AimShreemHreem - Secret of Successful Peopl

AimShreemHreem - Secret of Successful Peopl
Click Here

Sunday, 31 January 2021

Athirsta Lakshmi Yantra




மோகினி வசிய மந்திரம்

மூலமந்திரம் :
ஓம் சிவயநம கிரியும் விரியும்
ஜெகத் மோகனாங்கி வசி வங் சுவாகா

Sunday, 8 November 2020

*வரலட்சுமி 108 போற்றி

*வரலட்சுமி 108 போற்றி* 

1.ஓம் அகில லட்சுமியே போற்றி
2. ஓம் அன்ன லட்சுமியே போற்றி
3. ஓம் அலங்கார லட்சுமியே போற்றி
4. ஓம் அமிர்த லட்சுமியே போற்றி
5. ஓம் அமர லட்சுமியே போற்றி
6. ஓம் அம்ச லட்சுமியே போற்றி
7. ஓம் அபூர்வ லட்சுமியே போற்றி
8. ஓம் அரவிந்த லட்சுமியே போற்றி
9. ஓம் அனந்த லட்சுமியே போற்றி
10. ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி
11. ஓம் ஆதி லட்சுமியே போற்றி
12. ஓம் ஆத்ம லட்சுமியே போற்றி
13. ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
14. ஓம் இஷ்ட லட்சுமியே போற்றி
15. ஓம் இன்ப லட்சுமியே போற்றி
16. ஓம் இதய லட்சுமியே போற்றி
17. ஓம் ஈகை லட்சுமியே போற்றி
18. ஓம் உதய லட்சுமியே போற்றி
19. ஓம் உத்தம லட்சுமியே போற்றி
20. ஓம் உபாசன லட்சுமியே போற்றி
21. ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
22. ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
23. ஓம் ஒளஷத லட்சுமியே போற்றி
24. ஓம் கருணா லட்சுமியே போற்றி
25. ஓம் கனக லட்சுமியே போற்றி
26. ஓம் கபில லட்சுமியே போற்றி
27. ஓம் கமல லட்சுமியே போற்றி
28. ஓம் கற்பக லட்சுமியே போற்றி
29. ஓம் கஜ லட்சுமியே போற்றி
30. ஓம் கஸ்தூரி லட்சுமியே போற்றி
31. ஓம் காருண்ய லட்சுமியே போற்றி
32. ஓம் குண லட்சுமியே போற்றி
33. ஓம் குரு லட்சுமியே போற்றி
34. ஓம் கோமள லட்சுமியே போற்றி
35. ஓம் கோமேதக லட்சுமியே போற்றி
36. ஓம் சந்தான லட்சுமியே போற்றி
37. ஓம் சங்கு லட்சுமியே போற்றி
38. ஓம் சக்கர லட்சுமியே போற்றி
39. ஓம் சர்வ லட்சுமியே போற்றி
40. ஓம் சந்தோஷ லட்சுமியே போற்றி
41. ஓம் சகல லட்சுமியே போற்றி
42. ஓம் சாந்த லட்சுமியே போற்றி
43. ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
44. ஓம் சிந்தாமணி லட்சுமியே போற்றி
45. ஓம் சீதா லட்சுமியே போற்றி
46. ஓம் செல்வ லட்சுமியே போற்றி
47. ஓம் சொர்ண லட்சுமியே போற்றி
48. ஓம் சுந்தர லட்சுமியே போற்றி
49. ஓம் சுப லட்சுமியே போற்றி
50. ஓம் ஜெய லட்சுமியே போற்றி
51. ஓம் ஜோதி லட்சுமியே போற்றி
52. ஓம் ஞான லட்சுமியே போற்றி
53. ஓம் தங்க லட்சுமியே போற்றி
54. ஓம் தயா லட்சுமியே போற்றி
55. ஓம் தர்ம லட்சுமியே போற்றி
56. ஓம் தன லட்சுமியே போற்றி
57. ஓம் தவ லட்சுமியே போற்றி
58. ஓம் தான லட்சுமியே போற்றி
59. ஓம் தான்ய லட்சுமியே போற்றி
60. ஓம் தாமரை லட்சுமியே போற்றி
61. ஓம் தெய்வ லட்சுமியே போற்றி
62. ஓம் தீப லட்சுமியே போற்றி
63. ஓம் தீர்த்த லட்சுமியே போற்றி
64. ஓம் திவ்ய லட்சுமியே போற்றி
65. ஓம் நாக லட்சுமியே போற்றி
66. ஓம் நித்ய லட்சுமியே போற்றி
67. ஓம் நிர்மல லட்சுமியே போற்றி
68. ஓம் நீல லட்சுமியே போற்றி
69. ஓம் பதும ராக லட்சுமியே போற்றி
70. ஓம் பவள லட்சுமியே போற்றி
71. ஓம் பக்த லட்சுமியே போற்றி
72. ஓம் பத்ம லட்சுமியே போற்றி
73. ஓம் பங்கஜ லட்சுமியே போற்றி
74. ஓம் பராக்கிரம லட்சுமியே போற்றி
75. ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
76. ஓம் பாக்கிய லட்சுமியே போற்றி
77. ஓம் பால லட்சுமியே போற்றி
78. ஓம் புண்ணிய லட்சுமியே போற்றி
79. ஓம் புவன லட்சுமியே போற்றி
80. ஓம் புனித லட்சுமியே போற்றி
81. ஓம் பொன் லட்சுமியே போற்றி
82. ஓம் போக லட்சுமியே போற்றி
83. ஓம் மகா லட்சுமியே போற்றி
84. ஓம் மதன லட்சுமியே போற்றி
85. ஓம் மதுர லட்சுமியே போற்றி
86. ஓம் மங்கள லட்சுமியே போற்றி
87. ஓம் மாதவ லட்சுமியே போற்றி
88. ஓம் மகா லட்சுமியே போற்றி
89. ஓம் மகுட லட்சுமியே போற்றி
90. ஓம் மரகத லட்சுமியே போற்றி
91. ஓம் மாணிக்க லட்சுமியே போற்றி
92. ஓம் மாதா லட்சுமியே போற்றி
93. ஓம் முத்து லட்சுமியே போற்றி
94. ஓம் மோட்ச லட்சுமியே போற்றி
95. ஓம் யோக லட்சுமியே போற்றி
96. ஓம் ரத்தின லட்சுமியே போற்றி
97. ஓம் ராம லட்சுமியே போற்றி
98. ஓம் ராஜ்ய லட்சுமியே போற்றி
99. ஓம் வரலட்சுமியே போற்றி
100. ஓம் வித்யா லட்சுமியே போற்றி
101. ஓம் விஜய லட்சுமியே போற்றி
102. ஓம் விமல லட்சுமியே போற்றி
103. ஓம் விஷ்ணு லட்சுமியே போற்றி
104. ஓம் வீர லட்சுமியே போற்றி
105. ஓம் வேங்கட லட்சுமியே போற்றி
106. ஓம் வேணு லட்சுமியே போற்றி
107. ஓம் வைடூர்ய லட்சுமியே போற்றி
108. ஓம் வைரலட்சுமியே போற்றி போற்றி!

Saturday, 7 November 2020

அகத்தியர் மந்திர வாள்

 இந்த "அகத்தியர் மந்திர வாள்" என்னும் நூல். அதில் உள்ள ஒரு சில மூல மந்திரங்களின் ரகசியங்களை காலத்தின் தேவை கருதி பகிர்கிறேன். 

புரிஞ்சி கொள்ள கூடியவங்க... 
                  புரிஞ்சி கொள்ளுங்க......

மோகனம்
------------------

ஓம் ரீங் மோகி மோகி 

வசியம் 
--------------

ஓம் ரீங் வசி வசி 

ஸ்தம்பனம்
---------------------

ஓம் ரீங் ஸ்தம்பய ஸதம்பய 

ஆகர்ஷணம் 
-----------------------

ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய 

கட்டிகள் கரைய
----------------------------

ஓம் ரீங் கசி கசி 

மசிய வைத்தல் 
----------------------------

ஓம் ரீங் மசி மசி 

நோய் நீக்குதல் 
----------------------------

ஓம் ரீங் நசி நசி 

சத்ரு சம்ஹாரம் 
-----------------------------

ஓம் ரீங் மசி நசி நசி மசி 

சகல செளபாக்கியம் பெற 
----------------------------------------------

ஓம் ரீங் சிவ சிவ.

Sunday, 25 October 2020

நவக்கிரக சாந்திக்கு மிக எளிய பரிகாரங்கள்

நவக்கிரக சாந்திக்கு மிக எளிய பரிகாரங்கள்

சூரியபகவான்
சனிக்கிழமை அன்று 7 வகையான தானியங்களை ஊற வைத்து ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவற்றைப் பொடி செய்து எறும்புகளுக்குப் போடவும். இதை 7 ஞாயிற்றுக்கிழமை செய்து வர சூரியனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.

சந்திரபகவான்
 வளர்பிறை திங்கள் கிழமை அன்று வீட்டு முற்றத்தில் நெருப்பு மூட்டி அதில் கொஞ்சம் பழைய வெல்லத்தைப் போட்டு விடவும். சந்திரனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.

செவ்வாய் பகவான்
தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று புதிதாக இனிப்பு வாங்கிப் பிச்சைக்காரர்களுக்குத் தானம் செய்ய செவ்வாய்க் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.

புதபகவான் 
பூஜை அறையில் ஒரு செம்பில் கங்கை நீரை வைத்திருந்தால் புதன் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.

குருபகவான்
வியாழக்கிழமை தோறும் குங்குமப்பூவை மெழுகுப் பதமாக அரைத்து குங்குமம் கலந்து நெற்றில் திலகம் இட்டு வரக் குருபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

சுக்ரபகவான் 
சிறிய வெண்ணிறப் பட்டுத் துணியில் வாசனை உள்ள மலர் வைத்து முடிந்து அதை ஓடும் நீரில் விட்டு விட சுக்கிரனால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

சனிபகவான்
ஒரு வெற்றிடத்தில் அல்லது வீட்டுப் பின்புற முற்றத்தில் கறுப்புத் துணியில் கருப்பு எள் வைத்து முடிந்து நெருப்பில் போட்டு எரிக்கச் சனிபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

கேதுபகவான்
இரண்டு போர்வைகள் வேறு வேறு நிறத்தில் வாங்கிப் பிச்சைக்காரர்கள் அல்லது ஏழை முதியவர்களுக்குத் தானமாக வழங்க கேது பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

இராகுபகவான் 
பாம்பாட்டிகளிடம் இருந்து ஒரு பாம்பை விலைக்கு வாங்கிக் அவற்றைக் காட்டில் கொண்டுபோய் விட இராகு பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும். இதை நாகபஞ்சமி (ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி ) அன்று செய்யவும்.

Thursday, 8 October 2020

உங்களுக்கு பணவரவை அதிகரிக்க...

உங்களுக்கு பணவரவை அதிகரிக்க...

உடலின் இடது பக்க உடலில் நீல நிறத்தில் உங்கள் தேவைக்கேற்ப பின்வரும் எண்களை எழுதுங்கள்: 

1122/5701 - ஏராளமான பணப்புழக்கம். 

520 - அபரிமிதமான பணவரவு 

199621147 - நீங்கள் ஒரு பணகாந்தம் போன்று பணத்தை கவர

133 - உங்கள் வாழ்க்கையில் பணத்தின் வருகையை வேகப்படுத்த. 

71269 - அபரிமிதத்தின் தேவதை எண் (போதுமான பணம் இல்லாததால் ஏற்படும்  பதட்டத்தின் போது)

897 - பணம் (அவசர தேவைகளுக்கு கிடைக்க) 

42170 - பணம் (தேவைப்படும்போது பணம் வைத்திருக்க) 

414 81 88 - உங்கள் நேரத்தை பணமாக மாற்ற.....



Mobile, laptop, etc.

போன்ற device இல்

தேவையான எண்களை ...
Password ஆக கூட பயன் படுத்தலாம்...

Monday, 28 September 2020

சரம் ஸ்திரம் உபயத்தை பயன்படுத்துவது எப்படி

அன்றாட வாழ்க்கையில் சரம் ஸ்திரம் உபயத்தை பயன்படுத்துவது எப்படி?

* மேஷம்- சர ராசி
* ரிஷபம் - ஸ்திர ராசி
* மிதுனம்- உபய ராசி
* கடகம்- சர ராசி
* சிம்மம்- ஸ்திர ராசி
* கன்னி- உபய ராசி
* துலாம்- சர ராசி
* விருச்சிகம்- ஸ்திர ராசி
* தனுசு- உபய ராசி
* மகரம்- சர ராசி
* கும்பம்- ஸ்திர ராசி
* மீனம்- உபய ராசி

"சரம்" என்றால் வளர்ச்சி அடைவது.
" ஸ்திரம் " என்றால் நிலையானது.
" உபயம் " என்றால் நிலையற்றது

தினசரி இதை எப்படி பயன்படுத்துவது:

1. நாம் கடன் வாங்கும் பொழுது அன்றைய நேரத்தில் லக்னம் சர ராசியில் அமைந்தால், கடன் தொகை மேலும் மேலும் வளரும் அதனால் சர லக்னத்தில் கடன் வாங்க கூடாது.
கடன் வாங்கும் பொழுது உபய லக்னத்தில் வாங்க வேண்டும்.

2. இதே போல் மருத்துவமனைக்கு செல்வது, நகை அடகு வைப்பது, ஒருவருக்கு பணம் தருவது, போன்றவற்றை சர லக்னத்தில் செய்ய கூடாது. உபய லக்னத்தில் தான் செய்ய வேண்டும்.

3. தொழில் தொடங்குவது, கொடுத்த பணத்தை வாங்குவது, இப்படி வளர்ச்சி அடைய கூடிய விஷயங்களை சர லக்னத்தில் செய்யலாம்.

4. திருமணத்திற்கு முகூர்த்த லக்னம் குறிப்பது, சொந்த வீடு கட்டுவது, சொந்த வீட்டிற்கு குடிபோவது, வீடு நிலம் வாங்குவது ,போன்ற நிலையான விஷயங்களை ஸ்திர லக்னத்தில் செய்யலாம்.


நன்றி


Tiada penerangan foto disediakan.

Saturday, 26 September 2020

ஹனுமன்_சாலீசா#பொருள்_உரையுடன்

#ஹனுமன்_சாலீசா
#பொருள்_உரையுடன் 

அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும். 
தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உடனே வந்து சேரும் என்கிறார் துளசிதாசர். 

அனுமன் சாலீசா என்ற பெயரில் அவர் எழுதிய வடமொழி ஸ்லோகத்தின் தமிழாக்கம் இது! ராமநாமம் சொல்லி வென்ற மாருதியின் திருநாமம் சொல்லி வெல்லுங்கள் .

#அனுமன்_சாலீஸா
#பாராயண #முறை

உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டு தூய ஆடை அணிந்து தூய உள்ளத்துடன் ஆஞ்சநேயரைத் தியானிக்க வேண்டும். 

நெய் விளக்கேற்றி தூபம் காட்டியபின் பதினொரு முறை இந்த நாற்பது துதிகளையும் அன்புடன் ஓத வேண்டும். நூறு முறை ஓதுவது சிறப்பு. 

ஒவ்வொரு முறை முடியும் போதும் ஆஞ்சநேயரின் திருப்பாதங்களில் மலர்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

கோயிலிலோ வீட்டின் தூய்மையான இடத்தில் ஆஞ்சநேயர் படத்தின் முன்னாலோ பாராயணம் செய்யலாம். 

செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் பாராயணம் செய்ய வேண்டும். 

பக்தியுடனும் அன்புடனும் ஹனுமன் சாலீஸா பாராயணம் செய்யப்பட்டால் நினைத்தது நடக்கும் என்பது பெரியோர் கூற்று. அவரது அருளால் எதுவும் நடக்கும் என்பதில் ஐயமில்லை.

#ஸ்ரீராமஜெயம் 🙇‍♂️

ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார் பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்

எனது மனம் என்னும் கண்ணாடியை ஸ்ரீ குருதேவரின் திருப்பாதத் தூசியால் தூய்மைப் படுத்திக் கொண்டு நான்கு கனிகளைத் தருகின்ற ரகுகுலதிலகமான ஸ்ரீராமனின் மாசற்ற தெய்வீகப் பெருமைகளை விளக்கத் தொடங்குகிறேன்.

புத்தி ஹீன தனு ஜானி கே ஸுமிரௌ பவன குமார் பல புத்தி வித்யா தேஹு மோஹிம் ஹரஹு கலேச விகார்

எனது அறிவோ குறுகியது வாயு மைந்தனான ஆஞ்சநேயா உன்னைத் தியானிக்கிறேன் எனக்கு வலிமை அறிவு உண்மை ஞானம் எல்லாம் தருவாய். என்னைத் துன்பங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் விடுவிப்பாய்.

1. ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர 
ஜய கபீஸ திஹுலோக உஜாகர

ஆஞ்சநேயா நீ கடலைப் போலப் பரந்த அறிவும் நற்குணங்களும் பொருந்தியவன் வானரர்களின் தலைவன் மூன்று உலகங்களையும் உணர்வுற்றெழச் செய்பவன். உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

2. ராமதூத அதுலித பலதாமா 
அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா

நீ ஸ்ரீராம தூதன் எல்லையற்ற ஆற்றலின் உறைவிடம் அஞ்ஜனையின் மைந்தன் வாயுபுத்திரன் என்னும் பெயர்பெற்றவன்.

3. மஹாவீர் விக்ரம பஜரங்கீ 
குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ

மிகுந்த ஆற்றல் வாய்ந்த உடலுடன் இணையற்ற வலிமை பொருந்திய வீரன் நீ. துய சிந்தனைகளை விரட்டுபவன் நீ. நல்லசிந்தனைகளின் நண்பன் நீ.

4. கஞ்சன பரண விராஜ ஸுவேசா 
கானன குண்டல குஞ்சித கேசா

பொன்னிறம் பொருந்தியவன் நீ சிறந்த ஆடைகளை உடுத்தியுள்ளவன் நீ. ஒளி வீசுகின்ற குண்டலங்களையும் காதில் அணிந்துள்ளாய். உனது முடியோ அலையலையாக அழகாக உள்ளது.

5. ஹாத் வஜ்ர ஒள த்வஜா விராஜை 
காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை

உனது கைகளை இடியும் கொடியும் அலங்கரிக்கின்றன. தோளையோ முஞ்ஜைப் புல்லாலான பூணூல் அணி செய்கிறது.

6. சங்கர ஸுவன கேசரீ நந்தன 
தேஜ ப்ரதாப மஹா ஜகவந்தன

நீ சிவபெருமானின் அவதாரம் கேசரியின் மகன் உனது தேஜசையும் வீரத்தையும் கண்டு உலகமே உன்னை வணங்குகிறது. அனுமனின் தந்தை கேசரி என்னும் வானரர் தலைவர். சிங்கத்தைப் போன்ற ஆற்றல் உடையவராக இருந்ததால் அவர் கேசரி என்னும் பெயர் பெற்றார். அனுமனின் தெய்வீகத் தந்தை வாயு பகவான்.

7. வித்யாவான் குணீ அதி சாதுர 
ராம காஜ கரிபே கோ ஆதுர

நீ அறிவாளி நற்குணங்கள் நிரம்பப் பெற்றவன் மிகவும் கூரிய புத்தியை உடையவன் ஸ்ரீராமனின் பணிக்காக எப்போதும் மகிழ்ச்சியுடன் காத்திருப்பவன்.

8. ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா 
ராமலகன ஸீதா மன பஸியா

இறைவன் திருப்புகழையும் பெருமையையும் கேட்பதில் நீ எப்போதும் பரவசம் கொள்கிறாய். ஸ்ரீராமனும் லட்சுமணனும் சீதையும் உனது மனத்தில் குடியிருக்கின்றனர்.

9. ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா 
விகட ரூப தரி லங்க ஜராவா

நீ மிகவும் நுண்ணிய உருவில் சீதையின் முன் வெளிப்பட்டாய் மிகவும் பயங்கார உருக்கொண்டு இலங்கையைக் கொளுத்தினாய்.

10. பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே 
ராமசந்த்ர கே காஜ் ஸவாரே

மிகவும் பெரிய உருவம் கொண்டு அரக்கர்களை அழித்து ஸ்ரீராம காரியத்தை நிறைவேற்றினாய்.

11. லாய ஸம்ஜீவன லகன ஜியாயே 
ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே

சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்து லட்சுமணனின் உயிரைக் காத்த போது ஸ்ரீராமன் உன்னை எத்தனை ஆனந்தத்துடன் தழுவிக் கொண்டார்!

12. ரகுபதி கீனி பஹுத் படாயீ 
தும் மம ப்ரிய ஹி பரதஸம பாயீ

ஸ்ரீராமன் உனது பெருமைகளை மிகவும் புகழ்ந்து நீயும் பரதனைப் போலவே தமக்குப் பிரியமானவன் என்று கூறியருளினார்.

13. ஸஹஸ வதன தும்ஹரோ யச காவைம் 
அஸ கஹி ஸ்ரீபதி கண்ட லகாவைம்

ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் கூட உனது பெருமைகளைப் புகழ்வதாக ஸ்ரீராமன் உன்னை அணைத்தபடியே கூறினார்.

14. ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீசா 
நாரத சாரத ஸஹித அஹீசா

ஸனகர் முதலான முனிவர்கள் பிரம்மா போன்ற தேவர்கள் சிவபெருமான் நாரதர் கலைமகள் ஆதிசேஷன்.

15. யம குபேர திகபால ஜஹாம் தே 
கவி கோவித கஹி ஸகைம் கஹாம் தே

எமன் குபேரன் திரைக் காவலர்கள் கவிஞர்கள் புலவர்கள் எல்லோரும் உனது பெருமைகளை விளக்க முயன்று தோல்வியே கண்டார்கள்.

16. தும் உபகார ஸுக்ரீ வஹிம் கீன்ஹா 
ராம மிலாய ராஜபத தீன்ஹா

ஸ்ரீராமனிடம் அறிமுகப்படுத்தி சொந்த அரசை மீட்டுக்கொடுத்ததன் மூலம் நீ சுக்ரீவனுக்கு ஓர் இணையற்ற உதவியைச் செய்து விட்டாய்.

17. தும்ஹரோ மந்த்ர விபீஷண மானா 
லங்கேச்வர பயே ஸப் ஜக ஜானா

உனது அறிவுரைகளின்படி நடந்ததாலேயே விபீஷணன் இலங்கை அரசனானான் என்பது உலகம் முழுவதும் தெரிந்த விஷயம்.

18. யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ 
லீல்யோ தாஹி மதுர பல ஜானூ

பதினாறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்த சூரியனை கனியென எண்ணி நீ விழுங்கிவிட்டாய்.

19. ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம் 
ஜலதி லாந்தி கயே அசரஜ் நாஹீம்

ஸ்ரீராமனின் முத்திரை மோதிரத்தை வாயில் தங்கியபடியே நீ கடலைக் கடந்துவிட்டாய். (உனது அளப்பரிய ஆற்றல்களைக் கணக்கிடும் போது) இது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல.

20. துர்கம காஜ் ஜகத் கே ஜேதே 
ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே

எத்தனைக் கடினமான செயலும் உனதருளால் எளிதல் நிறைவேறிவிடும். 

21. ராம துவாரே தும் ரக்வாரே 
ஹோத ந ஆஜ்ஞா பின பைஸாரே

ஸ்ரீராம ராஜ்யத்தின் வாயிற் காவலன் நீ. உனது அனுமதியின்றி அங்கு யாரும் நுழைய முடியாது.

22. ஸப் ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா 
தும் ரக்ஷக காஹூ கோ டர்னா

உன்னைச் சரணடைபவர்கள் எல்லா இன்பங்களையும் பெறுகின்றார்கள். நீ பாதுகாவலனாக இருக்கும் போது எதற்காகப் பயப்பட வேண்டும்

23. ஆபன் தேஜ் ஸம்ஹாரௌ ஆபை 
தீனோம் லோக ஹாங்க்தே காம்பை

உனது ஆற்றலைக் கட்டுபடுத்த உன்னால் மட்டுமே முடியும். உனது ஆற்றலின் முன் மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.

24. பூத பிசாச நிகட நஹிம் ஆவை 
மஹாவீர ஜப் நாம ஸுனாவை

மகாவீரன் என்னும் உனது திருநாமத்தை இடைவிடாது கூறினால் நோய் அகல்கிறது துன்பம் விலகுகிறது.

25. நாசை ரோக் ஹரை ஸப் பீரா 
ஜபத நிரந்தர ஹனுமத் வீரா

உனது ஆற்றல் மிக்கத் திருநாமத்தை இடைவிடாது கூறினால் நோய் அகல்கிறது துன்பம் விலகுகின்றது. மனோ தைரியம் உண்டாகின்றது.

26. ஸங்கட ஸே ஹனுமான் சோடாவை 
மன க்ரம வசனத்யான ஜோ லாவை

மனம் வாக்கு செயலால் அனுமனைத் தியானிக்கும் ஒருவனை அவர் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார்.

27. ஸப் பர் ராம் தபஸ்வீ ராஜா 
தின்கே காஜ் ஸகல தும் ஸாஜா

தவம் புரிகின்ற பக்தர்களின் மேலான ஆசைகளை நிறைவேற்றுகின்ற ஸ்ரீராமனின் பணிகளை நீ நிறைவேற்றினாய்.

28. ஒளர் மனோரத ஜோ கோயி லாவை 
தாஸு அமித ஜீவன் பல பாவை

மேலும் பக்தனின் ஆசைகளை நிறைவேறுவதுடன் அவன் அழியாக்கனியாகிய இறையனுபூபதியையும் பெறுகிறான்.

29. சாரஹு யுக பரதாப தும்ஹாரா 
ஹை பரஸித்த ஜகத உஜியாரா

சத்திய திரேதா துவாபர கலி என்னும் நான்கு யுகங்களிலும் உனது பெருமை போற்றப்படுகிறது. உனது திருநாமம் உலகம் முழுவதும் சிறக்கிறது.

30. ஸாது ஸந்த கே தும் ரக்வாரே 
அஸுர நிகந்தன ராம துலாரே

நல்லோரையும் ஞானியரையும் நீயே காக்கிறாய். ஸ்ரீராமனின் மனத்துக்கு உகந்தவனான நீயே தீய சக்திகளை அழிக்கிறாய்.

31. அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா 
அஸ் வர தீன் ஜானகீ மாதா

எட்டுவித சித்திகளையும் ஒன்பதுவிதச் செல்வங்களையும் கேட்பவருக்கு அளிக்கம் ஆற்றலை சீதா தேவி உனக்கு அருளினாள்.

32. ராம் ரஸாயள தும்ஹரே பாஸா 
ஸதா ரஹெள ரகுபதி கே தாஸா

ஸ்ரீராம பக்தி என்பதன் சாரமே உன்னிடம் உள்ளது. எப்போதும் நீ அவரது சேவகனாகவே இருப்பாய்.

33. தும்ஹரே பஜன் ராம்கோ பாவை 
ஜன்ம ஜன்ம கே துக்க பிஸராவை

உன்னிடம் பக்தி கொள்வதால் ஒருவன் ஸ்ரீராமனை அடைகிறான். எத்தனையோ பிறவிகளில் தொடர்ந்து வந்த துன்பங்கள் அவனை விட்டு அகல்கின்றன.

34. அந்த கால ரகுபதி புர ஜாயீ 
ஜஹாம் ஜன்மி ஹரிபக்த கஹாயீ

அவன் தன் வாழ்வின் முடிவில் ஸ்ரீராமனின் உறைவிடம் செல்கிறான். அங்கு அவன் ஹரி பக்தனாக மதிக்கப்படுகிறான்.

35. ஒளர் தேவதா சித்த ந தரயீ 
ஹனுமத் ஸேயி ஸர்வ ஸுக கரயீ

அனுமனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்திடமும் மனத்தைச் செலுத்தாத ஒருவனுக்கும் எல்லா இன்பங்களும் நிறைகின்றன.

36. ஸங்கட ஹரை மிடை ஸப் பீரா 
ஜோ ஸுமிரை ஹனுமத பல பீரா

எல்லாம் வல்ல ஆஞ்சநேயரை நினைப்பவரின் துன்பங்களும் துயரங்களும் விலகி ஓடுகின்றன.

37. ஜய் ஜய் ஜய் ஹனுமான் கோஸாயீ 
க்ருபா கரஹு குருதேவ கீ நாயீ

ஓ ஆஞ்சநேயா உனக்கு வெற்றி வெற்றி வெற்றி உண்டாகட்டும். ஓ பரம குருவே எங்களுக்கு அருள்புரிவீர்களாக.

38. ஜோ சத பார் பாட கர ஜோயீ 
சூடஹி பந்தி மஹாஸுக ஹோயீ

இந்தத் துதிகளை நூறு முறை பக்தியுடன் படிப்பவர்களுக்கு உலகத்தளைகள் எல்லாம் நீங்கப் பெற்று பரமானந்தத்தை அனுபவிக்கின்றனர்.

39. ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா 
ஹோய் ஸித்தி ஸாகீ கௌரீஸா

இந்த ஹனுமான் சாலீஸாவைப் படிப்பவர்களுக்கு சிவபெருமான் அருள் புரிகிறார் அவன் பரிபூரண நிலையை அடைகின்றனர்.

40. துளஸீதாஸ ஸதா ஹரி சேரா 
கீஜை நாத ஹ்ருதய மஹ டேரா

என்றென்றும் தம் இதயத்தில் இறைவன் எழுந்தருளி வாழட்டும் என்று அவரது நித்திய சேவகனான துளஸுதாசன் பிரார்த்திக்கிறான்.

பவன தனய ஸங்கட ஹரன் மங்கள மூரதி ரூப ராமலஷமன் ஸீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுரபூப

துன்பங்களைப் போக்குபவனுக்கு மங்கள உருவினனும் தேவர்களின் தலைவனும் வாயு மைந்தனும் ஆகிய ஸ்ரீ ஆஞ்சநேயர் எனது இதயத்தில் ஸ்ரீராம லட்சுமண சீதையுடன் நிலவட்டும்.

ஸ்ரீராம ஜெய ராம ஜெயஜெய ராம 🙇‍♂️

Friday, 25 September 2020

இயற்கை மருத்துவம் !

இயற்கை மருத்துவம் !
சளி, இருமல் நீங்க: திப்பிலி, அக்கரா, சுக்கு, மிளகு, மஞ்சள்
செய்முறை: இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்து தினமும் காலை அல்லது இரவில் அரை டீஸ்பூன் எடுத்து அதை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் குறையும். வென்னீரிலும் கலந்து சாப்பிடலாம்.
உடலில் புளிப்பு அதிகம் இருப்பின்:
இஞ்சி, வெற்றிலை, பூண்டு, மல்லி
செய்முறை: இதை நன்றாக அம்மியில் வைத்து அரைத்து வென்னீரில் அந்த சாறை பிழிந்து மாலை அருந்தினால் உடலில் உள்ள புளிப்பு குறையும்.
வாயு மருந்து:
பூண்டு, ஓமம், மஞ்சள், சுக்கு, கருஞ்சீரகம், வாவளங்காய்
செய்முறை:இதை சட்டியில் போட்டு அவித்து சாறை வடிகட்டி குடிக்கவும்.
பித்தம் அதிகம் இருப்பின்: இஞ்சி, சர்க்கரை, கொட்டை முந்திரி, ஏலக்காய் அரிசி, மல்லி,
செய்முறை: இதை அம்மியில் அரைத்து வைத்து சட்னியைப் போல் சாப்பிட்டால் பித்தம் குறையும். அல்லது அவித்தும் குடிக்கலாம்.
குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு நிற்க:
சுக்கு, பூண்டு, வாவளங்காய், பெருங்காயம், இந்துப்பூ, ஓமம்
செய்முறை: இந்த மருந்துகளை அம்மியில் அரைத்து துணியில் வைத்து வெந்நீ:ரில் பிழிந்து எடுத்து ஒரு சங்கு குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்றுப் போக்கு நிற்கும்.
விஷக்குடி மருந்து:
சுக்கு, மல்லி, திப்பிலி, வெற்றிலை, கருஞ்சீரகம், வேப்பிலை கொழுந்து,ஓமம், மல்லி.
செய்முறை: இதை ஒரு சட்டியில் போட்டு அவிக்கவும். பின்னர் அதை வடிகட்டி ஒரு துண்டு கருப்பட்டி போட்டு குடித்து வந்தால் விஷக்கிருமி அழியும்.
பல்வலி மருந்து:
பூச்சிப் பல் இருப்பவர்கள் கிராம்பை அவ்விடத்தில் தூளாக்கி வைத்தால் வலி நீங்கும்.
தலைவலி, தடுமல், தலைபாரம்:
தும்பை , ஓம இலை, மஞ்சள், செங்கல் சுட்டு போட வேண்டும்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து இந்த இலைகளை மஞ்சள் செங்கல் சுட்டுப் போட்டு அதனுடைய ஆவியைப் பிடித்தால் தலைபாரமi;, தடுமல், தலைவலி நீங்கும்.
பேதி குணமாக வழி:
 அவரை இலைச் சாறு, தயிறு
அவரை இலை சாறை தயிருடன் சாப்பிட்டால் பேதி குறையும்.
குமட்டல் வயிற்றுப் போக்கு நீங்க:
எலுமிச்சைப் பழம் சாறு, சீரகம்
எலுமிச்சைப் பழச் சாறில் சீரகம் ஊற வைத்து காயவைத்து சுவைத்து மென்று சாப்பிட வேண்டும்.
இரத்த வாந்தி நீங்க:
ஆடுதொடா இலை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சரியாகும்.
திக்குவாய் குணமாக:
வசம்பு பொடி, அருகம்புல் சாறு
இரண்டையும் கலந்து குடித்துவர திக்கிப் பேசுதல் சரியாகும்.
மூல நோய் குணமாக:
பப்பாளி பழம், மாம்பழம்,தேன்
பப்பாளி பழம், மாம்பழம் இரண்டையும் தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் குணமாகும்.
கைகால் வெடிப்பு நீங்க:
 கண்டங்கத்திரி இலை, தேங்காய் எ ண்ணெய்
கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சாறு பிழிந்து தடவினால் வெடிப்பு நீங்கும்.
பல் உறுதியாக:
மாவிலையைப் பொடி செய்து பற்களை துலக்கி வர பல் உறுதி பெறும்.
சுளுக்கு நீங்க வழி
உப்பு, புளியை கரைத்து கொதிக்க வைத்து பின் இறக்கி ஆறியவுடன் பற்றுப் போட வீக்கம், ரத்தக் கட்டு குணமாகும்.
இரத்தத்திலுள்ள பித்தம் குறைய:
ஆரமா குச்சிகளைத் துண்டுகளாக்கி காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து குடிக்கலாம்.
இரத்தத்தை சுத்தப்படுத்த:
கரிசலாங்கண்ணி கீரையை நன்கு கழுவி சாப்பிட வேண்டும். கண்பார்வையும் கூர்மையாகும்.
மண்ணீரல் வீக்கத்தை குறைக்க:
கரிசலாங்கண்ணி கீரையை நன்கு கழுவி தினமும் ஒரு முறை சாப்பிட வேண்டும்.
கரிசலாங்கண்ணி கீரையை நன்கு கழுவி அரைத்து எந்த இடத்தில் தோல் வியாதி இருக்கிறதோ அந்த இடத்தில் தடவ வேண்டும்.
உடல் வலி, தலைமுடி உதிர்வதை தடுக்க:
கரிசாலை சாற்றுடன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து அடுப்பில் வைத்து
இளம் சூடாகவும் காய்ச்சி தைலமாக்க வேண்டும். அதன் பிறகு அதை தலையில் எல்லா இடங்களிலும் தடவ வேண்டும். அஅப்படி த டவினால் தலை முடி உதிர்வதையும், நரை ஏற்படுவதையும் தடுக்கும். உடலில் வலி ஏற்படும் இடத்தில் தடவினால் வலி நீங்கும்.
கண் நோய்களை குணமாக்க:
பொண்ணாங்கன்னி கீரையை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதுமையில் கண்ணாடி அணியத் தேவையிராது. கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றையும் கண் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணமாக்கும்.
காய்ச்சல் நீங்க:
துளசி இலை 50, மிளகு 20 அல்லது முப்பது.
துளசி இலையையும் மிளகையும் நன்றாக அரைத்து பயிறு அளவு சிறுசிறு மாத்திரைதகளாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். இம்மாத்திரைகளை இம்மாத்திரைகளை காலை, மாலை இருவேளைகளிலும் சுடு தண்ணீருடன் உட்கொண்டால் காய்ச்சல் நீங்கும்.
சளி தொல்லை, சளி காய்ச்சல், மூச்சுத் திணறல் நீங்க:
சுக்கு ஐந்து கிராம், கண்டங்கத்திரி வேர் முப்பது கிராம், கொத்த மல்லி முப்பது கிராம், சீரகம் 2 கிராம், தண்ணீர் 2 லிட்டர்
தேவையான பொருட்கள் அனைத்தையும் இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் ஆகும்வரை காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு காய்ச்சிய தண்ணீரை 4 முதல் 6 வேளைகள் குடித்தால் சளி தொல்லை நீங்கி விடும்.
காயப்புண் நீங்க:
அரிவான்மனைப் பூண்டு இலை 20 ஐ நன்றாக கசக்கி அதன் சாற்றை காயத்தில் இட்டால் புண் விரைவில் ஆறும்.
தீப்புண், தீக்காயம் நீங்க:
வேப்பம்பட்டையை இடித்து கசாயமாக்கி காய்ச்சி தடவ வேண்டும். வாழைப்பட்டை சாறு பிழிந்து காயத்தில் தடவ வேண்டும்.
தலைவலி நீங்க:
அரை லிட்டர் தண்ணீர், சங்குப் பூக் கொடி பச்சை வேர் நாற்பது கிராம்.
சங்குப்பூக்கொடி பச்சை வேரை நன்றாக நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு 300 மி.லி. வரை நன்றாக காய்ச்சிக் கொள்ளவும். காய்ச்சிய நீருக்கு காக்கணக் குடிநீர் என்று பெயர். காக்கணக் குடிநீரை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையாக ஆறு முறை சாப்பிட்டால் தலைவலி முழுமையாக நீங்கிவிடும்.
தொண்டைவலி நீங்க: சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் இரண்டையும் கலந்து சூடு செய்து மித சூட்டில் தொண்டையில் தடவிக் கொள்ளவும்.
பல்வலி நீங்க:
சுடுதண்ணீரில் உப்பைப் போட்டு வாiயு நன்றாகக் கொப்பளித்தாலும், சுக்குத் துண்டை வாயில் போட்டுக் கொண்டாலும் பல்வலி முழுமையாக நீங்கி விடும்.
வாய்புண், குடல் புண், வாயுத் தொல்லை நீங்க:
வெங்காயம், மிளகுதூள், உப்பு, தக்காளி, மணத்தக்காளி கீரை.
மணத்தக்காளி கீரைiயும், வெங்காயத்தையும் , தக்காளியையும் பொடீயாக நசுக்கி மிளகு தூளும் உப்பும் சேர்த்து கொதிக்க வைத்து சாறாக குடித்தால் வாய்ப்புண், குடல் புண், வாயுத் தொல்லை முழுமையாக நீங்கி விடும்.
சளி கோலை, காது மந்தம் நீங்க:
தூதுவளை பழத்தை நிழலில் உலர்த்தி அதன் பிறகு தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் சளி கோலை, காது மந்தம் நீங்கிவிடும்.
உடல் மெலிவு பெற:
பப்பளிக்காயை சமைத்து உண்ண வேண்டும்.
உடல் தொப்பை குறைய:
சுரைக்காயை வாரம் இருமுறை சாப்பிட வேண்டும்.
கால் ஆணி குணமாக:
வெள்ளை அரக்கு அரைத்து வைத்து ஆணிப் பகுதியில் கட்டி வரவும்.
குடல் புண் குணமாக:
 தினமும் ஒரு டம்பளர் திராட்சைப் பழச் சாறு குடித்து வர அல்சர் நீங்கும்.
மூலம்:
பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். அதன்பிறகு வெந்தயம் சிறிதளவு சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் மூலம் குணமாகும்.
சர்க்கரை நோய் நீங்க:
பப்பாளி பழமும், கொய்யா பழமும், பாகற்காயும் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் குணப்படுத்தலாம்.
மஞ்சள் காமாலை:
திராட்சை பழம் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமாகும்.
யானைகால் நோய் நீங்க:
வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.
நரம்புத் தளர்ச்சி நோய் நீங்க:
அத்திப் பழம் தினந்தோறும் ஐந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி நீங்கி விடும்.
வயிற்று வலி, பித்த வெடிப்பு நீங்க:
மருதம் இலையை அரைத்து ஒரு ஸ்பூன் காலையில் சாப்பிட வேண்டும்.
காது அடைப்பு, காது கட்டி நீங்க:
தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டால் காது அடைப்பு, காது கட்டி நீங்கி விடும்.
வாயுத் தொல்லை நீங்க:
பாலில் வாய்விலங்கா சிறிதளவு சேர்த்து காய்ச்சி கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு வாயு தொல்லை ஏற்படாது.
இந்துப்பூ, பெருங்காயம் இரண்டையும் உரலில் உரசி தண்ணீர் சேர்த்து கொடுத்தால் வாயுத்தொல்லை நீங்கும்.
தூதுவளை, கண்டங்கத்திரி, பனங்கற்கண்டு, சிறுதும்பை
முதலில் தூதுவளை, கண்டங்கத்திரி, சிறுதும்பை மூன்றையும் உரலில் வைத்து இடித்து சாறு பிழிந்து, அந்த சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்தால் சளித் தொல்லை நீங்கும்.
ஆஸ்துமா இருந்தால்:
வேப்பங் கொட்டை 3, திப்பிலி.
வேப்பங்கொட்டையிலுள்ள பருப்பை எடுத்து அதே அளவு திப்பிலியையும் சேர்த்து வறுத்து, இடித்து, தூளாக்கி வெந்நீரில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா குணமாகும்.
மஞ்சள்காமாலையாக இருப்பின்:
வில்வ இலை, வெந்தயம், குளுக்கோஸ்., ஒரு டீ ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து அந்த நீருடன் குளுக்கோஸ் சேர்த்து தொடர்ந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை சீக்கிரமாக குணமாகும். இதற்கு எவ்வித பத்தியமும் கிடையாது.
வாய்ப்புண்:
மாசாக்காயை ஷதினமும் இரண்டு தடைவ உரலில் உரசி அதை வாய்ப்புண் உள்ள இடத்தி;ல் தேய்த்து வந்தால வாய்புண் குணமாகும்.
தீப்புண்:
சுண்ணாம்பை நீரில் கரைத்து  மேலே வரும் தெளிந்த நீரை எடுத்து சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து தீ பட்ட இடத்தில் தேய்த்து வந்தால் தீப்புண்ணால் ஏற்பட்ட தழும்பு கூட வராது. சீக்கிரமாகத் தீப்புண் ஆறிவிடும்.
ஜலதோஷமாக இருப்பின்:
சுக்கு, மிளகு, வெற்றிலை, மஞ்சள் தூள், வெள்ளைப் பூண்டு, கருஞ்சீரகம், வேப்பங்கொழுந்து.
மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து வேகவைத்து அதன் வற்றிய நீரை குடித்தால் அதிவிரைவில் குணம் கிடைக்கும். அம்மை போட்டிருப்பினும் 2, 4, 6, 8 தினங்களில் கொடுத்தால் குணமாகும்.
வாய்ப்புண்ணாக இருப்பின்:
மாசாக்காய், மாதுளம் பழத் தோல், சீரகம், அதிமதுரம், சீனாகரம்
இவற்றை நீரில் வேகவைத்து வடிகட்டி அந்த நீரை குடித்து வந்தால் குணமாகும்.
சளி தொல்லை:
காயம், திப்பிலி, மாசாக்காய், அதிமதுரம், சித்திரத்தை, வாய்விளங்காய், பால் கடாச்சி, மிளகு, பூண்டு, சீனாகரம், சுக்கு. இம்மருந்துக்குப்பெயர் உரை மருந்து.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் உரலில் தேய்த்து சேர்த்து கொடுக்கவும். மாதம் ஒரு முறை கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு சளித் தொல்லை இராது.
குழந்தைகளுக்கு மார்பில் கட்டி இருப்பின் சமுத்திராபழத்தை உரலில் தேய்த்து அதை மார்பில் பூசிவ ந்தால் ஒரு வாரத்தில் கட்டி கரைந்து விடும்.
இரும்புச் சத்து குறைவாக இருப்பின் தினமும் கருப்பட்டி காப்பியை அருந்தி வந்தால் சீக்கிரத்தில் அளவு கூடும். குழந்தை உண்டாகி இருக்கிறவர்கள் 6, 7 மாதத்தில்இதைப் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பித்தவாயு குர்ணி:
காய்ந்த கொட்டை முந்திரி பழம், ஏலக்காய், கொத்தமல்லி விதை, இஞ்சி ஆகியவற்றை நீரில் அவித்து அந்த நீரை மூன்று நாட்களுக்குப் பருகி வந்தால் பித்த வாயு தீரும்.
நீரழிவு நோய் இருப்பவர்கள் நாவல் பழக் கொட்டையை காய வைத்து பொடி பண்ணி தினமும் சிறிதளவு எடுத்து நீரில் கலந்து பருகி வந்தால் விரைவில் குணமாகும். சுகர் ஆரம்பநிலையில் இதை கையாண்டால் குணம் கிடைக்கும்.
குழந்தைக்கு சீலம் போவதாக இருப்பின் மாதுளம்பழத்தின் பூவை எடுத்து அரைத்து ஆட்டுப் பாலில் கலந்து கொடுத்தால் சீக்கிரம் குணம் கிடைக்கும்.

Wednesday, 9 September 2020

தமிழர்களின் கோவிலே இயற்கை மருத்துவமனை

*தமிழர்களின் கோவிலே இயற்கை மருத்துவமனை:*

 *இறை உறையும் மனை*
       *-----------------------------------*

*வெங்கல மணி ஓசை:* 
*--------------------*
*உடல், மனம், உயிர் மூன்றும், உடலில் உள்ள 7 சக்கரமும், *மின்காந்த அலையும் சீர்படுத்தி, ஒரே நேர்கோட்டில் பாதம்*
*முதல் தலை உச்சி நோக்கி* *உயிர்சக்திகளை இயக்கிட வெங்கல மணி ஓசை உதவுகிறது.* 

*கருங்கல்லை சுற்றுவது :* 
*-----------------------*
*உடலின் மின்காந்த சக்த்தியை அதிகரித்து உடல் இயக்கத்தை சீர்படுத்தி உடல் உயிர், மனதை மேல் நோக்கி செலுத்தி செழுமையாக்க கோவிலை சுற்றி வர வேண்டும்.* 

*மந்திர உச்சாடனங்கள்:* 
*-----------------------*
*உடலின் மூளை, ரத்தம், சவ்வு, ரத்த நாளங்கள், உடல் உறுப்புகள், தசைகள், எலும்புகள் சீராக்கும், நோய் நீக்கி உடலின் செயலாற்றலை அதிகரிக்கும். ஜப்பானிய நீர் ஆராய்ச்சியாளர் இதை நிருவி உள்ளார்.* 

*தீர்த்தம்:*
*--------*
*உடல் நோய் குணமாக உள்மருந்து, துளசி, இளநீர். உணவே மருந்து.* 

*சந்தனம்/ குங்குமம்:*
*-------------------*
*கருங்கல், மந்திர உச்சாடனத்தால் மனோ சக்தியை அதிகப்படுத்தி, நரம்பு மண்டலங்களை குளிர்வித்து அதிகப்படுத்திய சக்திகள் உடல் சூட்டால் வெளியேறாமல் தடுக்க சந்தனமும், குங்குமம் மூன்றாவது கண் எனப்படும் ஞான கண் மேல் இடப்படுகிறது.* 

*ஐம்பூதங்கள்:*
*-------------*
*1. சாம்பிராணி (ஆகாயம்),*
*2. ஊதுபத்தி (காற்று),*
*3. தீபாராதனை (சோதி/நெருப்பு),*
*4. திருநீர் (நீர்),* 
*5. சந்தனம்(மண்),* 
*6. குங்குமம் (உயிர்/மனம்).* 

*ஐம்பூதங்களால் ஆன இவ்வுடலை இயற்கையை கொண்டே சீராக இயக்கி நலமுடன் வாழ நாள்தோறும் கோவிலுக்கு சென்று இயற்கை மருத்துவம் செய்தல் வேண்டும்.* 

*சித்தர்:* 
*-------*
*ஐம்பூங்களால் ஆன இவ்வுடலை கொண்டு சித்தம் தெளிந்து, 8 வகையான சித்திகள் பெற்று, அதன் மூலம் மற்ற சித்திகள் பெற்று ஈசனோடு இரண்டற கலந்து ஒன்றானவர்கள்.* 

*சக்திமிக்க சிவாலங்கள் அனைத்தும் சித்தர்கள் சமாதிகளின் மேல் இலிங்கம் வைத்து கோவிலாக எழுப்பப்பட்டது.* 

*உ.த: ஐம்பூத தளங்கள், 12 சோதி இலிங்க தளங்கள்.*   

*இறைவன்:* 
*----------*
*ஈசன்- படைத்தல், காத்தல், மறைத்தல், அருளுதல், அழித்தல் எனும் ஐந்தொழிலை செய்பவர்.* 

*ஈசன்:* 
*-----*
*உலகை படைத்த ஈசன் இலிங்க, சோதி வடிவாக உள்ளவன்.* 

*இலிங்க வடிவம்:* 
*----------------*
*சூரிய ஒளி இவ்வுலகில் இலிங்க வடிவத்தில் விழுகிறது ( கூகுளில் இதை பார்த்து உண்மையை உணருங்கள்).* 

*சோதி:* 
*--------*
*இருளை போக்கும் சோதியானவன் சூரியன்.* 

*சோதி/ சூரியன்:* 
*----------------*
*கதிரவன் சூடான ஆண் தன்மை உடையது.* 

*நிலவு/ பிறை:* 
*-------------*
*நிலவு குளிர்ச்சியான பெண் தன்மை உடையது.* 

*நவ கிரகம்: 9 கிரகங்கள், 27 நட்சித்திரங்கள், 12 ராசிகள், கூட்டுத்தொகை 48, 48 - ஒரு மண்டலம்.* 

*96 - சிவ தத்துவங்கள், 2 மண்டலங்களை (96) கொண்டது.* 

*108 - திவ்ய தேசங்கள்:*
*----------------------*
*108 வர்ம புள்ளிகள் உண்டு, இதை கொண்டு உடலில் ஏற்படும் நோய்களைக் குணமாக்கலாம்.*

*அட்டமா சித்திகள்:*
*------------------*
*8 வகையான சித்திகள், ஐம்பூதங்களோடு சேர்ந்து பிரிந்து நிற்பது.*

*நவ கண்டம்:* 
*-----------*
*யோகத்தால் உடலை 9 பிரிவுகளாக பிரித்து சேர்ப்பது.* 

*இந்து சமயம் விஞ்ஞான அறிவியல் சமயம்.* 

*பாரத இந்து சமயத்தை பின்பற்றி இயற்கையோடு இணைந்து, சீரும் சிறப்பாக வளமுடன் வாழ்க.*

Friday, 4 September 2020

ஸ்ரீ ராம

*🔯மன அமைதியும், வாழ்வில் வளமும் சேர்க்கும் ஸ்ரீ ராம மந்திரங்கள்*

*🔯ஸ்ரீ ராம மந்திரத்தை சொன்னால் அனைத்து கடவுள்களும் உங்கள் வீடு தேடி வருவர்.*

 இதனால் மன அமைதியும், உங்கள் வாழ்க்கையில் வளமும் பெருகும்.
 

ஸ்ரீ ராமா என சொன்னாலே வாழ்க்கை வளம் பெற்று செல்வ செழிப்பு உண்டாகும்.

 இவ்வளவு ஏன், இராமாயணத்தை முழுமையாக படிக்காமல் போனாலும், ராம் என்ற இரண்டெழுத்து மந்திரத்தை உச்சரித்தாலே ஆணவம், காமம், பேராசை ஆகியவை எல்லாம் அழிந்து அன்பும், அறிவும் பெருகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி மனிதனிடம் இருக்கும் மனிதத்தை அழிக்கக் கூடிய விஷயங்களை எல்லாம் 'ராமா' என்ற ஒற்றை பெயர் செய்வதால், நாம் வாழ்வின் அனைத்து வித நன்மைகளையும் அருளையும் பெற முடியும்.

ராம நாமத்தை சொல்லி ராமனிடம் நாம் சரணடைய நமக்கு மோட்சத்தை கொடுப்பார்.

*🔯ஸ்ரீராம மந்திரங்கள்*

*🙏ராமரின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்:*

*🙏ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ*

*⚜️பொருள்:*

இந்த மந்திரம் ஸ்ரீ ராமனின் பல்வேறு பெயர்களை பிரதிபலிக்கின்றது. ராமனை புகழும் இந்த மந்திரம் மிக மங்களகரமாந்து. தாய் சீதா தேவியின் கணவனான் ராமனின் பெயர் சொன்னாலே இன்பத்தை வாரி வழங்குவார்.

*🔯வெற்றியையும் மகிழ்ச்சியையும் தரும் மந்திரம்:*

*🙏ஓம் க்லீம் நமோ பகவதயே ராமசந்திராய சகலஜன வஸ்யகராய ஸ்வாஹா*

*🔯பொருள்:*

பீஜ ஒலியால் ஆன இந்த மந்திரம் சொல்ல சொல்ல, காந்தத்தைப் போல நமக்கு வெற்றியும், மகிழ்ச்சியும் தேடி வரும். இதை சொல்லி வர உலக அமைதி உண்டாகும்.

*🙏ஸ்ரீ ராம மூல மந்திரம்*

*மிக எளிய ஆனால் சக்தி வாய்ந்த மந்திரம்:*

*"ஸ்ரீ ராம ஜெயம்"* 

இதன் பொருள் அனைவரும் அறிந்ததே, ராமருக்கே வெற்றி. நாம் ராமனை வேண்டி இந்த மந்திரத்தை சொன்னால் அமைதி, நம்பிக்கை, வெற்றி கிடைக்கும்.

இந்த மந்திரத்தை 

*"ஓம் ஸ்ரீ ராமாய நமஹ: "* 

என்றும் கூறுவதுண்டு.பக்தனிடம் தோற்ற ராமன் மற்றும் ஆஞ்சநேயர்... எப்படி சாத்தியமானது தெரியுமா?

*கோதண்ட ராம மந்திரம்*

*ஸ்ரீராம் ஜெய ராம் கோதண்ட ராமா
பொருள்:"*

*🙏கோதண்டம் என்றால் வில் என்று பொருள். வில்லை ஏந்திய ராமனின் பெயரை உடைய இந்த மந்திரத்தை சொல்லி வர நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்களை அழிக்கும்.*

 *⚜️வெற்றிக்குரிய மந்திரம்.*
*ராம தாரக மந்திரம்*

*🙏ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்*

தசரதன் தெய்வ பிரவியான ராமன் உள்பட 4 பிள்ளைகளை ஏன் பெற்றார் தெரியுமா?

*🔯ஸ்ரீ ராமர் காயத்ரி*

ஓம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம:

 *⚜️ப்ரசோதயாத்ராம தியான மந்திரம்*

*ஓம்* *ஆபதாம்பஹர்தாரம்* *தாதாராம் சர்வசம்பதாம்*
*லோகாபிராமம்* *ஸ்ரீராமம்*' புயோ புயோ* நமாம்யஹம்*🌹🌹🙏

Wednesday, 15 July 2020

கண் திருஷ்டியும்.. பரிகாரமும்.

🔯கண் திருஷ்டியும்.. பரிகாரமும்..
🔯கண் பார்வையால் ஏற்படும் தோஷத்தை 'திருஷ்டி' என்பார்கள். 'திருஷ்டி' என்பதற்கு 'பார்வை' என்று பொருள். "கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது" என்பது பழமொழி.
🔯பார்வையை, சுப பார்வை, அசுப பார்வை என வகைப்படுத்தலாம்.
 சித்தர்கள், ஞானிகள், ஆன்மிகவாதிகளின் பார்வை பலம் நிறைந்தது.
அவர்களின் பார்வை படுபவர்களுக்கு சுப பலன் கிடைக்கும்.
 சிலருடைய பார்வை தீய சக்தியை ஏற்படுத்தும். கண் திருஷ்டி என்பது பொறாமை, கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலால் ஏற்படக்கூடியது.
 அதனால் எற்படும் பாதிப்பு, சிலருக்கு சிறியதாகவும், பலருக்கு தொடர்ச்சியான பின் விளைவுகளையும் தரும்.
கண் திருஷ்டி யாரை எளிதில் தாக்கும்?, யாரை தாக்காது?
 என்பதை ஜோதிட ரீதியான காரணங்களைக் கொண்டு பார்க்கலாம்.*
 ஒருவரது ஜாதகத்தில் லக்னம் மற்றும் லக்னாதிபதி வலிமையாக இருந்தால், அவரை கண் திருஷ்டி எளிதில் பாதிக்காது.*
 லக்னம், ஐந்து, ஒன்பதாம் இடத்தில் மாந்தி இருந்தால்,
அந்த நபர்களை கண் திருஷ்டி எளிதில் பாதிக்கும்.*
 லக்னாதிபதி 6, 8, 12-ல் மறைந்திருந்தால், அவர்களுக்கு கண் திருஷ்டி பாதிப்பு நீண்ட காலத்திற்கு இருக்கும்.
 சிலருக்கு செய்வினையாக மாறவும் வாய்ப்புண்டு.*
 லக்னாதிபதி 8-ல் மறைந்தவர்களுக்கு கண் திருஷ்டியால் விபத்து, அல்லது உயிர் பயம் இருந்து கொண்டே இருக்கும்.*
 லக்னத்திற்கு 2, 12-ல் மாந்தி, சனி, ராகு-கேதுக்கள் இருப்பின், அவர்களின் கண் பார்வைக்கு கெட்ட சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் அதிகம்.திருஷ்டி தோஷ விளைவுகள்கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில், தொடர்ந்து பிரச்சினைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், பொருள் இழப்பு, வரவுக்கு மீறிய செலவு இருந்து கொண்டே இருக்கும்.
ஒரு பிரச்சினை தீருவதற்குள், அடுத்த பிரச்சினை கதவைத் தட்டும். பெண்களுக்கு உடல் சோர்வு, மனச்சோர்வு, இல்லாத ஒன்றை கற்பனை செய்து பயப்படுதல், கணவன் -மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்சினைகள், சந்தேகங்கள்,
 உறவினர்களுடன் பகை, வெளியே சொல்ல முடியாத கஷ்டம், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கண்டறிய முடியாத கஷ்டம் இருக்கும். சுப நிகழ்வுகளில் தடை, மருத்துவச் செலவு, உணவை பார்த்தால் வெறுப்பு, சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, அடிக்கடி கொட்டாவி விடுவது, எதிர்மறை எண்ணங்கள் போன்றவை உண்டாகும்.
💫🔔தோஷ நிவர்த்திகண் திருஷ்டி நீங்குவதற்கு,
 🔯ஒற்றைப் படை எண்ணிக்கையில் கற்பூரங்களை தலையைச் சுற்றி வீட்டு வாசலில் ஏற்றலாம்.
🔯தேங்காயில் கற்பூரம் ஏற்றி தோஷம் இருப்பவர்களின் தலையை சுற்றி, ஊர் எல்லையில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் சிதறுகாய் உடைக்கலாம்.
🔯வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர, திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும்.
🔯குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.
🔯திருமணம், கிரகப்பிரவேசம், பிறந்த குழந்தையயும், தாயையும் வீட்டிற்கு அழைத்தல் போன்ற வைபவங்களில் கண் திருஷ்டியை குறைக்க ஆரத்தி எடுத்து திலகம் இட வேண்டும்.

🔯சுப நிகழ்வுகளின் போது குலை தள்ளிய வாழை மரத்தை வாசலில் கட்டுவார்கள்.அது திருஷ்டி தோஷம் வாழை மரத்தால் ஈர்த்துக் கொள்ளப்படும் என்பதால் தான்.
 🔯சுப நிகழ்வு முடிந்ததும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் நிற்க வைத்து பூசணிக்காய் சுற்றி, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத இடத்தில் உடைப்பதும் நல்ல பரிகாரம் தான்.
 🔯திருஷ்டி தோஷம் மிகுதியாக இருந்தால் மகா கணபதி, மகா சுதர்சன ஹோமம் செய்ய வேண்டும்.
🔯பிறந்த குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை, திருஷ்டி தோஷத்தால் உடல் நலக்குறை இருந்து கொண்டே இருக்கும்.
🔯கண்ணத்தில் திருஷ்டி பொட்டு வைப்பதுடன், கருப்பு கயிற்றில் நவக்கிரக ஸ்லோகம் ஜெபித்து 9 முடித்து போட்டு வலது காலில் கட்டிவிடுங்கள்.
🔯அதோடு கணபதி ஹோம மையை நெற்றியில் வைக்க நோய் தாக்கமே இருக்காது.
🔯வீடு- அலுவலக பரிகாரங்கள்வீடு, அலுவலகத்தின் மீது திருஷ்டி படாமல் இருக்க, பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி, கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம்.
 🔯மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிவப்பு மீன்களை வளர்க்கலாம்.
🔯காலை, மாலை நேரங்களில் வீடு, அலுவலகத்தில் விஷ்ணு சகஸ்ஹர நாமம், காயத்திரி மந்திரம், சாந்தி மந்திரம், திருக்கோளாற்று பதிக பாராயணம் ஒலிக்க செய்யலாம்.
🔯வீட்டு வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம்.
💫போட்டி, பொறாமையால் வியாபாரத்தில் தொய்வு, கடன் தொல்லை இருந்தால்
🔯செவ்வாய்க்கிழமை விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை செய்யுங்கள்.
 🔯குல தெய்வத்திற்கு நெய் தீபம் ஏற்றி, மல்லிகை பூவினால் அர்ச்சனை செய்ய வியாபாரம் விருத்தியாகும்.
🔯வியாபாரம், தொழில் நிறுவனங்களில் திருஷ்டி நீங்க வெள்ளிக்கிழமைகளில் ஒரு எலுமிச்சம் பழத்தை வெட்டி, ஒரு பகுதியில் குங்குமத்தையும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியையும் தடவி வைக்கலாம்.
🔯வளர்பிறை செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற் கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.
🔯முடக்கற்றான், பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள் மற்றும் ஜவ்வாது ஆகியவைகளை சேர்த்து அரைத்து அந்தப் பொடியை, பசு கோமியத்தில் கரைத்து வீட்டிலோ, வியாபார ஸ்தலத்திலோ தெளிக்க தீய சக்திகள் மற்றும் கண் திருஷ்டி நீங்கி செல்வ செழிப்பு பெறலாம்.

Saturday, 27 June 2020

சகலவித நவகிரக தோஷங்களுக்கும்

சகலவித நவகிரக தோஷங்களுக்கும் 

மந்திரம் :- ஓம் க்லீம் ஸ்ரீம் ஐம் றீம் ஹ்ரீம் ஹ்ரெளம் ஹீம் நவக்ரஹ தேவதாய சர்வ கிரஹ தோஷாம் நிவாரய நிவாரய ஸ்வாஹா"

வெள்ளித் தகட்டில் எந்திரம் எழுதி சர்வதேவதா வசிய மை தடவி சுத்த பூஜை செய்து தூப தெய்வத்துடன் மேற்கண்ட மந்திரத்தை 108 உரு ஜெபித்து தாயத்தில் போட்டு அணிய அனைத்து நவக்கிரக தோஷங்களும் சாந்தமாகி விடும் 
நவ கிரகத்துக்கு  ஒன்பது தீபம் போட சொல்லவும் நேரம் சரியில்லை புலம்புவார் செய்து பலனடையலாம் 

நன்றி 
துலாம் வெற்றிவேல் ஆம்பூர்  7010053596

Wednesday, 17 June 2020

நமது வீட்டில் தெய்வ சக்தியை நிலைநிறுத்த ஹோமம் பரிகார பூஜை முறை. பழங்காலத்து முறை



குடும்பத்தில் நிம்மதி இல்லையா
வருமானம் இல்லையா
தொழில் அமையவில்லையா
குடும்பத்தில் எப்பொழுதும் சண்டை சச்சரவு குழப்பத்தில் உள்ளீர்களா
லட்சுமி கடாட்சம் இல்லையா
கடவுள் அனுக்கிரகம் இல்லையா
குலதெய்வம் உங்கள் இல்லத்தில் இல்லையா
இவை அனைத்திற்கும் ஒரு பூஜை முறை உள்ளது ஒரு நல்ல புரோகிதர் வைத்துக்கொண்டு இந்த பூஜையை உங்கள் இல்லத்தில் செய்து அனைவரும் நலம் பெற வேண்டுகிறோம்
பூஜை முறை
மூன்று கழுதையின் கோமியத்தை பிடித்து வீட்டிற்கு வெளியே ஏதாவது ஒரு இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்

பிறகு ஏழு பசு கன்று குட்டியின் கோமியத்தை சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
பிறகு ஏழு கிணற்று நீர் சேகரித்து ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்
அத்துடன் மூன்று நதிகளின் நீர் 3 குளத்தின் நீர் மூன்று ஏரியின் நீர்
இவை அனைத்தும் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும் பிறகு
அங்கு தரமான நவரத்தினக் கற்கள் ஒன்பது கற்கள் வாங்கி வைத்துக் கொள்ளவும் பிறகு
108 தாமரை மலர்கள் கிடைத்தால் வாங்கிக் கொள்ளவும் இல்லையென்றால் இருபத்தி ஒரு மலர்கள் அதுவும் கிடைக்கவில்லை என்றால் ஏழு மலர்கள் கட்டாயம் வாங்க வேண்டும் மல்லிகை பூ அர்ச்சனை வாங்கிக் கொள்ளவும்

வியாழன் இரவு கழுதையின் கோமியத்தை உங்கள் வீட்டின் எல்லா இடங்களிலும் தெளிக்க வேண்டும் பிறகு வீட்டை பூட்டிவிட்டு உங்களுடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீட்டில் வந்து இரவு தங்கிக் கொள்ளவும்
மறுநாள் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதாவது 4 மணி அளவில் எழுந்து வீட்டை நன்கு கழுவி விட வேண்டும்
பிறகு உங்கள் வீட்டில் ஹாலில் ஒரு அடி விட்டத்தில் ஒரு வட்டம் வரைந்து அங்கு ஒரு அடி ஆழம் அளவிற்கு ஒரு பள்ளம் எடுக்கவும் அந்த பள்ளத்தை சுற்றி அறுகோண வடிவில் ஒரு ஹோம குண்டம் தயார் செய்யவும்
நவகிரகங்களுக்கு உண்டான நவ தானியங்களும் நவபாஷாணங்கள் மற்றும் நவகிரக சமித்துக்கள் வாங்கி வைத்துக் கொள்ளவும்

ஒரு புதிய சில்வர் கூடத்தில் நீங்கள் சேகரித்து வைத்த அனைத்து நீர்களும் அதில் சேர்க்கவும் அத்துடன் வாசனை பொடிகளும் 8 எலுமிச்சை பழங்களும் சேர்த்தது கலசம் தயார் செய்யவும் பிறகு உங்கள் பூஜை அறையில் ஒன்பது கிரகங்கள் இருக்கும் இடங்களில் ஒவ்வொரு இடத்திலும் அந்தந்த கிரகத்திற்கு உண்டான கற்களை தேன்மெழுகு விட்டு மூடவும் பிறகு தயார் செய்த கலசத்தை பூஜை அறையில் வைத்து கலசத்தில் இருந்து நூல் மூலம் நீங்கள் தயார் செய்த ஹோம குண்டத்தை சுற்றவும்
பிறகு வீட்டில் கணபதி பூஜை அடுத்து லட்சுமி பூஜை அடுத்து நவக்கிரக பூஜை ஹோமம் வளர்த்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்
அந்த கலசத்தில் உள்ள நீரை மூன்று நாட்களுக்கு பிறகு எடுத்து வீட்டில் உள்ள அனைவரும் சிறிது சிறிது பருகி மீதமுள்ள நீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்

ஹோம குண்டம் வளர்த இடத்தில் அந்த சாம்பலை அதே குழியில் போட்டு மூடிவிடவேண்டும்
ஓமம் வளர்த்து முடித்த அந்த நாளில் இருந்து தொடர்ந்து 21 நாட்கள் வீட்டில் விளக்கு அணையாமல் எரிய விட வேண்டும்
கலசத்தில் உள்ள 8 எலுமிச்சை கனிகளும் வீட்டின் எட்டு திசையிலும் புதைக்க வேண்டும் இந்த இடங்களில் மலர்கள் தூவி ஒரு மண் குடுவையில் எலுமிச்சம் கனியை வைத்து அந்த திசைக்கு உண்டான தேவதையை வணங்கி எலுமிச்சை கனியை புதைக்க வேண்டும்

இந்த 21 நாட்களும் உடலுறவு மற்றும் தீட்டாகி விடுதல் மற்றும் இறுதி அஞ்சலிக்கு செல்லுதல் போன்றவை கூடாது 21 நாட்களும் கட்டுப்பாடுடன் கடவுளை வணங்கி வரவேண்டும்

இந்தப் பூஜையை போல் செய்தாள் நீங்கள் உங்கள் இல்லத்தில் தெய்வங்கள் குடிகொள்ளும் மேலும் அந்த தெய்வம் உங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாதவாறு நவகிரக கட்டுவோம் வீட்டை விட்டு வெளியே செல்லாதவாறு அஷ்டதிக் கட்டும் போடப்பட்டிருக்கும் அதனால் உங்கள் இல்லத்திற்கு எப்பொழுதும் எந்த ஒரு கண் திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் போன்றவை அணுகாது அப்படி அதை மீறி யாராவது ஏவல் செய்தால் அது மீண்டும் திரும்பி செய்த வினையை தாக்கும் இந்த பூஜை முறை பழங்கால பாரம்பரிய பூஜை முறையாகும்
இந்த பூஜை செய்பவர்கள் யாருக்காவது சந்தேகங்கள் இருந்தால் என்னை தொடர்புகொள்ள நன்றி சிவாயநம

புது கணக்கு போட

திங்கள் புதன் வியாழன் ஆகிய நாட்கள் நல்லது
துவிதியை திருதியை பஞ்சமி சஷ்டி சப்தமி தசமி ஏகாதசி துவாதசி திரயோதசி ஆகிய திதிகள் நல்லது
அஸ்வினி ரோகிணி மிருகசீர்ஷம் திருவாதிரை புனர்பூசம் பூசம் உத்திரம் ஆகிய நட்சத்திரங்கள் சுபம்
ரிஷபம் மிதுனம் சிம்மம் துலாம் மீனம் ஆகிய லக்னம் ஏற்றது

மேற்சொன்ன கிழமை திதி நட்சத்திரம் லக்னம் இவை நான்கும் ஒரே நாளில் வந்தால் அவை மிக மிக உத்தமம்

பூணூல் அணிய

யஜூர் வேதத்தை பின்பற்றுவோர் ஆவணியில் பௌர்ணமியிலும்
ரிக் வேதத்தை பின்பற்றுவோர் விநாயகர் சதுர்த்தியும் அஸ்தம் நட்சத்திரத்தில் பூணூல் அணிய லாம்.