AimShreemHreem - Secret of Successful Peopl

AimShreemHreem - Secret of Successful Peopl
Click Here

Saturday 10 September 2016

Health is Wealth

உங்களில் யாருக்காவது ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அதிகமானால், அது மகிழ்ச்சிக்குரிய விஷயமே தவிர, கவலைக்குரிய விஷயமல்ல!
.
ரத்த அழுத்தம்
உயர் ரத்த அழுத்தம் அல்லது ரத்தக் கொதிப்பு என்பது ஒரு நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மையில் அது ஒரு நோயோ, அஞ்சுவதற்கு உரிய விஷயமோ அல்ல. எந்த ஒரு நோயையும் கட்டுப்படுத்தவோ அல்லது குணப்படுத்தவோ வேண்டுமென்றால் நம் ரத்த அழுத்தம் அதிகமாக வேண்டும்! என்ன ஆச்சரியமாக உள்ளதா? இப்படி அநேக ஆச்சரியங்களை நம் உடல் நமக்காக வைத்துள்ளது!
ரத்த அழுத்தம் எப்படி நோயை குணப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும்முன் உயர் ரத்த அழுத்தம் எப்படி உண்டாகிறது என்று பார்க்க வேண்டும். ரத்த அழுத்தம் உயர வேண்டுமானால் நமது ரத்த நாளங்கள் கொஞ்சம் சுருங்க வேண்டும். அந்தச் சூழ்நிலையில் கொஞ்சம் அதிகமான அழுத்தம் கொடுக்கப்பட்டால்தான் ரத்த நாளங்கள் வழியாக ரத்தம் முன்னேறிச் செல்ல முடியும்.
ரத்த நாளங்கள் சுருங்குவதற்குக் காரணம் அட்ரீனலின் சுரப்புதான்! அட்ரீனலின் சுரக்கும்போது ரத்த நாளங்கள் சுருங்குகின்றன. அவற்றினூடாக ரத்தம் செல்லும்போது அழுத்தம் அதிகமாகிறது. இதயத்தின் இயக்கத்தையும் அட்ரீனலின் துரிதப்படுத்துகிறது. ஒன்றை வைத்து இன்னொன்றைப் புரிந்துகொள்ள முடியும். பி.பி. அதிகமாகிவிட்டது என்றால் அட்ரீனலின் சுரந்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம். அட்ரீனல் சுரக்காமல் எந்த ஒரு நோயும் குணமாகாது, கட்டுப்பாட்டிலும் இருக்காது என்கிறார் ஃபசுலுர் ரஹ்மான். அதனால்தான் உயர் ரத்த அழுத்தம் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றும் அவர் சொல்கிறார்.
.
ஏதாவது ஒரு பிரச்னைக்காக நாம் டாக்டரிடம் போகும்போது என்ன செய்வார்?
ஒரு பிபி செக்-அப் செய்வார். நம் கையில் ஒரு துண்டைச் சுற்றி, ஒரு சின்ன பலூனை வைத்து புஸ்க் புஸ்க் என்று அழுத்தி எண்கள் போடப்பட்டுள்ள செங்குத்தான கண்ணாடிக்குள்ளே வெள்ளி நிறத்தில் ஏதோ ஏறுவதையும் இறங்குவதையும் பார்த்துவிட்டு ரத்த அழுத்தம் நமக்கு மிகவும் அதிகமாகிவிட்டது, உடனே மாத்திரைகள் சாப்பிட்டு அதைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று கூறுவார், அல்லவா? அதோடு சுகர் இருக்கிறதா என்று பார்க்க GTT (Glucose Tolerance Test) ஒன்றும் எடுக்கச் சொல்வார். நிச்சயமாக சுகர் இருக்கும். அத்துடன் நாம் பி.பி. மற்றும் சுகர் நோயாளியாக வெளியில் வருவோம்!
உயர் ரத்த அழுத்தமும் நீரிழிவு நோயும் இரட்டையர்கள் மாதிரி. சேர்ந்தே இருப்பார்கள். அல்லது உருவாக்கப்படுவார்கள். அவர்கள் இருவருக்கும் பின்னால் அட்ரீனலின் சுரப்பு நிகழ்ந்துகொண்டிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தத்துக்காக எப்பொழுது மாத்திரைகளைச் சாப்பிட ஆரம்பிக்கிறீர்களோ, அப்பொழுதே உங்கள் உடல்நிலை மொத்தமும் குட்டிச்சுவராகிவிடும் என்று மிகச்சரியாக எச்சரிக்கின்றனர் மனசாட்சி உள்ள சில அலோபதி டாக்டர்கள்.
.
உண்மையில், உயர் ரத்த அழுத்தம் இருக்கும்போது என்ன நடக்கிறது?
ரத்தத்தில் கலந்துள்ள ஊட்டச் சத்துகளும் மற்ற சக்திகளும் உடல் உறுப்புகளுக்குள்ளும், உயிரணுக்களுக்குள்ளும் அதிகமாக ஊடுறுவுகின்றன. அதன் காரணமாக, உடலுறுப்புகள் தத்தம் பலவீனங்கள் நீங்கி 'புத்துணர்வும், புத்துயிரும்' பெறுகின்றன. அட்ரீனலின் சுரந்ததால், கல்லீரலில் இருந்து வெளியேறி உடலின் பகுதிகளுக்குள் பரவிய செறிவூட்டப்பட்ட தரம் வாய்ந்த க்ளைக்கோஜன்தான் இதற்கான முக்கியக் காரணமாகும். ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் க்ளைக்கோஜனின் அளவும் அதிகமாகவே இருக்கும். அதைப் பரிசோதித்துவிட்டுத்தான் நீரிழிவு நோய்க்கான சிரிப்பு மருத்துவர்கள், ஸாரி, சிறப்பு மருத்துவர்கள், 'உங்களுக்கு டயாபடீஸ் வந்துவிட்டது' என்று கண்டுபிடிக்கிறார்கள்! புரிகிறதா?
ஆனால் அந்தச் சிறப்பு மருத்துவர்களுக்குப் புரியாத ஒரு விஷயம் ஒன்று உண்டு. பரிசோதிக்கப்படும் பல (வருங்கால) நோயாளிகளுக்கு ரத்தத்தில் மட்டும்தான் க்ளுக்கோஸ் அதிகமாக இருக்கும். ஆனால், சிறுநீரில் சர்க்கரையே இருக்காது! அது ஏன் என்று அம்மருத்துவர்களுக்குப் புரியாது!
ரத்தத்தில் தரம் குறைந்த க்ளுக்கோஸ் சுற்றிக்கொண்டிருந்தால்தான் சிறுநீரகங்கள் அதை வெளியேற்றும். ஏனெனில், அது ஒன்றுக்கும் உதவாத கழிவாகும். ஆனால், இப்போது அட்ரீனலின் சுரப்பால் கல்லீரலை விட்டு வெளியில் வந்த க்ளைக்கோஜன், செறிவூட்டப்பட்ட, மிகுந்த தரம் வாய்ந்த க்ளுக்கோஸாகும். அது நோய்த்தீர்க்கவல்ல சக்தியுமாகும். எனவே, அதை எந்தக் காரணம் கொண்டும் சிறுநீரகங்கள் வெளியேற்றாது. அதனால் சிறுநீரில் சர்க்கரை இருக்காது. ரத்தத்தில்தான் இருக்கும். ஆனால், அந்த க்ளைக்கோஜனைப் பற்றி எதுவுமே புரிந்துகொள்ளாமல், அதனையும் ஒருவித சர்க்கரை நோய் என்று அலோபதி கூறுகிறது!
அந்த நிலையில், ஒருவருக்கு டயாபடீஸுக்கான அலோபதி வைத்தியம் செய்தால் என்ன ஆகும் தெரியுமா? கணையத்திலிருந்து இன்சுலின் சுரக்கவைக்கப்படும்! அதாவது, எப்போது இன்சுலின் சுரக்கக்கூடாதோ அப்போது அது வலுக்கட்டாயமாக டயானில் (Dianil) போன்ற மாத்திரைகள் கொடுக்கப்படுவதன் மூலம் சுரக்கவைக்கப்படுகிறது! நம் உடல் மீது ஆங்கில மருத்துவம் நிகழ்த்தும் வன்முறை என்றுகூட இதைச் சொல்லலாம். அப்படிச் செய்யும்போது, அட்ரீனலின் சுரப்பது தடுக்கப்பட்டுவிடும். அட்ரீனலின் சுரக்கவில்லை என்ற சூழ்நிலையில் ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் க்ளைக்கோஜன் மீண்டும் கல்லீரலுக்குள் செலுத்தப்படும்! இப்போது சர்க்கரையை அளந்துபார்த்தால் குறைந்திருக்கும்! அதுதான் கல்லீரலுக்குள் மீண்டும் போய்விட்டதே! ஆஹா, சர்க்கரையை கட்டுப்படுத்திவிட்டோம் என்று அலோபதி மருத்துவர்கள் மார்தட்டிக் கொள்வார்கள்!
.
இதனால் என்ன விளைவுகள் ஏற்படும்?
வயிறு, குடல்களிலெல்லாம் ஏற்பட்டிருந்த பிரச்னையை, அஜீரணத்தை, பலவீனத்தையெல்லாம் சரிசெய்துகொண்டிருந்த க்ளைகோஜனை டயானில் மற்றும் அதையொத்த மாத்திரைகள் என்ற வன்முறையின் மூலம் மீண்டும் கல்லீரலுக்குள் அனுப்பிவிட்டதால், வயிறு முதல் குடல்கள் வரை நோய்கள் அதிகரிக்கும். டயானில் சாப்பிட்ட சில நாட்களுக்குள்ளாக வயிற்றுத் தொந்தரவுகளும், குடல் தொந்தரவுகளும் அதிகமாகும். அஜீரணமும் வாயுத்தொல்லையும் மிகவும் கஷ்டத்தைக் கொடுக்கும். இதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை அனுபவித்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
டயானில் போன்ற மாத்திரைகள் க்ளைக்கோஜனை மீண்டும் கல்லீரலுக்குள் அனுப்பிவிடுவதால்,
# ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்துபோய் மயக்கம் வரும்.
# கைகால்கள் வெடவெடத்துப் போகும்.
# கண்கள் இருளும்.
# திடீர் மரணம்கூட ஏற்பட வாய்ப்பு உண்டு.
மருந்து கொடுக்கப்பட்டதால், மயக்கம் அல்லது மரணம் உண்டானதைத் தெரிந்துகொள்ளாமல், நீரிழிவு நோயினால்தான் அப்படி ஆனது என்று கூறி முடித்துவிடுவார்கள்!
பாக்கெட்டில் எப்போதும் சீனியை அல்லது தக்காளியை வைத்துக்கொள்ளுங்கள்; மயக்கம் வருகிற மாதிரி இருந்தால் உடனே சர்க்கரையைச் சாப்பிடுங்கள், அல்லது இரண்டு தக்காளிகளைச் சாப்பிடுங்கள். அப்போதுதான் ரத்தத்தில் சர்க்கரை கூடும், மயக்கமும் போய்விடும் என்றெல்லாம் சொல்வார்கள்.
ஆங்கில மருத்துவம் சொல்வதுபோல, அவசர காலத்தில் மயங்கி விழுவதிலிருந்தும் மரணம் ஏற்படுவதிலிருந்தும் கொஞ்சம் சர்க்கரையோ அல்லது தக்காளியோ நம்மைக் காப்பாற்றும் என்றால், அப்படிப்பட்ட ஆபத்பாந்தவர்களாக அவை இருக்கும்பட்சம், அவை ஒவ்வொன்றும் உயிர் காக்கும் பொருள் என்பதுதானே நிரூபணமாகிறது?! அவசர காலத்தில் நம்மைக் காப்பாற்றும் ஒரு பொருள் எப்படி ஆபத்தானதாக இருக்க முடியும்? ஆங்கில மருத்துவத்தின் முரண்பாடு புரிகிறதா?
.
மயக்கம் வருவதுபோல் இருக்கும்போது, நாம் சர்க்கரையை சாப்பிட்டால் என்ன நடக்கிறது தெரியுமா?
வாயிலிருந்து வயிற்றிலிருந்தும், உமிழ்நீரின் உதவியுடனும், வயிற்றின் இயக்கத்தின் காரணமாகவும், இன்ஸ்டன்ட் காஃபி மாதிரி உடனடியாக க்ளுக்கோஸ் பிரிக்கப்பட்டு ரத்தத்துடன் கலக்கிறது. அப்போது வயிற்றில் அதிகமான வெப்பம் உண்டாகிறது. ஏன்? ஏனெனில், க்ளுக்கோஸ் என்பது ஒரு எரிசக்தி. ஆனால், அந்த வெப்பம் வயிற்றை சுட்டெரித்துவிடாமல் இருக்க, உடனே அட்ரீனலின் அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கிறது. அட்ரீனலின் சுரந்தால் கல்லீரலில் இருந்து க்ளைக்கோஜன் வெளியேற்றப்படும். க்ளைக்கோஜன் என்ற அந்தச் சக்தி மிகுந்த க்ளுக்கோஸின் அளவு ரத்த ஓட்டத்தில் அதிகமாகி உடல் உறுப்புகளுக்கு, முக்கியமாக வயிற்றுக்கு, தேவையான ஊட்டச்சக்தியை அளிக்கிறது. டயாபடீஸுக்கான அலோபதி மருந்துகளால் ஏற்படும் சர்க்கரைக் குறைவையும், அது ஏற்படுத்திய மயக்கம், கை கால் நடுக்கம் இத்யாதிகளையும் க்ளைக்கோஜன் சீர்படுத்துகிறது!
ஆனால், இதற்கெல்லாம் காரணம், அவசரகாலத்தில் நாம் உட்கொண்ட சர்க்கரை அல்ல! அது உள்ளே வந்ததால் ஏற்பட்ட வெப்பத்திலிருந்து வயிற்றையும் மற்ற உறுப்புகளையும் காப்பாற்ற க்ளைக்கோஜனை 'ரிலீஸ்' செய்ய அட்ரீனலின் சுரந்ததால் ஏற்பட்ட விளைவாகும்!
ஆக, அவசர கால மயக்கத்துக்காக நாம் உட்கொண்ட சர்க்கரையால் நமக்கு நன்மையா தீமையா என்றால், பெரும் தீமைதான். அதில் பெருமளவு கழிவாக ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும். கல்லீரல் அதை ஜீரணிக்கவும் செய்யாது; அதில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்காது. எனவே, அது வெறும் கழிவாக சிறுநீரகங்களை அடைகிறது. அதன் காரணமாக, சிறுநீரகங்கள் முதன்முறையாக நச்சுத்தன்மையால் பாதிப்புக்கு உள்ளாகின்றன! ஓர் ஐந்தாண்டுகளுக்குள் இயங்க முடியாத சூழ்நிலைக்கும் அவை தள்ளப்படும்!
பின்னர் சிறுநீரகங்களை சரிசெய்ய டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்! டயாலிசிஸ் செய்வதால் யாருக்கும் பிரச்னை தீர்வதில்லை. மாறாக, சில காலம் கழித்து 'கிட்னி ட்ரான்ஸ்ப்ளான்ட்' அறுவை சிகிச்சை மூலம் மாற்று சிறுநீரகங்களைப் பொருத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால், இன்னொருவருடைய உடல் உறுப்பை நம் உடல் என்றுமே ஏற்றுக்கொள்ளாது. ரத்தம் உட்பட. மனித உடல் கால்பந்து விளையாட்டு மைதானமல்ல, ஒருவருக்கு அடிபட்டால் அவருக்குப் பதிலான இன்னொருவரை அனுப்ப. இன்னொருவரின் உறுப்பு நம் உடலுக்குப் பாதகமான உறுப்பாகவே என்றும் இருக்கும். அதை எதிர்த்து நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்! அந்த எதிர்ப்பு சக்தியைப் பாழாக்கும் மருந்துகளை உட்கொண்டால், அது எய்ட்ஸில் போய் முடியும்!
.
சராசரிக் கணக்கு
அளவோடு இருந்தால் அது அமிர்தம். அளவு கூடினால் அல்லது குறைந்தால் அது ஆபத்து என்று ஆங்கில மருத்துவம் சொல்லுகிறதா? அப்படியானால், எல்லா மனிதர்களுக்கும் ஒரே அளவில்தான் சர்க்கரை இருக்க வேண்டுமா? இந்தக் கருத்து சரியா? ஆங்கில மருத்துவ உலகம் பிழைத்துக் கொழுத்துக்கொண்டிருப்பதன் முக்கியக் காரணங்களில் ஒன்று, இந்த சராசரி அளவுக் கணக்கு.
சராசரியாக ஒரு மனிதர் இந்த அளவு சாப்பிட வேண்டும், அவருடைய வயது இப்படி இருக்குமானால், அவருடைய எடை அப்படி இருக்க வேண்டும் (BMI), மனிதர்களுடைய சராசரி உயரம் இவ்வளவு, சராசரி ரத்த அழுத்தம் இவ்வளவு, சராசரி கொழுப்பு இவ்வளவு, இத்யாதி இத்யாதி என சராசரியான ஒரு மனிதனை நிம்மதியாக இருக்கவிடாமல் இந்த சராசரிகள் கொல்லுகின்றன. சராசரிக்கும் அதிகமாக இருந்தால் குறைக்க வேண்டுமாம், குறைவாக இருந்தால் அதிகமாக்க வேண்டுமாம்! இப்படிப்போகிறது கணக்கு.
ஆங்கில மருத்துவத்தின் சராசரிக் கணக்கை வைத்து டாக்டர் ஹெக்டே ஒரு கேள்வி கேட்கிறார். மனிதர்களின் சராசரி உயரம் 5 அடி 5 அங்குலம் என்று வைத்துக்கொண்டால் அமிதாப் பச்சனையும் ஜெயா பச்சனையும் என்ன செய்வது? அமிதாப்பின் காலைக் கொஞ்சம் வெட்டி ஜெயாவுக்குப் பொருத்த வேண்டுமா என்று கேட்கிறார்! டயாபடீஸ் தொடர்பான சராசரிக் கணக்கும் இப்படிப்பட்டதுதான்.
அலோபதியின் சராசரிக் கணக்கு அடிப்படையிலேயே தவறானது. மனித உடலின் உறுப்புகளின் அளவை இறந்த உடல்களை அறுத்துப் பார்த்துதான் அலோபதி புரிந்துகொள்கிறது. உதாரணமாக, ஒரு குழந்தைப் பிணத்தின் வயிற்றை எடுத்துப் பார்த்து, உலகில் உள்ள குழந்தைகளின் வயிறின் அளவு சராசரியாக இவ்வளவுதான், எனவே இந்த அளவுதான் உணவு கொடுக்கப்பட வேண்டும், இதற்குமேல் கொடுத்தால் நோய்கள் ஏற்படும் அபாயம் உண்டு என்றெல்லாம் கூறுகிறது. ஆனால் எல்லாக் குழந்தைகளின் வயிறையும் இப்படிப் பார்த்து அளவிட முடியுமா என்ன?
ஜான்சன் பேபி குழந்தைகளின் வயிறும் எதியோப்பியக் குழந்தைகளின் வயிறும் ஒரே மாதிரியாகவா இருக்கும்? வயிறு நிறைய உண்ட பிறகும், அம்மா ஆசையாக ஒரு இட்லி கொண்டுவந்து 'சாப்டுடா கண்ணு' என்று கொஞ்சி அன்பாக வைத்தால், உடனே வயிறு கொஞ்சம் 'அட்ஜஸ்ட்' பண்ணி தளர்ச்சியடைந்து இடம் கொடுக்கிறது என்கிறது விஞ்ஞானம்!
எனவே, சராசரியாக ஒருவருக்கு 'சுகர் லெவல்' இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்ற ஆங்கில மருத்துவத்தின் நிர்ணயம் கேலிக்கூத்தானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எந்த நேரத்தில் எவ்வளவு சுகர் இருக்க வேண்டும் என்பதை உடல் முடிவு செய்துகொள்ளட்டும். அதன் உரிமையிலும் கடமையிலும் நாம் தலையிடுவதனால்தான் எல்லாப் பிரச்னைகளும் வருகின்றன!
டயாபடீஸ் என்ற நீரிழிவு நோய்க்காக ஆங்கில மருந்துகளை எடுத்துக்கொண்டதுதான் எல்லாக் குழப்பங்களுக்கும் காரணம். முடிவாக டயாபடீஸ் பற்றி சில முக்கியமான விஷயங்களை நினைவுபடுத்திக்கொள்வோம் –
# டயாபடீஸ் என்று ஒரு நோயே கிடையாது.
# அது ஆங்கில மருத்துவத்தின் கண்டுபிடிப்பு. (வியாபார நோக்கில் செயற்கையாக உருவாக்கப்பட்டது.)
# எனவே அதற்கு எந்த மருந்தும் கிடையாது.
# ஆங்கில மருந்துகளை நீரிழிவுக்காக உட்கொள்வதால், உடல் முழுக்க ஒவ்வொரு முக்கிய உறுப்பாக சீரழிந்து கடைசியில் மரணம் ஏற்படும்.
# இன்சுலின் கிடைக்காத க்ளுக்கோஸ் என்ற கழிவை சிறுநீரகம் வெளியேற்றும். உடலின் இந்த கழிவு வெளியேற்றம் நோயாகப் பார்க்கப்படுகிறது.
# இன்சுலின் சரியாகக் கிடைக்க முறையான உணவுப்பழக்கம் வேண்டும்.
# பழங்கள் சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பும், சாப்பிட்ட பின்பு அரை மணி நேரத்துக்கும் தண்ணீர் குடிக்கக்கூடாது.
# கடைகளில் பழச்சாறு வாங்கிக் குடிப்பதைத் தவிர்க்கலாம். ஏனெனில், அதில் தண்ணீர், பால் போன்ற சமாச்சாரங்கள் கலக்கப்படுகின்றன.
# பசிக்கும்போது மட்டும் சாப்பிட வேண்டும்.
# சாப்பிடும்போது, கவனம் சாப்பாட்டிலும் சாப்பிடுவதிலும் மட்டுமே இருக்க வேண்டும்.
# தாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் குடிக்க வேண்டும்.
# முறையான தூக்கமும் சரியான உழைப்பும் ஓய்வும் வேண்டும்.
உடலே உடலைச் சரிசெய்துகொள்ளும். இப்படி சரியாகவும் முறையாகவும் வாழ ஆரம்பித்தால், இனிப்பைக் கண்டு யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. திருட்டுத்தனமாக லட்டையோ மைசூர்பாக்கையோ விழுங்க வேண்டியதில்லை. எல்லோரும் பார்க்கும்போதே, உரிமையாகவும் சந்தோஷமாகவும் எடுத்து, ரசித்து, ருசித்து சாப்பிடலாம். உச்சி மீது வானிடிந்து வீழ்ந்துவிட்டபோதிலும் அச்சமென்பதில்லையே என்று பாடலாம். ஸ்வீட் எடுத்து உண்மையிலேயே கொண்டாடலாம்!
.
உணவே மருந்து; வாழ்க்கைமுறையே தீர்வு!
ஆரோக்கியமாக வாழ விரும்பினால் மருத்துவத்தை தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியத்தை தேடுங்கள். நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.
சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும். உதாரணமாக நம் தவறான வாழ்க்கைமுறையினால் ஏற்படும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற தொந்தரவுகளுக்கு மருத்துவ சிகிச்சையால் எவ்வாறு நிரந்தர தீர்வு அளிக்க முடியும். ஒரு மாதத்திற்கான உணவை ஒரேநாளில் உண்பது எவ்வாறு சாதியப்ப்படும்? இதை மக்களுக்கு புரியவைத்து மருந்துக்களின்றி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.
நீங்கள் எதை தேடுகிறீர்களோ அதுவே கிடைக்கும். ஆரோக்கியத்தை தேடினால் நிச்சயம் ஆரோக்கியம் கிடைக்கும். மருந்துக்களையோ மருத்துவரையோ தேடுவதற்கு பதில் வியாதிக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்வதே சிறப்பானதாகும்.
நல்லதை சொல்ல வேண்டியது எனது கடமை. அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் உரிமை.
நன்றி

No comments:

Post a Comment