுதல் அதிர்ஷ்டமா இருக்குமாம்
*
எல்லோரையும் வசீகரிக்க ஒரு ஆன்மீக
வழிமுறை:-
நீங்கள் பொதுத்தொடர்பு சார்ந்த தொழில்
அல்லது வேலை பார்க்கிறீர்களா?

இன்சூரன்ஸ், சினிமா, மியூச்சுவல்
பண்டு,ரியல் எஸ்டேட், சேல்ஸ் ரெப்,மார்க்கெட்
டிங், வக்கீல், ஜோதிடர்,அரசியல்
வாதிகள்,பூசாரிகள்,மனோதத்துவநிப
ுணர்கள்,நடிகர்கள் அல்லது நடிகைகள்,
இயக்குநர்கள் என எந்த பொதுத்தொடர்புத்
துறையில் இருந்தாலும் சரி! எல்லோரையும்
வசீகரிக்க ஒரு ஆன்மீகப்பயிற்சி
இந்தப்பயிற்சியை குறைந்தது 90 நாட்கள்
செய்ய வேண்டும்.தினமும்
காலையிலும்,மாலையிலும் செய்யவேண்டும்.

(எதிர்பாராமல் சில நாட்கள்விடுபட்டாலும்
பரவாயில்லை.தொடரலாம்)

ஓம் ரீங் வசி வசி = இந்த மந்திரத்தை ஒரு
விரிப்பின் மீது நின்று அல்லது
அமர்ந்துகொண்டு மனதுக்குள் 108 முறை
உதடு அசையாமல் ஜபிக்க வேண்டும்.4
திசைகளையும் நோக்கி தலா 108 முறை
ஜபிக்க வேண்டும்.

ஜபிக்க ஆரம்பிக்கும்போது வாயில் ஒரு
கிராம்புத்துண்டை வலதுபக்கத்தில்
ஒதுக்கிவைத்துக்கொள்ள வேண்டும்.கடிக்க
க்கூடாது.ஜெபித்து முடித்ததும் துப்பிவிட
வேண்டும்.

துப்பிய பின்பு ஒரு தம்ளர் இளநீர் உடனே
குடிக்கவேண்டும்.

(சைவ உணவு உண்பவர்களுக்கு விரைவில்
பலன் தெரியும்.அசைவம் சாப்பிடுபவர்கள்
அசைவத்தை விட்டுவிட வேண்டும்.விடாவி
ட்டால் பலன் தெரிய ரொம்ப நாளாகும்)
91 வது நாளிலிருந்து ரொம்ப பிசியாகிவிடுவீர்கள்.உங்கள் வேலை அல்லது தொழிலில்
நீங்கள்தான் முதல்வராகத் திகழ்வீர்கள்.
இது 90 நாளுக்குமேல் தான்
செயல்படத்துவங்கும்.

ஆதாரம்:வாத சவுமியசாகரம்,மந்திரவாள்பகுதி,அகத்தியர் எழுதியது
கோடான கோடி நன்றிகள்

முக வசியம் உண்டாக மந்திரம் !
------------------------------

நமது முகத்தில் லட்சுமி கடாட்சம்
உண்டாகுவதற்கும் மற்றவர்கள் எம்முடன்
கோபப்படாமலும் நன்றாக பழக இம் முகவசிய
முறையினை பயன்படுத்தலாம்.

மந்திரம்
-------

ஓம் வெள்ளி என்முகம் வியாழன் என்முகம்
திங்கள் என்முகம் திசைகள் எட்டும் என்முகம்
காளி என்முகம் காயத்ரி என்முகம் நீலி
என்முகம் நீலகண்டி என்முகம் ராமரும்
லட்சுமணரும் போலே அம்மா தாயே
லட்சுமணர் எல்லோரும் பார்த்தால் போலே
சிரித்த முகமும் சீதாதேவியார் நிற்க சிதம்பர
அட்சரத்தின் மேல் ஆணை ஐந்தெழுத்து
பஞ்சாட்சரமும் என்முகத்தில் நிற்கவே
சுவாகா.

பவுர்ணமி தினத்தில் உரு 108 கொடுத்து
சித்திசெய்து கொள்ளவும்.
பின்னர் பிரயோகிக்கும் போது 21 தரம்
சொல்லி விபூதி சாத்தவும்.

இராஜ வசிய மந்திரம்
----------------------

வசீகரா, வசீகரா, ராஜ வசீகரா, அச்சிட்ட
பங்காளா, தக்ஷிணாமூர்த்தி,
துர்க்கா தேவதாயை நம என்று 1008 உரு
செபிக்க ராஜவசியம் உண்டாகும்.

அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என
அரசு சார்ந்தவர்களிடம்
வசியத்தை உண்டாக்குவதே ராஜவசியமாகும்.

வழிக்கு கொண்டு வரும் வசிய முறைகள் :-
-----------------------------------------

வசி வசி என்று தினம் செபித்தாயானால்
மகத்தான சகல பாக்கியமும் உண்டாகும்
என்றார்கள் நம் சித்தர்கள்.

வசியம் என்பதே வலிமை வாய்ந்த ஒரு மாய
சொல்லாகும். இந்த சொல் யாரை எல்லாம்
ஆட்டி படைக்கிறது என்று பார்ப்போம்.

நம் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில்
மற்றவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம்.

அந்த அன்பு அங்கே அடிபட்டு போகிறபோது,
கையில் எடுப்பதுதான் இந்த வசியம்.

தம்முடைய ஆளுமை தன்மை குறைகிற
பொழுது மற்றவர்களை தன் ஆளுமையின் கீழ்
கொண்டு வருவதற்கான ஒரு மறைமுக
முயற்சியே இந்த வசியம் எனப்படும்.

நம் சித்தர் பெருமக்கள் எட்டு விதமான
தொழில்களை பற்றி கூறி உள்ளார்கள். இதை
அஷ்டகர்மம் என்பர். இவைகளில் ஒன்றுதான்
வசியம்.

இனி இதை பற்றி ஆய்வினை தொடங்குவோம்.

சித்தர்கள் வசியத்தை உலக வசியம், அரசர்
வசியம், பெண்டிர் வசியம், மைந்தர் வசியம்,
பகைவர் வசியம், விலங்கு வசியம் என்று
ஆறு வகையாக பிரித்துள்ளனர்.

உலகம், பகைவர் மற்றும் விலங்கு
வசியத்திற்கு ஓம் என்ற அட்ச்சரதையும்,
அரசர் வசியத்திற்கு ஒளம் என்ற
அட்ச்சரதையும், மாதர் மற்றும் மைந்தர்
வசியத்திற்கு ஐம் என்ற அட்ச்சரதையும்
பயன்படுத்தி உள்ளனர்.

வசியத்தை நடைமுறை வாழ்க்கையில்
பயன்படுத்தும் பொழுது
1 . மந்திரம்
2 . யந்திரம் அல்லது சக்கரம்.
3 . மூலிகை
4 . அஞ்சனம் அல்லது மை என்ற நான்கு
நிலைகளில் செயலாற்றி உள்ளனர். இனி
இவைகளை பற்றி ஆராய்வோம்.

‪#‎மந்திரம்‬ :-

குற்றமற்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட
மறைமொழி என்ற பரிபாஷை சொற்களே
மந்திரம் எனப்படும்.

வானலோகத்தில் இருக்கிற தேவர்களையும்
அழைக்கிற சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு.

ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய
முத்தொழில்களையும் செய்கிற ஆற்றல் மந்திர
எழுத்துகளுக்கு உண்டு.

நமது சித்தர்களும் நமசிவாய என்ற
ஐந்தெழுத்தில் இந்த அண்டங்களும் அவற்றின்
ரகசியங்களும் அடங்கி இருந்ததை
அறிந்திருந்தார்கள்.

நாம் வழிபடுகிற பிரம்மா, விஷ்ணு, சிவன்
என்ற மும்மூர்த்திகளும் மறைந்திருந்ததையும் உணர்ந்து இருந்தார்கள்.

இந்த எழுத்துக்களையே மாற்றி மாற்றி
அமைத்து எட்டு விதமான தொழில்களுக்கும்
பயன் படுத்தி உள்ளனர்.

ஓம் ஹிரீம் ஐம் கிலீம் சங் வயநமசி என்பது
வசியதிற்கான முலமந்திரமாகும்.

இதனை கிழக்கு நோக்கி அமர்ந்து மனதை
ஒருநிலை படுத்தி ஒரு லட்சம் முறை
செபித்தால் வசியம் சித்தியாகும் என்கிறார்கள்
சித்தர்கள்.

கிழக்கு திசை என்பது இந்திரனுக்கு உரியது.
உலகியல் இன்பத்திற்கு உரிய தெய்வம்
இந்திரன்.

வசிய ஆற்றலைத்தான் இன்றைய விஞ்ஞானம்
மெஸ்மரிசம் என்று குறுப்பிடும்.

எந்த மந்திரத்தையும் மனதை ஒரு நிலை
படுத்தி படிக்கும் போது நமது உடலில்
மின்காந்த அலைகளின் சக்தி அதிகரிக்கும்.
இதை எலக்ட்ரோ மேக்னடிவ் வேவ்ஸ் என்று
குறிப்பிடுவார்கள்.

தவவலிமை பெற்றவர்கள் தங்களின் ஆற்றலை
எழுத்துக்கள் என்ற அட்சரங்கள் மூலம்
தகடுகளில் பதித்து, அதற்க்கு வழிபாட்டின்
மூலம் சக்தியை வழங்கி குறுப்பிட்ட
காரியங்களுக்கு செயலாற்றும்படி செய்வது
யந்திர முறையாகும்.

இந்த தகடுகள் வெள்ளியால் செய்யபட்டால் 22
வருடத்திற்கும், தாமிரம் என்ற செம்பினால்
செய்யபட்டால் 12 வருடத்திற்கும், தங்கம்
அல்லது பஞ்சலோகத்தால் செய்யபட்டால்
ஆயுள் முழுமைக்கும் நன்மைதரும்.

இந்த யந்திர முறையை பல்வேறு சித்தர்கள்
பல்வேறு முறைகளில் சொல்லி உள்ளனர். நாம்
வசியம் என்ற ஒன்றை மட்டும் ஆராய்வோம்.

இந்த சக்கரத்திற்கு ஐங்காயம் பூசி, முல்லை
மலர் அணிவித்து, வில்வமர பலகையின் மீது
கிழக்கு நோக்கி அமர்ந்து ஓம் வசிமநய என்று
லட்சம் முறை உச்சரிக்க வசியம் சித்தியாகும்.
இது ஒரு முறை.

எண் கரும சக்கரம் முதல் அறுபதிற்கும்
மேற்பட்ட சக்கர வகைகள் கூறபட்டுள்ளன.

இறைவன் அல்லது இறைவியை உருவமற்ற
நிலையில் வழிபாடு செய்வதுதான் யந்திர
முறையாகும்.

தவ ஆற்றல் மிக்கவர்களாலும், பற்றற்று
வாழ்பவர்களும் தருகிற சக்கரங்கள் மட்டுமே
நீண்ட காலம் பலன் தரும்.மற்றவர்களால்
எழுதப்படும் எந்த சக்கரமும் ஒரு பலனையும்
தராது.

தவநிலையில் மேம்பட்டவர்கள், தங்களின்
பயணத்தை பேரின்பம் என்னும் முக்தி
நிலையை நோக்கி தொடர்வார்களே தவிர, இது
போன்ற காரியங்களில் தங்களின் கவனத்தை
சிதற விட மாட்டார்கள்.

அப்படியானால் அச்சடித்த சக்கரங்கள்?
முறையாக உருவேற்றபடாத எந்த
சக்கரத்திற்கும் சக்தி இல்லை.

வாழ்க வளமுடன்

Friday 24 May 2019

MANTRA AND YANTRA FOR HIGHEST SOUL ENERGY


Any saint, any person, who wants to win spirituality, has to go through these three doors—mantras, yantras, and the creation of a new divine energy. When we combine a mantra and a yantra and implement those energies together, we create a new high divine energy. You are chanting the mantra and visualizing the yantra to create this new energy. If you miss even one door, you can't reach your goal.

Mantra means the divine vibration. Yantra means the soul diagram, the hidden energy home. With the mantra you can suck the power and you can give the power. While chanting when you're in the highest deepest trance you can see visions of the yantras. Then, with the mantra and the yantra, like a flame using the gas, you can make it run. The high divine energy that you receive from putting the yantra and mantra together has a huge effect. Fixing the yantra, bringing the mantra, and channeling it to remake the energy and change the vibrations, put it in your own style, then throwing it into nature to make it work. It's a kind of technique to make your will come true through your sadhana. Mantra, yantra, then creating a new divine energy—that's it. More than that, nothing is there.

Working with the soul and angel channels, controlling and handling spirits, communicating and hooking angels, making them work, bringing your own energy up to connect and communicate with Mother Divine. Once you experience Her energy, that energy is with you all the time. That energy purifies everything around you. Your soul turns as a divine soul. These are all unbelievable, interesting techniques. It's completely inner feelings' knowledge.

Friday 17 May 2019

THE 7 CHAKRAS

 Muladhara Mantra laṃ - vaṃ śaṃ ṣaṃ saṃ 

Swadhisthana Mantra vaṃ baṃ bhaṃ maṃ yaṃ raṃ laṃ 

Manipura Mantra raṃ ḍaṃ ḍhaṃ ṇaṃ taṃ thaṃ daṃ dhaṃ naṃ paṃ phaṃ 

Anahata Mantra yaṃ kaṃ khaṃ gaṃ ghaṃ ṅaṃ caṃ chaṃ jaṃ jhaṃ ñaṃ ṭaṃ ṭhaṃ 

Vishuddha Mantra haṃ aṃ āṃ iṃ īṃ uṃ ūṃ ṛṃ ṝṃ ḷṃ ḹṃ eṃ aiṃ oṃ auṃ aṃ aḥ 

Ajña Mantra oṃ haṃ kṣaṃ 

Sahasrara Mantra oṃ all the letters of the Sanskrit alphabet

All type of yantras and its benefits

1. Sriyantra     
Education, intelligence, creativity, wealth, beauty, spiritual enrichment
2. Mahalaxmi Yantra    
For wealth
3. Kamla Yantra     
For of wealth
4. Kanakdhara Yantra    
For Gold and wealth
5. Gaytri Yantra     
For energy
6. Durga Beesa Yantra   
To ward off miscellaneous problems
7. Navdurga Yantra    
For power, victory, success
8. Saraswati Yantra    
Education, intelligence, creativity
9. Kali Yantra     
To get victory
10. Tara Yantra    
For eloquence and wealth
11. Bhuvaneswari Yantra   
To get power
12. Chhinamasta Yantra   
Foe overcoming the evil impact of Rahu
13. Bagalamukhi Yantra   
For victory over enemies
14. Tripurbhairavi Yantra   
For self control and victory
15. Dhoomavati Yantra   
To overcome sadness, sorrow, tragedy, disease, poverty
16. Matangi Yantra    
Married life, musical expertise
17. Gita Yantra    
For success
18. Panchanguli Yantra   
Best for astrologers for getting predictive powers
19. Ganesh Yantra    
For Prosperity
20. Swastik Ganesh Yantra   
For Good Luck
21. Hanuman Yantra    
For power, dominance, prosperity.
22. Vahan Durghatana Nashak Yantra 
For protection from road accidents/mishaps
23. Askarsan Yantra    
For attraction
24. Vashikaran Yantra   
To attract your beloved
25. Love enhancement Yantra (Prem Vriddhi Yantra)
For increasing love and affection between husband wife or lover/beloved.
26. Sukh Samriddhi Yantra   
For family happiness
27. Santan Gopal Yantra   
For desired offspring
28. Shubh Labh Yantra   
For gains
29. Vyapar Vridhi Yantra   
For success in business
30. Kuber Yantra    
For wealth
31. Mahamrityunjay Yantra   
To get rid of diseases, fear of death and grave dangers
32. Mahasudarshan Yantra   
Protection from enemies
33. Ram Raksha Yantra   
Protection from enemies
34. Kaalsarp Yantra    
To ward off obstacles, difficulties in life.
35. Matsya Yantra    
For clearing vastu faults
36. Vastu Yantra    
Yantra to remove Vastu ill effects form place of work/residence
37. Surya Yantra    
For goo health
38. Chandra Yantra    
For gain of knowledge
39. Mangal Yantra    
For quick results
40. Buddha Yantra    
For intelligence
41. Brihaspati Yantra    
For power and authority
42. Shukra Yantra    
For happy married life
43. Shani Yantra     
To avoid conflicts or losses
44. Rahu Yantra     
To get benefit from foreign land
45. Ketu Yantra     
For success
46. Navgrah Yantra    
For prosperity
47. Sampoorna Sri Yantra   
For wealth, prosperity, health, beauty, success
48. Sampoorna Vyapaar Vridhi Yantra 
Very effective for getting success in business
49. Sampoorna Vidya Dayak Yantra 
Education, intelligence, creative, speech
50. Sampoorna Badhamukti Ynatra 
To overcome all sorts of obstacles and troubles
51. Sampoorna Rognashaka Yantra 
To overcome all diseases
52. Sampoorna Kaalsarp Yantra  
To overcome Kaalsarp dosha, Vastu faults and pitri Dosha
53. Sampoorna Vastu Dosh Nivaran 
To overcome all complicated Vastu faults
54. Sampoorna Navgraha Yantra  
To overcome the impact of all planets
55. Sampoorna Mahalaxmi Yantra 
For getting wealth, prosperity
56. Sampoorna Karya Siddhi Yantra 
To get success in accomplishing all sorts of tasks. If you wish to get this yantras from us, please whatsapp us +601111467026

Thursday 9 May 2019

சகல விஷகடிகளுக்கு மந்திரம்

சர்வ வியாதிகள் நீங்க மந்திரம்

ஓம் அங் நங் கிலிகிலி என்று 1008 உரு செபிக்க மந்திரம் 
சித்தியாகும். பின்னர் வலது கையில் விபூதி பரப்பி


 
அதில் 'ஓம்' என எழுதி இம்மந்திரத்தை 108 உரு செபித்து 
அந்த விபூதியை  நோய்வாய்ப்பட்டவர்க்கு கொடுத்து 
அதை பூசியும் உண்டும் வர சொல்ல உடலில் உள்ள 
சகல நோய்களும் நீங்கி விடும். மற்றவர்கள் இவ்விபூதியை
பூசி வர சகலதோசங்களும் நீங்கி நன்மை உண்டாகும்.

சகல விஷகடிகளுக்கு மந்திரம்

ஓம் ரீங் நசிநசி மசிமசி சகலவிசங்களும் இறங்கு இறங்கு 
மாறு மாறு படுபடு சுவாகா.
இம்மந்திரத்தை உடல் சுத்தியுடன் தூய்மையான இடத்தில் அமர்ந்து
1008 உரு செபிக்க சித்தியாகும்.

Friday 26 April 2019

Healing Mantras

Healing sounds balance both the mind and body, as well as the spirit. Practitioners find that imparting Áyurvedic mantras helps heal their clients. Mantras also help balance prána, tejas, and ojas. They help harmonize nerve tissue, and they clear subtle impurities from the nerves and nádiís (subtle channels). These mantras also aid one's concentration and creative thinking.

Both practitioner and client use the mantras during a session. They empower all actions on a subtle level, infusing the cosmic life force into the healing process. Generally, Váyu doshas mentally repeat mantras, while Pitta and Kapha doshas may also chant them. Kaphas do particularly well with chanting; it is suggested that they do so on a daily basis.

AUM: (long "ahh", then 'um' as in home) Most important, for it represents the Divine word, serving to energize or empower all things and processes. This is why all mantras begin and end with aum. Best for males.
Uses: It clears the mind, opens náæís, and increases ojas. It awakens one's práòa—or positivity—needed for healing to occur.

RAM: ("a" sounds like the "a" in "calm")
Uses: Brings Divine protection (light and grace), giving strength, calm, rest, peace; good for mental disorders and high Váyu (e.g., insomnia, bad dreams, nervousness, anxiety, excessive fear, and fright); it strengthens ojas and builds the immune system. 

HUM (hoom):
Uses: It wards off negative influences, which are manifested as diseases, negative emotions, or black magic. Hoom awakens agni and promotes digestive fire. It burns up áma and clears channels; it increases tejas and mental perception, and it is sacred to Shivá as the sound of Divine wrath.

AIM (aym):
Uses: Improves mental concentration, thinking, rational powers, and speech; awakens and increases intelligence, mental and nervous disorders; restoresspeech, communication, control of senses and mind;
is the sacred sound of Saraswati, the Goddess of Wisdom.
SHRIM (shreem):
Uses: Promotes general health, beauty, creativity, prosperity, strengthens rasa (plasma) and shukra (reproductive fluids), and overall health and harmony.

HRIM (hreem):
Uses: Cleanses and purifies, giving energy, joy, and ecstasy. Although it initially causes atonement; it also aids detoxification.

KRIM (kreem):
Uses: Gives capacity for work and action; adds power and efficacy, good for chanting while making preparations.

KLIM (kleem):
Uses: Gives strength, sexual vitality, control of emotions, increases shukra and ojas.

SHAM: Mantra of peace (or 'Aum shanti, shanti, shanti')
Uses: Creates calmness, detachment, contentment; alleviates mental and nervous disorders, stress, anxiety, disturbed emotions, tremors, shaking, palpitations, and chronic degenerative nervous system disorders.

SHUM: (pronounced like "shoe" but with a shorter vowel sound)
Uses: Increases vitality, energy, fertility, sexual vigor, mantra for increasing shukra.

SOM: (as in home)
Uses: Increases energy, vitality, joy, delight, creativity, ojas; it strengthens mind, heart, nerves, and is good for rejuvenation and tonification therapies.

MANTRA APPLICATIONS:
For Practitioners:
1. During the session, purify healing room using Aum and Hum.
2. Bring Divine light into room using Aum and Ram.
3. Chant mentally over the client to clear their psychic level using Aum.
4. Energize the healing power of herbs or medicines using Krím or Shrím.

For Clients:
They can make use of these mantras at home to increase healing.
Mental or nervous disorders:
Sham—relieves pain and fever. 
Hum—restores nerve function and counters paralysis.
Som—rebuilds cerebrospinal fluid