Monday, 12 February 2018

யாரிடம் அபிசாரமுறைகள் பயனளிக்காது ?

யாரிடம் அபிசாரமுறைகள் பயனளிக்காது?

•வேதத்தை ஓதும் அந்தனர்களிடம் அபிசாரம் பயனளிக்காது. அதாவது வேதியர்கள் அனைவரும் குருவின் ஆதிக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். எனவே குரு ஆதிக்கம் நிறைந்தவர்களிடம் தெய்வாம்சம் நிறைந்திருப்பதால் அவர்களிடம் அபிசார வித்தைகள் பயனளிக்காது.

•தற்கால அறிவியல் சார்ந்த மனோவசிய முறைகளும் கூட குரு ஆதிக்கம் நிறைந்தவர்களிடம் பயனளிக்காது. ஏனென்றால் அவர்கள் சிறந்த மனோதிடத்துடன் சிந்தனையாளர்களாகவும் இருப்பார்கள்.

•காயத்ரி மந்திர ஜெபம் செய்பவர்களிடம் அபிசார வித்தைகள் அனுகாது.

•ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி மற்றும் சதயத்தில் பிறந்தவர்களிடமும்;

•கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி மகம் மற்றும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.

•லக்னத்தில் ராகு அல்லது கேது இருப்பவர்கள்.

•கிரஹன காலங்களில் பிறந்தவர்கள்.

•உணவின் காரகன் சந்திரன். தாய் அல்லது மனைவி மற்றும் நெருங்கிய ரத்த சொந்தங்கள் சமைத்ததை தவிர மற்ற இடங்களிலும் மற்ற உணவுகளையும் சாப்பிடாதவர்கள்.

•யோகா, ப்ராணாயாமம், தியானம் செய்பவர்களிடம் அபிசாரவித்தை பலனளிக்காது

No comments:

Post a Comment